மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்கும்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, படுகொலை அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக மக்களால் பேசப் படுகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக கோபாவேசமாக எழுந்துள்ளது. அதற்கு நியாயமான பதில் கூற முடியாமல் ஏப்ரல் 4ம் தேதி முரசொலியில் கலைஞரே கேள்வி எழுப்பி, பதில் கூறும் பகுதியில் விலைவாசி உயர்வு பற்றி விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.

கலைஞர் சொன்னதும்... சோனியாகாந்தி சொல்லாததும்

தீவுகளாக சிதறிக்கிடக்கும் திமுக கூட்டணிக்கட்சிகள் சென்னை தீவுத்திட லில் ஒரே மேடையில் திரண்டு பிரச்சாரம் செய்துள்ளன. இருந்தாலும் காங்கிரசில் உள்ள கோஷ்டிகள் ஒன்றாகச் சேரவில்லை. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் சோனியா காந்தி பங்கேற்ற அந்தக்கூட்டத் தை புறக்கணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வரவேற்புக்குச் சென்ற ஈவிகேஎஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலுவை மிரட் டித்தான் பாஸ் பெற்று விமான நிலையத்திற் குள் சென்றுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் சோனியா காந்தியே நேரில் வந்து காங்கிரசின் அனைத்து கோஷ்டிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை நடத்தலாம். பாதுகாப்புக்கு ராணுவத்திடம் முன்கூட்டியே சொல்லிவைப்பது நல்லது.

மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்

அன்புமிக்க மாண்புமிகு உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர், மன்னிக்கவும்... உங்களுக்கு இப்படியெல்லாம் அழைத்தால் பிடிக்காதல்லவா! உங்களுக்குப்பிடித்த மாதிரியே அழைக்கிறேன். அன்புமிக்க அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி அவர்களுக்கு,

ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?

கதாநாயகன் வில்லனாகிய கதை

2006 சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கதாநாயகன் என வர்ணித்தனர்.

அதில் ‘சொன்னதைச் செய்வோம் ; செய்வதைச் சொல்வோம்’ என்று வாய் ஜம்பம் அடித்தனர்.

சாதித்த சாதனைகளாக தமிழர் களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. தமிழ்ச் செம்மொழி ஆக்கப் பட்டது. நோக்கியா யூனிட் துவக்கப் பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும் திட்டம் அமலாக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அறிக்கை அமலாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் தரப்பட்டது. 55 லட்சம் ஏக்கர் நிலம் தரப்படும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என பல சாதனைகளை சாதித்து விட்டதாகவும் இன்னமும் சாதிக்க உள்ளதையும் தெரிவிக்கப்பட்டது.

மின் வெட்டு : தி.மு.க அரசே குற்றவாளி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 10,214 மெகாவாட் டாகும். நடைமுறையில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அதிகபட்ச அளவு 8000 மெகாவாட்டாகும். சுமார் 2000 மெகாவாட் பற்றாக்குறை உள்ள வாரியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுகிறது. மின்சார பற்றாக்குறையினால் மின் வெட்டு, அதையொட்டி ஏற்படும் பாதிப்பு கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்கள் துவங்கி விவசாய உற்பத்தி வரையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை ஓரளவிற்கேனும் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அரசிற்கும் மின்சார வாரிய நிர்வாகத் திற்கும் ஏற்பட்டுள்ளது.

இன்றைய கார்ட்டூன்