
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் திகைப் பில் ஆழ்த்துகிறது.