மம்தாவின் வேதனை மிகுந்த ஆட்சி!

மேற்கு வங்கத்தில் தனது தலைமை யிலான அரசாங்கம் 100 நாட்களில் பல சாத னை களை செய்துவிட்டதாக மம்தா பானர்ஜி தம் பட்டம் அடித்துக்கொள்கிறார். ஆனால் உண்மை என்ன? மம்தாவின் சாத னைகள் என்ன?

இடதுசாரி ஊழியர்கள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது கடுமை யான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட் டுள்ளன. தாக்குதல்களின் கொடூரம் குறித்து சில விவரங்கள்:

துப்பாக்கிச்சூடு: மனிதத் தன்மையற்ற செயல்

பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7மனித உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன. காவல்துறையினரின் இந்த அத்துமீறிய, அராஜகமான செயலை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் கண்டித்தாலும் தகும்.

தலித்துகளுக்கு எதிராக நீடிக்கும் ஒடுக்குமுறைகள்

* திருச்செந்தூர் தாலுகா நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித்துகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு-ஒன்றரை வயது, 3 வயது குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்.

பலவீனமாகும் 2ஜி வழக்கு- யாரைக் காப்பாற்ற?

நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(ஊஹழு).

மின்சாரக்கனவு: மாயையும் உண்மையும்

மின்சாரம் குறித்து பாரதப் பிரதமர் கவ லையாம்! ஆய்வு நடத்துவதற்காக மாநிலங் களின் மின்துறை அமைச்சர்களை அழைக் கப் போகிறாராம். நல்லது! இந்தியா முழுவதும் மின்வெட்டு! என்ன செய்வார்? பாவம். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாருக்கு விடவேண்டும் என்ற தேசிய மின்கொள்கையை வகுத்தவர் அல்லவா அந்தப் புண்ணியவான்!

மதுரை ஆலய நுழைவுப் போராட்டம் : ஒற்றுமையால் விளைந்த வெற்றி

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் இன்று எவர் வேண் டுமானாலும் சென்று வரலாம். ஆனால், ஒரு நூறு ஆண்டுக ளுக்குமுன் நிலைமை அப்படியா?

லோக்பால்: மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாடு

அறிமுகம்

கடந்த சில ஆண்டுகளாக அம்பல மாகிவரும் மோசடிகளால் ஊழல் என்பது மக்கள் மத்தியில் கவலைப்படும் விஷய மாக உருவாகியுள்ளது. கோடிக்கணக் கான மக்கள் கொடும் வறுமை, பட்டினி மற்றும் சமூகப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவற்றால் துயருற்றிருக் கும் நிலையில் உள்ள இந்தியா போன்ற நாட்டில், ஊழல் மூலம் மக்கள் பணத் தைக் கொள்ளையடிக்கும் குற்றம் மிகவும் கடுமையானதாகும். பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் வேளையில், ஊழல் மூலம் செல்வத்தைக் குவிப்பது சமச்சீரற்ற நிலையை விரிவுபடுத்துவ தோடு, சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப் பைத் தகர்க்கவும் செய்கிறது.

எல்ஐசி முகவர்களை ஒழித்துக்கட்ட முயலுவதா?

ஐஆர்டிஏ என்று அழைக்கப் படும் இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் 1.7.2011 முதல் நிலைத்த பராமரிப்பு (ஞநுசுளுஐளுகூநுசூஊலு ஞடீடுஐஊலு) என்ற பெயரில் முகவர்கள் மேல் புதிய தாக்குதலை துவக்கியுள்ளது.

தொடரும் எண்டோ சல்பான் துயரம்

“மழைவந்தால் பயமா இருக்கு சார். பையன் வீட்டுக்கு வெளியிலேயே இருப்பான். நின்ற இடத்திலேயே மலஜலம் கழித்து, மழை யில் நனைந்து, குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பான். நாங்கள் ஐந்து மணிக்கு வேலை முடித்து வந்து அவனை குளிப்பாட்டி வீட்டுக் குள் கொண்டு வருவோம். சில நேரங்களில் வலிப்பு வந்துவிடும். இப்படிப்பட்ட குழந்தை யை யாரும் சேர்த்துக் கொள்ளவும் மாட்டார் கள். அவனுக்கு 22 வயதாகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியல...” என்று கண்ணீர் விட்டு அழுதார் லட்சுமி என்ற தோட்டத் தொழி லாளி. கூடலூர் அருகில் நெலாக் கோட்டை ஊராட்சியில் ரக்வுட் என்ற ஒரு தனியார் தோட்டத்தில் பணியாற்றும் இந்த தம்பதி யரின் 3 குழந்தைகள், 2 ஆண் குழந்தை களுக்கும் மூளைவளர்ச்சி இல்லை.

பிரதமர் அறியாத பெரிய ஊழல்கள்!

“நாங்கள் ஊழலுக்கு எதிரிகள்; லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க அவ தாரமெடுத்திருப்பவர்கள்” என்று அடிக் கடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசுகிறார். ஏற்கெனவே போபர்ஸ் ஊழ லைப் பந்தாடியவர். தனது உறவினரான குவாத்ரோச்சியை ஊழல் வழக்கிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தவர்.

சமச்சீர் கல்வி என்றால் என்ன?

அரசுகள் தயாரித்த ஆய்வறிக்கை களை படித்தால் “தரமிகு கல்வி, தரமிகு போதனை முறைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஏழைகளும் தர மான கல்வியைப் பெற வாய்ப்பு களை ஏற் படுத்துவது, அதாவது இந்திய பெண் ணும், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி யினரும், ஆதிவாசியினரும், சிறுபான்மை யினரும் தேடுகல்வியைப் பெற சம வாய்ப் புகளை உருவாக்குவது,

அம்பானியின் ஆடம்பர வீடு!

       உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித்தந்துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மின்வெட்டு: அரசு செய்ய வேண்டியவை


தமிழகத்தை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலின் உறைவிடமாக செயல்பட்டது. இது தமிழக மின்சார வாரி யத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களின் ஊர் மாறுதல், பதவிஉயர்வு போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளில் இருந்து, மின்வாரிய செயல்பாட்டுக்கு அடிப்படை தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருள களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன.

“மினி’போபால் இனி வேண்டாம்!”

எண்டோசல்பான். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். தானிய பயிர்கள், காபி, பருத்தி, பழப்பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், முந்திரி, காய்கறிகள் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

திரிபோலியில் ஓர் அட்டூழியம்

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது.

தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்

தென்னகத்தின் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை (சி.எஸ்.பி) கட்டி வளர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வமயம் சி.எஸ்.பி. தென்னிந்தியாவில் எப்படி இருந்தது?

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள். 

அனாதை பிணமாக 49 கோடி பணம்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தல் பல்வேறு பாடங்களை தந்துள்ளது; தந்து கொண்டிருக்கிறது! அது ஏற்படுத்தியுள்ள இரண்டு அம்சங்களை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

கோடீஸ்வர முதலமைச்சர்கள்

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி

திரிணாமுல் காங்கிரஸ் நல்லாட்சி தருவோம் என வாய்கிழிய முழங்குகிறது. ஆனால் அதன் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அது தரப்போவது நல்லாட்சியா அல்லது பேயாட்சியா என சந்தேகம் எழும். இதோ சில வேட்பாளர்களின் பின்னணி:

கிராமங்களை கைகழுவும் ஆட்சியாளர்கள்

இந்தியா வாழ்வது கிராமங்களில் என் றார் மகாத்மா காந்தி. ஆனால் இன்றைய தினம் கிராமங்கள் எந்த நிலையில் இருக்கின் றன என்பதைப் பார்த்தால், இந்தியா வாழ் கிறதா அல்லது சாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

‘ஜன்லோக்பால்’- ஒரு மாற்றுக் கருத்து

42 ஆண்டுகளின் தயக்கத்துக்கும் தடு மாற்றத்துக்கும் பிறகு நாடு முழுவதிலும் பல் கிப்பெருகியுள்ள ஊழலை எதிர்கொள்வதற்கு ஒரு நிறுவனமய ஏற்பாடு கண்ணுக்குத் தெரி யத்தொடங்கியுள்ளது. இப்போது அரசு இயந் திரத்தை நகர வைத்துள்ளது அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற் றுள்ள போராட்டமே. இந்த போராட்டத்துக்கு பெரு நகரங்களில் மட்டும் தன்னெழுச்சி யான ஆதரவு இருந்துது. புதுதில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக் கிய ஐந்துநாட்களுக்குள் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மத்தியில் ஒரு லோக்பால் அமைப்பை நிறுவுவதற்கான குழுவை அமைத்தது. இது இந்திய அரசின் கடந்த கால அணுகுமுறையிலிருந்து வேறு பட்டதாக இருந்தது. ஆந்திரமாநிலம் அமைக் கப்படவேண்டும் என்பதற்காக காலவரை யற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு அக்கோரிக்கைக்காக தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது என் பதை நினைவுபடுத்திக்கொள்வோம். ராணு வப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐரம்ஷர்மிளா 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேதினி போற்றும் மேதினம்!

1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது. 

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும். 

கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுமுன்னணியின் ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை என்று தடா லடியாகப் பேசிவருகிறார் மம்தா பானர்ஜி, ஆமாம் ஆமாம் என்று உரத்த குரலில் முழங்குகிறார் சோனியாகாந்தி,ஏழை மக்களைப்பற்றி இடது முன்னணி கவ லைப்படவே இல்லை என்கிறார் “இளவர சர்” ராகுல் காந்தி. இவர்களின் இந்த பேச்சுக்கள் மேற்கு வங்க மக்களையே அவ மதிப்பதுபோல் இருக்கின்றன என்று சரியாகவே வருணித்துள்ளார் சோமநாத் சட்டர்ஜி, இடதுமுன்னணி எதையுமே செய்யவில்லை என்றால் மேற்கு வங்க மக்கள் ஏழுதேர்தல்களில் தொடர்ந்து அதற்கு வாக்களித்திருப்பார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். புளு கினாலும் பொருத்தமாகப் புளுக வேண் டும் என்பார்கள். கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பான முறையில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள மேற்கு வங்க இடது முன் னணியின் ஆட்சியை நேரில் கண்டுவரும் வங்கமக்கள், இந்த கோயபல்ஸ் பிரச்சா ரத்திற்கு பலியாகிவிடுவார்கள், என்று மம்தா கும்பல் நினைத்தால், அது பகற் கனவாகவே முடியும்.

திரிணாமுல் காங்கிரசின் பொய்களும் ... உண்மையும்


“நான் பொய்யே பேசுவதில்லை”- இது மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி யில் கூறியது! ஆனால் நடைமுறையில் பொய் பேசாமல் அவரால் இருக்க முடியாது என்பதே உண்மை. அவர் இடது முன்ன ணிக்கு எதிராகக் கூறிவரும் சில பொய்கள்:

ஸ்பெக்ட்ரம் ஊழல்: இன்று 2வது குற்றப்பத்திரிகை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) சார்பில் திங்களன்று 2-வது குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்

தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. 

இவர்கள் ஆளும் வரை ஏழைகள்…


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா அன்று. ஏழைகள் சிரிக்கவும் இல்லை. இறைவனைக் காணவும் இல்லை. இந்த வகையில் இறைவன் இல்லை என்ற அவர்களது நாத்திகக் கொள்கை நிரூபணமாயிற்று. இப்போது அண்ணாவின் தம்பியான கலைஞர், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். இவர்கள் இலவசங்களை வாரி வழங்குவதற்காகவே, அதன் மூலம் அரசியல் அறுவடை நடத்துவதற்காகவே, ஏழைகள் வாழ்வில் முன்னேறாமலும் அவர்கள் சிரித்து அதில் இறைவன் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலக்குழு ஏற்பாடு செய்த சாதிய ஒடுக்குமுறைகள்-தீண்டாமை ஒழிப்பு ஆய்வரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தோழர் பி.சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். “தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்” என்ற தலைப்பில் தோழர் பி.சம்பத் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:
இந்தியச் சாதியமைப்பு:
சாதியமைப்பு என்பது இந்தியாவில் மட்டுமே நிலவக்கூடிய தனித்தன்மை வாய்ந்த சமூக ஒடுக்குமுறையாகும். மனிதகுல வரலாற்றில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான் அடிமைச் சமுதாயம் பிற நாடுகளில் உருவெடுத்த போது, இந்தியாவில் ஆண்டான் அடிமைச்சமுதாயமே ஆரியர்கள் என்றும் தாசர்கள் என்றும் வருண சமுதாய வடிவில் உருவெடுத்தது. பிற்காலத்தில் விஞ்ஞானம் - தொழில்வளர்ச்சி ஏற்பட்டு ஏராளமான வேலைப்பிரிவினைகள் உருவெடுத்தபோது, சாதிக்குள் சாதியாகவும் உப சாதிகளாகவும், ஏராளமான சாதிகள் உருவெடுத்தன. அந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில் உருவெடுத்த சாதியமைப்பு இன்றளவும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு தடைச்சுவராக நீடித்து வருகிறது. எனவே, ஆதியிலிருந்து இன்று வரை சாதியும், வர்க்கமும் பின்னிப்பிணைந்தே உள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும். வர்க்க ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்தே உள்ளன. நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அனைத்து சுரண்டும் வர்க்கங்களும் சாதியமைப்பை பாதுகாத்தே வந்துள்ளன. இந்தியச் சாதியமைப்பு பற்றி பி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறிஞர்கள் ஏரளாமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதனை உரிய முறையில் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் வாழ்க்கையைக் கதையாக்கத் துப்பில்லை!


சரி.பார்த்து வைப்போமே என்று சீடன், முத்துக்கு முத்தாக, சிங்கம் புலி ஆகிய மூன்று படங்களைப் பார்த்தோம்.ஒண்ணும் தேறாது.சீடன் படம் குறித்து  கதாநாயகன் தனுஷ் கோபப்பட கதைப்படி அவர் கதாபாத்திரம் பாதிப்படத்துக்கு மேலேதான் வருகிறது. ஆகவே கதைப்படிதான் நான் படம் எடுக்க முடியும் என்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கதைக்காக வாதிட்டதாக பத்திரிகைகளில் படித்ததை நம்ம்ம்பி இப்படத்துக்குப் போனது நம்ம  தப்பு.பழனி முருகனே தனுஷாக வந்து தன் பக்தை அனன்யாவின் காதலை நிறைவேற்றி(கொட்டாவி வருது சார்) வைப்பதுதான் கதை. சாண்டோ சின்னப்பாத்தேவர் மறைந்தாலும் அவருடைய ஆவியாக சிலர் வந்து முருகன் புகழ் பாட படம் எடுத்து விடுகிறார்கள்.மக்களின் பக்தியைக் காசாக்கப் பலரும் பல விதங்களில் முயற்சிக்கிறார்கள். இவர்கள் படம் எடுத்துப்பார்த்திருக்கிறார்கள்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க சாமி!இது நந்தனம் என்கிற மலையாளப்படத்தின் தழுவலாம்.அது வேறயா?படம் முழுக்க பிழியப்பிழிய அழுதிருக்கும் அனன்யாவுக்கு அழுதகூலி அதிகமாகத் தரவேண்டும்.

வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்


தனியார் பள்ளிகளில் கோவிந்தராஜன் குழு பரிந்துரையை அமலாக்காவிடில், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு புறம் அரசு அறிவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தான்தோன்றித்தனமாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில பள்ளிகள் ஒருபடி மேலே சென்று அடுத்த கல்வியாண்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்வதும், ‘சொன்ன’ கட்டணத்தை செலுத்த மறுக்கும் பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூக தொண்டாக‘ மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு நிர்வாகம் துணைபோவதோடு, காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகாமலும் பார்த்துக் கொள்கின்றன.

கடமை தவறாத திருச்சி ஆர்.டி.ஓ

திருச்சி ஆர்டிஓ சங்கீதா (33). போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார். சொந்த ஊர், சேலம் மாவட்டம் மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில் துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000ம் ஆண்டு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி யில் பிஎஸ்எம்எஸ் படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டுகள் டாக்டராக பணி யாற்றியுள்ளார்.

சங்கராச்சாரியார் மீது அப்படியென்ன திடீர் பாசம்?

கைது நடவடிக்கையைக் கூட அரசிய லாக்க தெரிந்தவர் கலைஞர் கருணாநிதி. தான் கைது செய்யப்பட்டதை வைத்தே விடிய, விடிய தொலைக்காட்சிகளில் ஓட்டி வாக்குகளைப் பெற்ற அவரின் வித்தை ஊரறிந்த உண்மையாகும்.

ஆட்சிக்கு வந்த போது காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாக காவல்துறையின் அமைச்சராக இருக்கும் கருணாநிதியே சொன்னதைக் கேட்டு தமிழகமே திகைத்துப் போனது. கெட்டுப்போன ஈரலுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் செய்திருப்பார் என்று நினைத்தால், செய்யவில்லை என்ப தற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

“செப்படி வித்தைகள்” கண்டு ஆசிரியர்கள் ஏமாறமாட்டார்கள்!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘அரசியல் களம்’ சூடு பிடித்துள்ளது.

‘கருத்துக் கணிப்புகள்’ மக்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

‘செப்படி வித்தைகள்’ செய்யும் வேலையும் தொடங்கியுள்ளது.

சொன்னதைச் செய்தாரா கலைஞர்?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லும் பரவி, படர்ந்து, விரிந்து, வளர்ந்துள்ள தொழில் நூற்பாலைத் தொழில் பஞ்சாலை.

ஏறத்தாழ 2400க்கும் மேற்பட்ட பஞ்சா லைகள், ஒன்றேமுக்கால் கோடி கதிர்கள், இந்திய நூல் உற்பத்தியில் 40சதவிகிதத்துக் கும் மேல்! தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமாராக 5 லட்சம்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் இரு பத்து நான்கு மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி பணிபுரிகின்றனர்.

எல்லாமே நினைவுக்கு வருகிறது

“சினிமாவில் ஃபிளாஷ்பேக் வருவ தைப்போல, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியிலே என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.”

மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்கும்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, படுகொலை அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக மக்களால் பேசப் படுகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக கோபாவேசமாக எழுந்துள்ளது. அதற்கு நியாயமான பதில் கூற முடியாமல் ஏப்ரல் 4ம் தேதி முரசொலியில் கலைஞரே கேள்வி எழுப்பி, பதில் கூறும் பகுதியில் விலைவாசி உயர்வு பற்றி விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.

கலைஞர் சொன்னதும்... சோனியாகாந்தி சொல்லாததும்

தீவுகளாக சிதறிக்கிடக்கும் திமுக கூட்டணிக்கட்சிகள் சென்னை தீவுத்திட லில் ஒரே மேடையில் திரண்டு பிரச்சாரம் செய்துள்ளன. இருந்தாலும் காங்கிரசில் உள்ள கோஷ்டிகள் ஒன்றாகச் சேரவில்லை. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் சோனியா காந்தி பங்கேற்ற அந்தக்கூட்டத் தை புறக்கணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வரவேற்புக்குச் சென்ற ஈவிகேஎஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலுவை மிரட் டித்தான் பாஸ் பெற்று விமான நிலையத்திற் குள் சென்றுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் சோனியா காந்தியே நேரில் வந்து காங்கிரசின் அனைத்து கோஷ்டிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை நடத்தலாம். பாதுகாப்புக்கு ராணுவத்திடம் முன்கூட்டியே சொல்லிவைப்பது நல்லது.

மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்

அன்புமிக்க மாண்புமிகு உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர், மன்னிக்கவும்... உங்களுக்கு இப்படியெல்லாம் அழைத்தால் பிடிக்காதல்லவா! உங்களுக்குப்பிடித்த மாதிரியே அழைக்கிறேன். அன்புமிக்க அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி அவர்களுக்கு,

ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?

கதாநாயகன் வில்லனாகிய கதை

2006 சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கதாநாயகன் என வர்ணித்தனர்.

அதில் ‘சொன்னதைச் செய்வோம் ; செய்வதைச் சொல்வோம்’ என்று வாய் ஜம்பம் அடித்தனர்.

சாதித்த சாதனைகளாக தமிழர் களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. தமிழ்ச் செம்மொழி ஆக்கப் பட்டது. நோக்கியா யூனிட் துவக்கப் பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும் திட்டம் அமலாக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அறிக்கை அமலாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் தரப்பட்டது. 55 லட்சம் ஏக்கர் நிலம் தரப்படும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என பல சாதனைகளை சாதித்து விட்டதாகவும் இன்னமும் சாதிக்க உள்ளதையும் தெரிவிக்கப்பட்டது.

மின் வெட்டு : தி.மு.க அரசே குற்றவாளி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 10,214 மெகாவாட் டாகும். நடைமுறையில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அதிகபட்ச அளவு 8000 மெகாவாட்டாகும். சுமார் 2000 மெகாவாட் பற்றாக்குறை உள்ள வாரியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுகிறது. மின்சார பற்றாக்குறையினால் மின் வெட்டு, அதையொட்டி ஏற்படும் பாதிப்பு கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்கள் துவங்கி விவசாய உற்பத்தி வரையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை ஓரளவிற்கேனும் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அரசிற்கும் மின்சார வாரிய நிர்வாகத் திற்கும் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள்

2006 மே மாதத்தில் நடந்த சட்டமன் றத் தேர்தல் முடிந்த கையோடு, அக்டோப ரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென் னை மாநகராட்சியில் ஆளும் திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டமும், ரவுடி களைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி இஷ்டத்திற்கு வாக்களித்துக் கொண்டதும், சினிமா பாணியில் பட்டாக் கத்திகளோடு டாடா சுமோ கார்களில் எம்எல் ஏக்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதும், வாக்காளர்களை ஓட்டுப் போட முடியாமல் தடுத்து ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றியதையும் மறக்க முடியுமா?

நக்கீரன் மெகா சர்வே முடிவு கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே!

‘ஜெயிக்கப்போவது யார்? ‘முந்துவது யார்?’ என்று தேர்தல் சீசனுக்கு ஏற்ப பரபரப்பைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது வியாபாரத் தந்திரமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளைத் துல்லியமாக கணிக்கிறோம் என்ற பெயரில் தனது ஆசைகளையே முடிவுகளாகவும், தனது ஆளும் கட்சி விசுவாசத்தையே கணிப்புகள் என்றும் நக்கீரன் வாரஇதழ் செய்து வருகிறது.

காப்பி அடியுங்களேன், ப்ளீஸ்!

தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

உடனே, திமுக எம்.பி., கனிமொழி, திமுக அறிக்கையைப் பார்த்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரிக்கிறது என்று அண்மையில் பேசியிருக்கிறார். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிதானே உரத்த குரல் எழுப்பி வருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே, கீழே என்று இலக்கு வைத்துப் பிரிக்காமல், அனைவருக்கும் ரேசன் (ருniஎநசளயட சiபாவ வடி கடிடின) என்பதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் தேசிய அளவில் இயக்கம் நடததுவதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மத்திய அரசு முறையான உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர மறுப்பதால், மாநில அளவில் செய்வதற்கான முயற்சியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது.

‘என்ன உறவோ, என்ன பிரிவோ!’

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள் கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளா தாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையி லும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பது தான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தர வாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறு வனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்!

1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் ‘ஐந்தாம் தர டீ’ போன்றது!

“காங்கிரஸ் ‘ஐந்தாம் தர’ டீ போன் றது”. இது விசித்திரமான தலைப்பாகத் தோன்ற லாம். காங்கிரஸ் கட்சி பற்றி மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் எப்பொழுதுமே குறை சொல் பவர்கள் தான்! ஆனால் காங்கிரஸை இவ்வ ளவு மோசமானதாக வர்ணித்த சிறப்புக்குரிய வர்கள் இடதுசாரிகள் அல்ல. கலைஞர் நாள் தோறும் பேச்சிலும், எழுத்திலும் யாரைத் தன் னுடைய ஆசான் என்று குறிப்பிடுகிறாரோ, அந்த ஆசான் தான், அதாவது திமுக தலை வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் காங் கிரஸைப் பற்றி 1.2.1962 ல் ‘நம் நாடு’ இதழில் வெளிவந்த தனது உரைக்கு இந்தத் தலைப் பைக் கொடுத்திருக்கிறார்!

அழகான அத்துமீறல்

கிரிவலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை மகன் சந்திரனைத் தெரியாத வர்கள் அந்த சுற்று வட்டாரத்தில் யாருமே இருக்க முடியாது. அவனுடைய கிளாரினட் இசை கேட்ட வர்களின் இதயங்களில் நுழைந்து மயக்குகிறது, உலுக்குகிறது, கலவரப்படுத்துகிறது, கிளர்ந்தெழத் தூண்டுகிறது. அவன் ஒன்பதாம் வகுப்பில் தவறியதும் பள்ளிக் கூடத்துக்கும் தனக்குமான உறவைத் துண்டித்துக் கொண்டான். அதற்கு முக்கியக் காரணம் அவனல்ல, பள்ளிக்கூடம் தான். அது அவன் மீது முட்டாள், மக்கு, உருப்படாதவன், மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாதவன் போன்ற முத்திரைகளைக் குத்தியதோடு நிற்காமல் வண்டி வண்டியாய் குற்ற உணர்வுகளையும் ஏற்றிவிட்டது.

சமகால அரசியலும் இலக்கிய அரசியலும்

பொதுவாக தேர்தல் வந்துவிட்டால் நவீன தமிழ் இலக்கிய உலகில் இடதுசாரி இலக்கியவாதிகளிடம் பிற இலக்கியவாதிகள் இந்தத்தடவை யாரைப் பதவியில் அமர்த்தப் பாடுபடப்போறீங்க என்பதில் துவங்கி எவ்வளவு பெரிய புரட்சிகரமான தலைவர்களை எல்லாம் இப்படி சீட்டுக்காக அலைய வச்சீட்டிங்க என்பது வரைக்கும் பல கேள்விகளை வருத்தங்களை முன்வைப்பார்கள். புதுசாகக் கேட்பவர்களுக்கு அடடா இவ்வளவு அக்கறையாக நம்ம கட்சியைப்பத்திக் கரிசனமாப் பேசறாங்களே என்று தோன்றும். தோழர் சுர்ஜித் எல்லாம் எவ்வளவு பெரிய தியாகத்தின் அடையாளம்? அவரைப்போயி... வாசல்ல கொண்டுபோயி நிறுத்தீட்டிங்களே என்று ஒரு மூத்த அமைப்புசாரா இலக்கியவாதி ஒருமுறை என்னிடம் கேட்டபோது எங்களோடு பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளம் தோழர் ஒருவர் கேவிக்கேவி அழுதுவிட்டார். நாம கூட நம்ம தலைவர்களின் தியாகத்தை இப்படி மதிச்சதில்லியே என்றுகூட அச்சமயத்தில் நமக்குத் தோன்றிவிடும்.

கலைஞரின் இளைஞனும் தமிழக இளைஞனும்

காலம் போன காலத்திலேயாவது இளைஞர்களைப்பற்றின கவலை கலைஞருக்கு வந்து அதற்காக ஒரு படமும் எடுத்திட்டாரே என்று நம்ம்ம்பி சொந்தக் காசில் டிக்கட் வாங்கி இளைஞன் படத்துக்குப் போய் - எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க இவிங்க ரொம்ப நல்லவிங்க என்று சொல்லிச் சொல்லி உள்ளே வைத்து அவர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு கடைசி வரை இருக்க முடியாமல் வெளியே அலறி அடித்து ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்.அந்த சோகக்கதையைச் சொல்லி வாறேன் கொஞ்சம் கேளுங்க..

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி

நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

கண்துடைப்பு இலவசங்கள்

பண்ணைகளிலே பணி செய்த பண் ணை அடிமைகளுக்கு, அவர்கள் திரும ணத்தின் போது தாலியும், கூரப்புடவை யும், தனிக் குடித்தனம் போகும்போது குறுணி நெல்லும் பண்ணையார்கள் இலவசமாக தருவார்கள். பண்i™ அடிமைகளுக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க வொண்ணா நிகழ்ச்சியாக அவர்களது நெஞ்சங்களிலே நிழலாடும். குடும்பம் முழுவதும், வாழ்நாள் முழுவதும் பண் ணைக்கு நாம் கடமைப்பட்டவர்கள் என் பதை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி,மார்ச்.22-

திருச்சியில் நடைபெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர் கள் பட்டியலை மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

இராஜராஜம்

மன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறுக்க முடியாத வரலாற்று பிம்பம். ஆயிரக்கணக்கான தமிழகத்தின் குறு, பெரு மன்னர்களும், பேரரசுகளும் வந்து சென்றாலும் ராஜராஜன் பேசக்கூடிய மனிதனாக வாழ்ந்துள்ளான். தஞ்சை பெரியகோவிலின் 1000 மாவது ஆண்டு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியதோடு அமைச்சர் பெருமக்களும் தங்களின் ஆட்சியை மன்னர் கால ஆட்சியோடு ஒப்பிட்டு பேசியதன் துவக்கமே ஆசிரியரின் இந்த புத்தக உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்..

சிறுபான்மையினர் வளர்ச்சியும் இடது முன்னணி அரசும்

எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மை யினர் உரிமைகளைப் பாதுகாத்திடாமல் ஜன நாயகத்தை ஒருங்கிணைத்து விரிவாக்கிட முடியாது. சிறுபான்மையினருக்கு சம உரிமை கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் உலகின் பலநாடுகளிலும் இன் றளவும் தொடர்கிறது. இப்போது அது வெகு ஜன இயக்கங்களின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் மாறி இருக்கிறது. சிறுபான்மை யினருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே ஓர் அரசு தன் கடமை களை முழுமையாகச் செய்ததாகக் கூற முடியும்.

கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு

சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

திமுவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : மேலூருக்குள் காரில் போன ரூ. 5 கோடி எங்கே?

மதுரையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்க ளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் திமுகவினரை விட்டு விட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்துத்துறை களிலும் தோல்வியடைந்த திமுக, எப்படி யாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வகை யில் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கியுள்ளது.

63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்!

“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன். ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து” 

திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் வேறு வழியின்றி திமுக 63 இடங்களை தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகளுக்கு கொடுத்த பிறகு வெளியிட்ட வேதனை வார்த்தை கள் இவை. அவர் குறிப்பிடுகிற 63 நாயன் மார்களைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். இந்தப்பெரிய புராணத்தையும், ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று திமுகவைத் துவக்கிய அண்ணா ஒரு காலத்தில் வாதா டினார். அந்த உரை கூட “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. 

இடதுசாரி அரசுகளை காப்போம்!

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத் தகைய காலகட்டத்தில் கவனிக்கத்தக்க முக் கிய அம்சமாக, வலதுசாரிக் கொள்கைகள் தீவிரமாக தலைதூக்கி வருகின்றன. உலகின் எந்தப்பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. இத் துடன், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதி யாகவும் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் தொழி லாளி வர்க்க எதிர்ப்புக் கருத்துக்களும் தீவிர மாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது, மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களுக்கு எதி ரான தாக்குதலாக கூர்மைப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப்பின்னணியில், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்த லோடு மேற்குவங்கம் மற்றும் கேரள சட்ட மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

மெகா ஊழலுக்கு ஊற்றுக்கண் எது?

இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு.

நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது.

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்

அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது. 

இன்னும் ஒரு 2ஜி ஊழல்

2005-06 துவங்கி தொடர்ந்து வந்த ஆறு வருடங்களாக இந்திய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கைகளில் காங்கிரஸ் தள்ளு படி செய்த கார்ப்பரேட் நிறுவன வருமான வரி யின் அளவு எவ்வளவு தெரியுமா? 3,74,937 கோடி ரூபாய். இது 2ஜி மெகா ஊழலின் கிட் டத்தட்ட மூன்று மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி எழுதித்தீர்க்கும் தள்ளுபடி யின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என்றே தகவல்கள் (நிறைய) கூறுகிறது. 2005-06ல் ரூ.34,618 கோடியாக இருந்தது, இந்தாண்டு 155 சதமானம் உயர்ந்து ரூ.88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அரசு, “நிறுவன வருமான வரியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.240 கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்தப்பணம் இந்தியாவிலிருந்து அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு கறுப் புப்பணமாக தினசரி செல்கிறது” என்று வாஷிங்டன் சர்வநிதியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

உதவி செயுங்கள் தோழா...................

நேற்று வரை சரியாக இருந்த எனது தலத்தில் login திடீர் என்று வரவில்லை. என்ன காரணம்... add a gadget என்ற இடத்தில்
Followers
Followers Experimental

Displays a list of users who follow your blog.

This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!


By Blogger


என்று வருகிறது என்ன கரணம்.....?
உதவி செயுங்கள் தோழா...................
மேற்கொண்டு நான் என்ன செய்ய..........



என்றும் தோழமையுடன்.....
S.Sathya Seelan
cpim.marxist@gmail.com
http://cpimmarxist.blogspot.com/
cell:9884642030

அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமைகள், துன்பங்களைத் தரும் கொள்கையை தடுத்திட...

நாட்டின் தலைநகர் தில்லியில், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்தார் கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் லட்சக்கணக் கான தொழிலாளர்கள், தங்களது ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து வந்தார்கள். 1. விலை வாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து; 2. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்து; 3. கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் ஊக்கு விப்பு உதவிகள் தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்; 4. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தேசிய நிதியம் உருவாக்கு; 5. பட் ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதை நிறுத்திடு.

அவர் போட்ட முற்றுப்புள்ளிகள்

முதல் விதைகளாய்

மார்க்சியத்தை

எது தூவியது இந்த நாட்டில்

செக்கச் சிவந்த

சிங்காரவேலர் கையைத் தவிர?

மூலதனத்தின்

பக்கங்களில் அவர் மூளை,

போகவில்லை

பொழுதென்று போகவில்லை!

பூகோளவியல் ஆண்களின் துறையா?

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென் றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்

வாழ்க்கையின் தேர்வு

வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட

மக்கள் துணிந்து விடுவார்களானால்

விதியால் என்ன செய்ய முடியும் -

வழிவிட்டு நிற்பதைத் தவிர ?

இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..

-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.

விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுதில்லி, பிப். 25-

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்க வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகில இந்திய விவசாயி கள் சங்கம் இதுதொடர் பாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சொன்னதையே திரும்பச் சொல்லும் உரை மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி தாக்கு

ஒவ்வொரு ஆண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, செல்லும் திசை தெரியாது அரசு தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று (பிப்.23) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தில்லியில் உழைப்பாளர் பேரணி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனிய னில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி மக்கள் தலையில் ஏகாதிபத்திய சக்தி கள் ஏற்றிவருகின்றன. தனியார் துறையின், பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டை யை பாதுகாக்க, இவை நடத்தும் கடும் உழைப்புச் சுரண்டல் தொடர மீட்பு நடவடிக் கைகளும், ஊக்குவிப்புத் திட்டங்களும் ஜாம் ஜாம் என அமலாக்கப்படுகின்றன. உழைப் பாளி மக்களின் வேலைக்கு, ஊதியத்திற்கு, சமூக பாதுகாப்பிற்கு, பென்சனுக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக கடந்த செப்டம்பர் 7ல் உலகம் முழுவதும், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுகுகூரு) அறைகூவலுக்கிணங்க வேலைநிறுத்தங் களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரான்சில் ஒரே மாதத்தில் 3 வேலைநிறுத்தம் நடந்தது.

தத்தளிக்கும் ஐ.மு.கூட்டணி அரசாங்கம்


சமீபத்தில் பிரதமருக்கும் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் மெகா ஊழல் ஆகியவை சம்பந்தமாக அரசு மேற் கொண்டுள்ள உறுதியான நட வடிக்கைகள் குறித்து ஏதேனும் கூறுவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் அவர் கூறவில்லை. மாறாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப்பது பிரதமரின் கூற்றுக்களிலிருந்து உறுதியாகி இருக் கிறது. 

இந்தியாவில் உணவு நெருக்கடியும்-பாதுகாப்பும்

உலக உணவு நெருக்கடி, விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுக்கு 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

கும்பி காயுது நிபுணர் குழுக்கள் ஆராயுது

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பித்தவறிகூட மக்களுக்கு நல்லதை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்குவதில் கொடுக்கிற ஆலோசனைகளும் அறிவிப்புகளும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகளை பிரதமர் நியமித்த ஆர்.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்குழு ஏற்பது சிரமம் என்று கூறியுள்ளது. ஏதோ சோனியாகாந்தி மக்களுக்கு உணவளிக்க முயற்சி எடுப்பதாகவும் அதிகாரிகள் அதற்கு தடையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு ஆப்பை இரண்டும் களண்ட ஆப்பை என்ற கிராமத்து சொலவடை போலத்தான் இதுவும். அடிப்படையில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை ஏற்பதாக இல்லை. அப்படி சிந்திக்கக்கூட தயாராக இல்லை.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்! இளைஞர்களின் எதிர்காலம்..?

என் நாடு. என் மக்கள். இவர்களின் நலனே எங்களின் உயிர் மூச்சு என்று 63 ஆண்டுகாலமாய் பசப்பு வார்த்தைகளால் வாலிபர்களின் வாழ்க்கையை கானல் நீராய் மாற்றி விட்டார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை ஈடேற்றத்தான் எத்தனை எத்தனை அற¤விப்புக்கள், திட்டங்கள். அவை அனைத்துமே ஏட்டளவிலேயே உள்ளன. தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை நோக்கி செல்கிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் முழங்குகிறார்கள். வேலை எங்கே என்றால் பேச மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் (1)விவசாயத் துறை, (2) தொழில் துறை, (3) சேவைத்துறை ஆகிய மூன்றும் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் நிலை என்ன?

முதல்வரின் அறிவிப்புகளும் குதிரைக் கொம்பாகும் வேலைவாய்ப்பும்

இளைஞர்கள் படித்து முடித்து பல்வேறு கனவுகளோடும் நம்பிக்கையோடும் இவ்வுலகை பார்க்கின்ற போது, அது சிதைந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 66 லட்சம் இளைஞர்களும் அடங்குவர்.

அரசாங்கத்தின் மீதும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மீதும் நம்பிக்கையிழந்து பதிவு செய்யாதவர்களையும் இணைத்தால் ஒரு கோடியை தாண்டுகிறது. நமது நாடு இளமையான நாடு என்கிறார்கள். ஆனால், இளைஞர்களின் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொட ரும் என பசப்பு வார்த்தைகளை வீசுகிறது அரசு.

அன்பழகனின் கேள்விகளுக்கு அண்ணாவின் பதில்கள்

அது என்னமோ தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடக் கும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் விலைவாசி உயர் வைப் பற்றி பேசினாலே நிதியமைச்சர் அன்பழகன் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார். இது அவரது சுபாவத்திற்கு மாறுபட்ட ஒன்று.

எந்தச் சூழ்நிலையிலும் ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக உட் கார்ந்திருப்பதே அவருடைய வாடிக்கை.

கடந்த 3, 4 கூட்டத் தொடர்களில் அவருடைய இந்த சுபாவத்திற்கு மாறு பட்ட பேச்சுக்களை பத்திரிகை படிப்ப வர்கள் அறிய முடியும்.

ஜமீன் பாண்டி டீக்கடை

குரங்கணி சாலையின் முதல் வளைவில் இறங்குகிற போதே கவனித்தான் சேகர். டீ கடை இன்னும் திறந்துதான் இருந்தது. புங்க மர நிழலில் இரண்டுகார்கள் நின்றிருந்தது. யாராவது ரியல் எஸ்டேட்காரர்களாய் இருக்கும் என யூகித்தான். தேசிய நெடுஞ் சாலையாய் அறிவித்த பின் பூதாகரமாய் வளர்ந்து கொண்டிருக்கிற ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டங்கரடு, விளைநிலம், தோப்பு தோட்டம் என பேதமின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
மேலப்பரபு பக்கம் நிலம் பார்க்க வருகிற வியாபாரிகள் புரோக்கர்கள் அமர்ந்து பேச, குரங்கணி மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாக சாந்தி செய்ய மா, தென்னை, இலவு, காப்பி என பீச்சாங்கரை வரை விரிந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி உழைப்பாளிகள் சிறு விவசாயிகள் சிறிது இளைப்பாற தோதான இடமாக ஜமீன்பாண்டி டீ கடை இருந்தது. கூரை வேய்ந்தது போல் இடம் வலமாய் வளர்ந் திருக்கும் புங்கமரமும் வேம்பும் தார்ச்சாலை வரை படர்ந்து குளுமை தந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு சரணாலயம் போல் விளங்கியது. இதற்கும்மேல் இந்தப்பக்கம் வருகிற புரோக்கர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு போக காரணமும் இருந்தது. டீ கடையை ஒட்டி சமதளமாய் விரிந்திருக்கும் ஜமீன்பாண்டிக்குச் சொந்தமான தோப்பு.

தோளோடுதோள் நிற்கவேண்டியவர்கள் வாள் எடுத்து வீசலாமா?

அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).

உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

யாருக்கான கல்வி? யாருக்கு எதிரான கல்வி?

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை ஜனவரி 8-9 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “புத்தகங்கள் வாசிப்பு முகாமில்” பங்கேற்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். நாற் பதற்கும் மேற்பட்ட இளம் ஆசிரியர்களும் அறிவியல் இயக்க ஆர்வலர்களும் பங்கேற்ற இம் முகாமை திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் மணியும் அவருடைய நண்பர்களும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் ஆவர். ஈரோடு மாநகர அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இம்முகாமினை நடத்திட அனுமதி அளித்திருந்ததோடு முகாமிற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பொன் குமார் அளித்திருந்தார்.

அண்டப்புளுகனும் கபில் சிபலும்

முன்னாடி ஒரு காலத்துல அண்டப்புளுகன், அண்டப்புளுகன்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு ஒரு மவன் இருந்தான். அவம்பேரு என்னமோ சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அந்தப்பய பொறந்த அன்னியிலேயிருந்து பேசவேயில்லையாம்.

அண்டப்புளுகனுக்கு ரொம்பக் கவலையாப் போச்சு. நாம என்னடான்னா ஊருக்குள்ள அண்டப்புளுகு புளுகிக்கிட்டே திரியறோம். அதனால அண்டப் புளுகன்னு அன்பாக் கூப்பிடறாங்க. இந்தப் பய. நாம்பெத்த மவன், நம்ம பேரைக் கெடுத்திருவான்னு போலருக்கே. இவனெல்லாம் புள்ளையா. அப்பன்பேரைக் காப்பாத்தாத பய உசுரோட இருக்கப்படாதுன்னு மனசுல நெனச்சுக்கிட்டான்.

அண்டப்புளுகன் மவனைத் தூக்கித் தோள்ல வெச்சுக்கிட்டு, கம்மாய்க்குள்ள கழுத்தளவு எறங்கிட்டான். பய புள்ளய தண்ணிக்குள்ள வெச்சி அமுக்கிற வேண்டியது தான்.

கழுத்தளவு தண்ணில வந்தவொடனே, மவங்காரன் தண்ணியில கையெ வெச்சித் தொப்புன்னு அடிச்சானாம். ஏலே, எதுக்குலே தண்ணிய அடிச்சன்னு அப்பங்காரன் கேட்டான்.

மவன் சொன்னானாம், யப்பா, பெரிய விரால் மீனப் பிடிச்சுட்டேம்ப்பான்னு.
எங்க காமி பாப்போம்னானாம் அப்பங்காரன்.

அதான், சுட்டுத் தின்னுட்டேன்னு சொன்னானாம் மவன்.

எஞ்செல்லமே, ஒன்னப் போயிக் கொல்லப்பாத்தேனடா. நான் படுபாவின்னு சொல்லி மவனைக் கொஞ்சிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டானாம் அண்டப்புளுகன். அவன் மவன் பேரு தான் ஆகாசப் புளுகன்.

இந்தக் கதைக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி, கபில் சிபல் எதுக்கும் சம்பந்தம் இல்லிங்க.

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

தாண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் 76 படை வீரர்களைக் கொன்றதில் நாடே கலங்கிவிட்டது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மேற்குவங்கம் மற்றும் மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ராஜினாமா நாடகமாடி அதையும் முடித்துவிட்டார். ஆனால் மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறித்தாக்குதலுக்கு எதிராக எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் காங்கிரசின் கூட்டாளியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிதம்பரத்திற்குக் கடிவாளம் போடுவதுதான். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார். 2011ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி தொட வேண்டுமென்று விரும்புகிறார். இப்போது பிரதமருக்கும் சோனியாவுக்கும் மம்தாவின் கூட்டணி தேவை. இதுதான் சிதம்பரத்தின் ஏடாகூட பேச்சின் ரகசியமாகும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்குப் பதிலளிக்கும் போது "இன்னும் 12 மாதங்களில் புரிந்துவிடும்" என்ற சிதம்பரம் கூறினார். வரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இப்படிப்பேசினார்.

ஊழல் பெருச்சாளி தெருவில் இறங்கியது

 ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ராசா செய்திருக்கிறார் என்பதை 18 மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்த மெகா ஊழல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை பிரதமரும் சோனியாகாந்தியும் ஏற்க மறுத்துவிட்டனர். காரணம் இந்த ஊழல் பிரதமரின் ஒப்புதலின்றி நிகழ்ந்திருக்க முடியாது என்பதுதான்.

அண்மைச் செய்திகளைப் பார்த்தால் இதில் கலைஞர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பதாக ச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய கடிதம் , கனிமொழி- நீரா ராடியா உரையாடல் , அமைச்சர் ராசா - நீரா உரையாடல் கள் ஊடகங்களில் பகிரங்கரமாக வெளிவந்துவிட்டன. மேலும், பத்தரிகையாளர் வீர்சங்வி- நீராராடியா உரையாடல், என்டிடிவி செய்தி ஆசிரியர் - நீரா உரையாடல்கள் அதை அம்பலமாக்குகின்றன.

சோனியா குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இப்போது 2 ஜி என்றால் ஒரு ஜி சோனியா என்றும் இன்னொரு ஜி ராகுல் என்றும் உண்மை வெளிப்பட்டு விட்டது. ஆக, இதிலும் காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேர்ந்தே கொள்ளையடித்துள்ளன. 1.76 லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததில் அறுபதாயிரம் கோடி ரூபாய் கமிசன் பெறப்பட்டு பங்கு போட்டுள்ளதாய் செய்திகள் வருகின்றன. அதனால்தான் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்திருப்பர்.

       ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணத்தை சோனியாவின் இரு தங்கைகள் (நாடியா, நெமீலியா) பெயரில் பத்து நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப் பதாக சுப்பிரமணியசாமி அம்பலப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சொத்தாக 7000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மலேசியாவில் வாங்கியுள்ளாராம்.

சாயத்தொழில் நெருக்கடி: சிக்கலும் தீர்வும்

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலை யங்களையும் உடனடியாக மூடிவிட வேண் டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் தது. இதையடுத்து திருப்பூர் சாயத்தொழில் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் மறு சுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, 2010ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் ஒரு சொட்டு கழிவுநீரைக் கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தீர்ப்புக் கூறியிருந்தது.

நிராகரிக்கப்பட வேண்டிய சக்தி அமெரிக்க ஏகாதிபத்தியமே

வெகுசில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தங்களோடு பேச்சுவார்த்தை நடத்த நேரில் வந்த அதிபர்யை ஆயுதம் தாங்கிய 800 காவல்துறையினர் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் பாதுகாவலர்களை தாக்கினார்கள். மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ஓட முடியாமல் தனது கைத்தடியை ஊன்றி வேகமாக நடந்து தப்பிக்க முயன்ற ஜனாதிபதியை, அவரது கால் மூட்டிலேயே அடித்தார்கள். சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து தப்பச் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து கொண்டார்கள். அவரைக் கொல்ல முயற்சித்தார்கள். தகவல் அறிந்தும் உடனடியாக ஜனாதிபதியை காப்பாற்ற முயற்சி எடுக்காத ராணுவம், நீண்ட நேரம் கழித்து அதிரடி படையை அனுப்பி, கலகம் செய்த போலீஸ்காரர்களிடமிருந்து 14 மணிநேரம் கழித்து ஜனாதிபதியை காப்பாற்றியது.

பரபரப்பான சினிமாக் கதைபோல நடந்த இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வல்ல. தனது கட்டளைக்கு பணிய மறுத்த ஈக்வடார் தேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஃபேல் கோரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட கொடிய தாக்குதல் இது; காவல்துறைக்குள்ளும் ராணுவத்திற்குள்ளும் இருக்கும் தனது கைக்கூலிகளால் திட்டமிட்டு, ஜனாதிபதியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட கலக முயற்சி இது. ஆனால் தகவலறிந்த சில மணி நேரங்களில் ஈக்வடார் தேசமே கொந்தளித்தது. ஜனாதிபதிக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ஆயுதமேந்திய போலீசாரையும் மீறி உள்ளே நுழைந்தனர். சில இடங்களில் மக்களுக்கும் போலீசாரின் ஒரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதட்டமும் பரபரப்பும் ஈக்வடாரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவே கொந்தளித்தது. வெனிசுலாவும், கியூபாவும், பொலிவியாவும் கோரியாவுக்கு ஆதரவாக குரல்எழுப்பின. சொந்த நாட்டு மக்களும், அண்டை நாட்டு அரசுகளும் எழுப்பிய உறுதிமிக்க ஆதரவுக்குரலால், கோரியா அரசுக்கு எதிரான கலகம் தோற்கடிக்கப்பட்டது.

இதுதானம்மா புரட்சி வாழ்க்கை...

அன்போடும் பாசத்தோடும் தோழர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட தோழர் பாப்பா உமாநாத் அவர்கள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவியவர், பெண்ணுரிமைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்து அதற்காக வாழ்நாளெல்லாம் அரும்பணியாற்றிய ஒரு பெண்ணுரிமைப் போராளி. மக்கள் கூட்டங்களில் அவர் நாவன்மையும் உத்வேகமும் மிக்க பேச்சாளி. எழுத்தாற்றல் மிக்கவர்.

பாப்பா உமாநாத் கடந்த டிசம்பர் 17 அன்று திருச்சியில் காலமானார். அவருக்கு செம்மலர் தனது நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. அவர் செம்மலரில் அதன் ஆரம்ப ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதி உதவினார். “திருமணமும் குடும்ப வாழ்க்கையும் (1971 டிச.), “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” (1972, மார்ச்) “வாழ்வை வளமாக்க கடவுளால் முடியாது”(1973, நவ.) “குழந்தைகள் பற்றிய கண்ணோட்டம்” (1973 டிச.), “பெண் விடுதலை வேண்டும்” (1974 செப்.) ஆகிய தலைப்புகளில் அவர் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் அவை.

1972 மார்ச் செம்மலரில் “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” என்ற தலைப்பில் பாப்பா உமாநாத் எழுதிய கட்டுரையொன்று இங்கே வெளியிடப்படுகிறது. அடக்குமுறைக்கும் தாக்குதலுக்கும் அஞ்சாத வீரம் - தியாகம் - அர்ப்பணிப்புமிக்க ஒரு வாழ்க்கையின் உணர்ச்சிமிகு எழுத்துவடிவமாகும் இது.

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்

என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

தமிழால் என்ன பயன்? தமிழன் கேட்கிறான்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-27 தேதிகளில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருவதாக நாளும் செய்திகள் வருகின்றன. நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. தமிழுக்கு மாநாடு எனும் போது தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழத்தான் செய்யும்.

உண்மை. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில்தான் இலங்கையில் யுத்தம் தனது உச்சமான கோரமுகத்தைக் காட்டியது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால்  தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். நமது இதயங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன. யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு குதூகலத்தோடு அறிவித்தது. ஆனால் யுத்தம் முடிந்து ஓராண்டான பிறகும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. பலாத்காரத்தால் எட்டப்படும் வெற்றி தற்காலிகமானதே என்பதையும், நியாயமான அரசியல் தீர்வே நிரந்தர வெற்றியைக் கொண்டு வரும் என்பதையும் அந்த நாட்டு அரசு உணர வேண்டும். தற்காலிக வெற்றி மதர்ப்பில் இருக்கும் அந்த அரசு இந்த உண்மையை உணருவதாகத் தெரியவில்லை.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரா... ஆர்.எஸ்.எஸ். ரவிசங்கரா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.

பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

"உயர்ந்தவன் யார்?

கிராமவாசி? நகரவாசி?

இல்லை, விலைவாசி!"

-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.

மாக்சிம் கார்க்கி - வாழ்வும் இலக்கியமும்

மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.
இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இந்து மதம்!

இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்படுமா?

கடந்த ஜனவரி 27ம் தேதியன்று திருச்சி கலையரங்கத்தில் நான்காவது மாநில நிதிக் குழு ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் 4வது மாநில நிதிக்குழு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள பணிந்தர் ரெட்டி ஐஏஎஸ் தலை மையிலும், நிதிக்குழு மானிய உறுப்பினரும் செயலாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, திருச்சி, திண்டுக் கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி நகராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப் பப்பட்டு கலந்து கொண்டேன்.

மூடப் பழக்கங்களை ஒழிக்க வந்த முன்னோடி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் சமு தாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்திய மாமனிதர். அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னோடியாக இருந்ததைப் போலவே மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிந்தனை யாளர்கள் சிலர் அரசியல் தளத்தில் மட்டுமே இயங்குவர். சிங்காரவேலரோ இவ்விரண்டு தளங்களிலும் இயங்கியவர்; இதில் வியப்பு என்னவென்றால், இவ்விரண்டு தளங்களி லும் அவர் முன்னோடியாக இருந்ததுதான்; இதில் மற்றொரு வியப்பும் உண்டு; அரசியல் உணர்வு வேர்பிடிக்கும் தொடக்கக் காலத்தில் அவர் இவ்வாறு இருந்ததுதான் அந்த வியப்பு; இந்த வியப்பின் ஆளுமை தான் சிங்கார வேலர்.

பெண்ணும் மனித உயிரே...

பெண்களைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், எத்தனை வருணனைகள்! ஓடும் நதிகளிலிருந்து வானத்து நிலவு வரை அனைத்தையும் பெண்களாக உருவகப்படுத்துவது என பெண்களை உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கம் அப்பெண்களைச் சுற்றி அழுத்தமான வட்டம் ஒன்றைப் போட்டு அதனை தாண்டி அவர்கள் வெளியேற விடாமல்

2ஜி: திரைமறைவில் சில உண்மைகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை: நாட்டின் ஜீவநாடி

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ யாத்திரை மேற்கொள்வது நாடறிந்த விஷயமாகும். மத்திய அரசு அப்படி யாத்திரை செய்யும் இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செலவுக்காக “ஹஜ் கமிட்டி சட்டம்” வழங்கும் சலுகைப்படி மானி யம் வழங்குவதும் நாம் அறிந்த தகவலாகும். அந்த மானியத்துக்கும் சூனியம் வைக்க “மாண்புமிகு” முன்னாள் மாநிலங்களவை யின் உறுப்பினர் “பிரபுல் கொராடியா” என்பவர் (மறந்துவிட வேண்டாம், இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்) உச்சநீதிமன்றத்தில் வழக் கொன்று தொடுத்தார். அவருடைய ஆட்சே பணையே இப்படி மானியம் வழங்குவதே அர சியல் சட்டம் 14 மேலும் 15 விதிக்குப் புறம்பா னது; அதோடு குறிப்பாக விதி 27க்கு விரோத மானது என்று கொதித்துள்ளார். மேலும் அவர் சொல்லும் வாதம், நான் ஓர் இந்து, அரசுக்கு நேர்முக வரியும், மறைமுக வரியும் செலுத்து கிறேன். என் வரியில் ஒரு பகுதி இஸ்லாமியர் கள் செல்லும் ஹஜ் யாத்திரைக்கு விமானக் கட்டணத்துக்கு மானியமாக வழங்கப்படு கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப் படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 280 கோடி வரை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. இப்படி மத்திய அரசு செய் வது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது மட் டுமல்ல, மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி செலவழிப்பது அரசின் கஜானாவை வீணடிப்பதும் ஆகும் என அங்கலாய்க்கிறார்.

சோசலிச நாடாக மாற்றுவதை நிறுத்தும் எண்ணமில்லை: வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

காரகாஸ், பிப்.15-

வெனிசுலாவை ஒரு சோசலிச நாடாக மாற்றும் தனது முயற்சிகளை நிறுத் தும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று அந் நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதியாகத் தெரி வித்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட கதாநாயகர் சைமன் பொலி வாரின் பெயரைத் தனது திட்டத்திற்கு சாவேஸ் சூட் டியுள்ளார். பொலிவாரியப் புரட்சி என்றழைக்கப்படும் சோசலிச நடவடிக்கைகள் தனக்குப்பிறகும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். அந்தப்பேட்டி யில் மேலும் பேசிய அவர், நான் ஒருவேளை அரசிய லிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட எனது அரசியல் சகாக்கள் பொலி வாரியப் புரட்சியை நிறைவு செய்வார்கள்.

புரட்சிகர குணமிக்க இளைஞர்கள் தற்போது நடைபெற்று வரும் அரசி யல் போரை வழிநடத்திச் செல்வார்கள். தற்போ துள்ள எதிர்க்கட்சியின ருக்கு அரசியல் எதிர்காலம் எதுவுமில்லை என்று கூறி யுள்ளார். சர்வாதிகார ஆட் சியை நோக்கி சாவேஸ் சென்று கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டினாலும், ஒவ் வொரு மாற்றத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத் தியே சாவேஸ் செயல்படுத் துகிறார் என்பதை சோச லிஸ்ட் கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்தாலும், அதை மக்க ளின் தீர்ப்பாக சாவேஸ் ஏற்றுக் கொண்டார் என் பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அடுத்த கட் டம் பற்றி சாவேஸ் உறுதி யாகப் பேசிக்கொண்டிருக் கும் வேளையில், வரவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேஸை எதிர்கொள்பவர் யார் என்பதை எதிர்க்கட்சி களால் முடிவு செய்ய முடி யவில்லை. 2012 ஆம் ஆண் டில் நடக்கப்போகும் வெனி சுலா ஜனாதிபதித் தேர்த லில் நின்று வெற்றிப் பெறப் போவதாக சாவேஸ் அறி வித்துள்ளார். வெனிசுலா மக்களுக்காக புதிய வீட்டு வசதித் திட்டத்தையும் அவர் இந்தப் பேட்டியின்போது வெளியிட்டார்.

போஸ்கோ ஆலைக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள் தடுப்பு ஏற்படுத்தினர்

தின்கியா, பிப். 14-

போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் சாலைப் பகுதியை ஆத்திர மடைந்த கிராம மக்கள் சேதப்படுத்தினர்.

ஒரிசா மாநிலத்தில் பார தீப் துறைமுகத்திற்கு அரு காமையில் உள்ள சாலை யை ஜகதீஷ்பூர் மாவட்டத் தின் தின்கியா கிராம மக்கள் சேதப்படுத்தினர். இந்த சாலை, போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் வழியாகும்.

கடந்த 2005ம் ஆண்டு ஒரிசாவில் போஸ்கோ உருக்கு ஆலை அமைப்ப தற்கு முடிவு செய்யப்பட் டது. தென்கொரியாவின் பன்னாட்டு நிறுவனம் அமைக்கும் இந்த உருக்கு ஆலையால் கிராம சுற்றுச் சூழல், காற்று மாசடைதல், கடல்நீர் மாசடைதல் ஏற் படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த ஆலை அமைவதை போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதி அமைப்பு, அபே சாகு தலை மையில் எதிர்த்து வருகிறது.

இந்த அமைப்பினரு டன் தின்கியா கிராம மக்கள் 150 பேர் சாலையை சேதப் படுத்தினர். கடந்த சனிக்கிழ மையன்று தொழில்துறை உள்கட்டமைப்பு மேம் பாட்டுக் கழக தலைவர் மற் றும் மாநில டி.ஜி.பி. ஆகி யோர் இதே சாலைவழியாக வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆலைக் கான நிலம் கையகப்படுத்து தல் நடவடிக்கையை ஒரிசா மாநில அரசு நிறுத்திவைத் தது. மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச்ச கம் பிறப்பித்த உத்தரவு கார ணமாக நில கையகப்படுத்து தல் நிறுத்தப்பட்டது. சமீ பத்தில் சுற்றுச்சூழல் அமைச் சகம் நிபந்தனை அனுமதி அளித்தது. இதனால் போஸ்கோ உருக்கு ஆலை அமைவதற் கான தடைகள் நீங்கின.

இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல”: பெண்கள் ஆவேசம்

நாடு பல்வேறு சவால் களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாலியல் விவ காரங்களில் அதிகமான அக்கறை காட்டி வரும் இத் தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதி ராக அந்நாட்டு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களை நடத்தியுள்ளனர்.

ஞாயிறன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் கலந்து கொண்டவர் களில் பெரும்பாலானவர் பெண்களாவர். இத்தாலி யில் உள்ள 200 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தங்கள் இயக்கத்திற்கு, இப்போது இல்லாவிட்டால்.. எப் போது? என்று மக்கள் பெய ரிட்டிருக்கிறார்கள். சுக போக விழாக்கள், கோலா கலக் கொண்டாட்டங்கள் என்று தனது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியோ பெர்லுஸ் கோனி, பெண்களை வெறும் போகப் பொருட்களாகச் சித்தரிக்கும் கருத்துகளை யும் தெரிவித்து வருகிறார்.

தனது பொறுப்பைக் கவனிக்காமல் களியாட் டங்களில் பெர்லுஸ்கோ னி ஈடுபடுவதால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்ப் பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெர்லுஸ்கோனியின் ஆத ரவாளர்களைக் கொண்டு எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட் டது. பிரதமருக்கு எதிராகப் பத்து லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் ஆர்ப்பாட் டங்களில் கலந்து கொண் டதே எதிர் ஆர்ப்பாட்டங் கள் முறியடிக்கப் பட்டதற்குக் காரணமாகும்.

இத்தாலியின் பெருமுத லாளிகளில் பெர்லுஸ் கோனியும் ஒருவர். இதற்கு முன்பாக நான்கு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் மீது ஏராளமான குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள் ளன. தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலங்களில் இத்தாலியில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட மாக ஞாயிறன்று நடை பெற்றதைக் கூறலாம் என் கிறார்கள் அரசியல் நோக் கர்கள்.

ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்பு மிக வும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல என்ற முழக்கத் துடன் கூடிய அட்டை களைத் தாங்கிக் கொண்டு நாடு முழுவதும் பெண்கள் வலம் வந்துள்ளனர். பெண் கள் பற்றி மோசமான கருத் தைக் கொண்டுள்ள பிரதமர் அப்பதவியில் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் ஆவேச முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

விசாரணை வலை முழுமையாய் விரியட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்ன ணியில், அருண்ஷோரியிடமும் விசாரணை நடத்தவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்த ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் ஆ.ராசா ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்று முந்தைய ஆட்சியில் உரு வாக்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததாக திரும்பத்திரும்பக் கூறிவந்தார். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் இந்த நடைமுறையை துவக்கி வைத்தது. அப்போது அந்தத்துறைக்கு பொறுப்பாக இருந்த வர் ‘மகா யோக்கியரான’ அருண்ஷோரிதான்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை முற்றிலும் தவறான ஒன்று என்று இந்த ஊழல் குறித்து விசாரிக்க அரசினால் அமைக்கப்பட்ட சிவராஜ்பாட்டீல் குழுவும் கூறி யுள்ளது. பாஜகவினரை வாயடைக்கச்செய்வதற் கான தந்திரமாக அன்றி, உண்மையில் ஒட்டு மொத்த ஊழலையும் தோண்டி எடுக்கும் வகை யில் சிபிஐயின் செயல்பாடு அமைய வேண்டும்.

2ஜி ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூ னிகேசன் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது. இப்போது டாடா நிறுவன அதிகாரிகளிட மும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக வரவேண் டும் என்று அதீத ஆர்வம் காட்டியவர்கள் அம் பானியும் டாடாவும். அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிப்பது அவசியமாகும்.

நீரா ராடியா-டாடா உரையாடல் டேப் வெளி யானபோது, இந்த விவரங்களை வெளியிடு வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தின் கதவைத் தட்டினார் டாடா. அந்த டேப் பில் உள்ள விஷயங்கள் தவறு என்று அவர் கூறவில்லை. மாறாக, அந்த விவரங்களை வெளி யிடக்கூடாது என்றுதான் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பலன்பெற்ற வர்கள் டாடா மற்றும் அம்பானி. அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண் டும். ராசாவின் ‘திறமை’ குறித்து முதல்வர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுத வேண்டிய தன் தேவை என்ன என்பதும் விசாரணை வளையத்திற்கு உட்பட்டதே.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து எஸ்-பேண்ட் ஊழல் வெளிவந்துள்ளது. இது பிரத மரின் நேரடிப்பொறுப்பில் உள்ள துறையில் நடந் துள்ள ஊழலாகும். ஆ.ராசா, பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று திரும்பத் திரும்பக் கூறினார். இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் பேசிய வகையில்தான் காரியங் கள் நடக்கின்றன என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஆ.ராசாவுக்கு தாங்கள் கூறிய ஆலோசனை என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப் முகர்ஜியோ வாய்திறக்க மறுக்கிறார் கள். பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று கூறிய பிரதமர் பிறகு, பின்வாங்கி விட்டார். நாட்டையே உலுக்கிவரும் இந்த தொடர் ஊழல் குறித்து பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்.

தோண்டத்தோண்ட புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் முன்னுக்கு வருகிறது.

நுண்நிதி நிறுவனங்கள் - வரமா? சாபமா?

இலாப நோக்கில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் - பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றனவா அல்லது பெண்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறுகின்றனவா? என்ற பொருளில் வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய கருத்துப் பரி மாற்றத்தில் கிடைத்த படிப்பினைகள்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் (கடன் வாங்கிய பெண் மற்றும் கடன் வாங்கியவரின் மனைவி)இறந்தது குறித்த விசாரணைக்கு வலியுறுத்தியும், உண் மையை கண்டறியும் நோக்குடனும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்ற குழுவுடன் நானும் சென்றேன். எனக்கு தெரிந்தவரையில் இவ்விஷயத்தில் தலையீடு செய்து விசாரணையை மேற் கொண்ட முதல் மாதர் அமைப்பு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்கொலை செய்துகொண்ட லட்சுமி பற்றிய தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லட்சுமியும் அவரது கண வரும் வேலூர் நகரின் சத்துவாச்சாரி பகுதி யில் வசித்து வந்தனர். இவர்கள், தெருக் களில் உள்ள குப்பைகளை பொறுக்கி தங் களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதித்து தங்க ளது 7 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். பார்ப்பதற்கு 15 வயதுடையவர் போலத் தோன்றும் லட்சுமியின் முதல் பெண்ணிற்கு வயது 20 என சொல்கிறார்கள். இவர் திரு மணமாகி கைக்குழந்தையுடன் இருக்கிறார். 3-4 வயதுடைய பெண்குழந்தை இவர்கள் வீட்டின் கடைக்குட்டியாகும். இந்நிலையில், ஒப்பந்தத் தொகையாக 75000 ரூபாயை உட னடியாகச் செலுத்திய நிறுவனம் ஒன்றிற்கு, குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் மாநக ராட்சி, டவுன் பஞ்சாயத்தால் அளிக்கப்பட் டது. இதனால், லட்சுமி மற்றும் அவரது கண வரின் வருமானம் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் எனக் குறைந்தது. எனவே, இவர் கள் தங்களது குடும்பத்தின் பசியைப் போக்கி டவும், குழந்தைகளுக்கு கல்வியை அளித் திடவும் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினர். முந்தைய கடனை திருப்பிச் செலுத்திட வேறொரு நிறுவனத் திடம் கடன் வாங்கினர். மஹாசேமம், ஷேர், ஸ்பன்டனா, எப்எப்சிஎல், முன்ஜீவன், காவேரி மற்றும் கிராம விடியல் ஆகிய ஏழு நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு கடன் வாங்கிய இவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கினர்.

தொழிலாளர் விரோத திமுக அரசு தூக்கியெறியப்படும்: அ.சவுந்தரராசன்

மதுரை, பிப்.14-

பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதக மாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படும் தமிழக அரசை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய மக்கள் தயாராகி விட் டார்கள் என சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கூறினார்.

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்றக்கோரி மதுரை மாநகரில் சிஐடியு சார்பில் 7 இடங்களில் பிரச்சாரப்பயணம் நடைபெற்றது. இதன் நிறைவாக தெற்கு வாசல் மார்க்கெட் அருகே பொதுக்கூட் டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:

தேர்தலை முன்வைத்து பல கட்சிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலை யில், தொழிலாளர்களுக்கான தொழிற் சங்க அங்கீகார சட்டத்தை அமல்படுத்தக் கோரி சிஐடியு தமிழகம் முழுவதும் பிரச் சாரத்தை மேற்கொண்டுள்ளது. கடுமை யான விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என முதல் வர் கருணாநிதி கூறுகிறார். அப்படியென் றால் முதல்வராக அவர் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

மின்வாரியத்தில் பணியாற்றும் முறை சாரா தொழிலாளிக்கு சத்துணவு ஊழிய ருக்கு இணையான ஊதியம் வழங்க வேண் டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு நிறைவேற்றாமல் உள்ளது. டாஸ்மாக் தொழிலாளிக்கு மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டும் அவர்கள் வாங் கும் ஊதியம் 2800 ரூபாய் தான். அரசின் அனைத்துத்திட்டங்களுக்கும் பணம் கொட்டும் இத்துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இல்லை. நூல் விலை உயர்வால் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான தொழி லாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் சலுகையை தமிழக அரசு வழங்கி யுள்ளது. ஆனால், தமிழகத் தொழிலாளர் களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க மறுக்கிறது. கேரளா, மேற்குவங்கம், சத் தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற் சங்க அங்கீகார சட்டம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அச்சட் டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுக் கிறது என அவர் பேசினார்.

* உயிரைப் பறிக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது திரிணாமுல்

கொல்கத்தா, பிப். 14-

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி நடத்தி வரும் வன் முறை அரசியலுக்கு முடிவு கட்டு வோம் என்றும், உழைக்கும் மக்க ளின் வாழ்வை பாதுகாக்க இடது முன்னணியை மீண்டும் ஆட்சி யில் அமர்த்துவோம் என்றும் முத லமைச்சர் புத்ததேவ்பட்டாச் சார்யா அறைகூவல் விடுத்தார்.

 

கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இடது முன்னணியின் பிரம் மாண்ட பேரணி - பொதுக்கூட் டம் பிப்ரவரி 13 ஞாயிறன்று நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யா, மேற்குவங் கத்தில் திரிணாமுல் கட்சியும், மாவோயிஸ்ட்டுகளும் கூட்டு வைத்துக் கொண்டு நடத்தி வரும் கொடிய வன்முறைகளுக்கு, மத்தி யில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவு அளித்து வருவதை கடுமையாக சாடினார். இத்துணை வன்முறையை ஏவி னாலும் இடது முன்னணியிடமி ருந்து ஒரு சிறு அளவிற்கு கூட மக்களை இவர்களால் பிரிக்க முடியவில்லை என்பதையே இப் பேரணி உணர்த்துகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சர்வாதிகாரமும் வெளியேறட்டும்

அரசியல் உணர்வுடன் ஒன்றுபட்டுப் போரா டுகிற மக்களின் முன் எப்பேர்ப்பட்ட அடக்கு முறை ஆயுதமும் அடிபணியத்தான் வேண்டும். எகிப்து மக்களின் எழுச்சி இதைத்தான் காட்டு கிறது. முப்பதாண்டுகால சர்வாதிகார பீடத்திலி ருந்து ஹோஸ்னி முபாரக் வெளியேறியது ஒரு முக்கியமான வெற்றி. தாக்குதல்களுக்கு அஞ்சா மல் தெருக்களில் இறங்கியதற்கான இந்த முதல் கட்ட பலனைக் கொண்டாடுகிற எகிப்து மக்கள் உலகத்தின் வாழ்த்துக்கு உரியவர்கள்.

1967ம் ஆண்டிலிருந்து அவசர நிலை ஆட்சி தான் இருந்து வந்திருக்கிறது என்பதிலிருந்தே அங்கே எந்த அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகத்திற்கு ஜனநாயக மாண்புகள் பற்றிப் பாடம் நடத்துகிற அமெரிக்க அரசு, இந்த அத்துமீறல்களைக் கண்டுகொண்டதில்லை. ஏனென்றால் அதன் உலகப் பொருளாதார ஆளு மை நோக்கங்களுக்கு ஒத்துழைத்தவர் முபாரக். தட்டிக் கேட்க முடியாத சர்வாதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு - வெளி நாட்டு முதலாளிகளின் கொள்ளை, வாழ்க்கை யைக் கடினமாக்கிய விலைவாசி, எங்கும் எதி லும் ஊழல், எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடூரங்கள் என அனுபவித்த எகிப்து மக்கள் கொதித்துப் போயிருந்தார்கள்.

ஒட்டுத் துணியும் மேலாடையும்

எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள்

ஓடி வந்து முழங்குகிறீர்கள்...



“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக எஜமானரிடம் ஓடுகிறீர்கள்.

நாங்கள் காத்துக்கொண்டு இருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள், ஒரு துண்டுத் துணியை!

காவி உடைக்குள் ஒரு புரட்சியாளர்

அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் ஸ்தாபகர் சஹஜானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் 19ஆம் நூற்றாண்டில் அதாவது 1889இல் ஐக்கிய மாகாணங் களின் கிழக்குப் பகுதியிலிருந்த காசிபூர் மாவட்டத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பெற்றோருக்குப் பிறந்த ஆறாவது பிள்ளை. சகோதரிகள் யாரும் கிடையாது. சஹஜானந்தா ஸ்வாமி களின் இயற்பெயர் நவ்ரங் ராய் என்ப தாகும். இவர் சிறுவயதாக இருக்கும் போது தாயை இழந்தவர். அவரது அத்தைதான் அவரை வளர்த்தார். அவரது தந்தை ஒரு பிராமணராக இருந்தபோதிலும் அடிப்ப டையில் அவர் ஒரு விவசாயிதான். எனவே அவருக்கு அனைத்துப் பிரா மணர்களும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் கூட கிடையாது. நவ்ரங் ராயின் தாத்தா காலத்தில் அவர்களது குடும்பம் ஒரு சிறு ஜமீன்தார் குடும்பமாக இருந்தது. எனவே அந்தக் காலத்தில் நிலத்திலிருந்து வந்த வருமானம் அவர்களது குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் குடும்பம் பெருகப் பெருக, நிலங் கள் பிரிக்கப்பட்டு, வளம் குன்றி, அவர் களே குத்தகைக்கு நிலங்களைப் பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆயினும் குடும்பம் அப்படி ஒன்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிடவில்லை.


நவ்ரங் ராய் தன் கல்வியைத் தொடரக் கூடிய வகையில் வசதியுடன்தான் இருந் தது, எனவே, அவர்தம் ஆரம்பக் கல்வி யையும், உயர்நிலைக் கல்வியையும் மிக வும் சிறப்புடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். பள்ளிப்பருவத்திலேயே அவர் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார். அக்காலத்திய மூடப்பழக்க வழக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்ள அவர் துணியவில்லை, பழம் பஞ்சாங்கங் களின் ஏமாற்றுத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே அவர் அவற்றை ஆழமாகப் படித்தார். நவ்ரங் ராய் கடவுள் நம்பிக்கையின்றி வளர்வதையும், சாமியார் களைக் கலங்கடிக்கக்கூடிய வகையில் கேள்விகள் கேட்பதையும் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்தம் குடும்பத்தினர், அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். ஆனால் திருமணம் முறையாக நடைபெறுவதற்கு முன்னதாக அச்சிறுமி இறந்துவிட்டார், இதன்மூலம் அவரைக் குடும்பக் கட்டுக்குள் கட்டிப் போடுவதற்கு அவர்தம் குடும்பத்தார் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து அவர் விடுதலை பெற்று, சன்னியாசியாகத் துற வறம் மேற்கொண்டார். இதன் பின்னர்தான் அவரது பெயர் ஸ்வாமி சஹஜானந்த சரஸ் வதி என்று மாறியது, இவ்வாறு அவர் சன்னியாசம் மேற்கொண்டதனால் அவ ரால் தன் கல்வியைத் தொடர்ந்து, மெட்ரிக்கு லேசன் தேர்வை முடிக்க முடியவில்லை. ஆயினும் அவர் தம் அறிவுத்தாகம் குறைந்து விடவில்லை. அரசியல், சமூகம் மற்றும் மதங்கள் குறித்து ஏராளமாகப் படித்தார். இதன் விளைவாக அவர் வெளிப்பார் வைக்கு உடலின் மேல் காணப்படும் காவித் துணிகள் அவரை ஒரு சன்னியாசியைப் போல் காட்டியபோதிலும், உண்மையில் உள்ளத்தில் அவர் ஒரு புரட்சியாளராக விளங்கினார்.

இன்றைய கார்ட்டூன்