15 ஆயிரம் குஜராத்தியர்களும் 15 சதவிகித தமிழர்களும்


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் திகைப் பில் ஆழ்த்துகிறது.

சிலை வழியே ஒரு வலை


ர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயர சிலை வைக்கிறார் நரேந்திர மோடி. அதை காங்கிரஸ் கட்சியும் மற்றவர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த சிலை சார்ந்த அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?”

 -சன் நியூஸ் தொலைக்காட்சியின் (நவ.1)  ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர் முன்வைத்த கேள்வி.  காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராசன், வரலாற்று ஆய்வாளர் காந்தராஜ் ஆகியோரும் பங்கேற்ற இந்த விவாதத்தில் நான் தெரிவித்த கருத்துகளின் சாரம்:

இன்றைய கார்ட்டூன்