“இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல”: பெண்கள் ஆவேசம்

நாடு பல்வேறு சவால் களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாலியல் விவ காரங்களில் அதிகமான அக்கறை காட்டி வரும் இத் தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதி ராக அந்நாட்டு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களை நடத்தியுள்ளனர்.

ஞாயிறன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் கலந்து கொண்டவர் களில் பெரும்பாலானவர் பெண்களாவர். இத்தாலி யில் உள்ள 200 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தங்கள் இயக்கத்திற்கு, இப்போது இல்லாவிட்டால்.. எப் போது? என்று மக்கள் பெய ரிட்டிருக்கிறார்கள். சுக போக விழாக்கள், கோலா கலக் கொண்டாட்டங்கள் என்று தனது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியோ பெர்லுஸ் கோனி, பெண்களை வெறும் போகப் பொருட்களாகச் சித்தரிக்கும் கருத்துகளை யும் தெரிவித்து வருகிறார்.

தனது பொறுப்பைக் கவனிக்காமல் களியாட் டங்களில் பெர்லுஸ்கோ னி ஈடுபடுவதால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்ப் பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெர்லுஸ்கோனியின் ஆத ரவாளர்களைக் கொண்டு எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட் டது. பிரதமருக்கு எதிராகப் பத்து லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் ஆர்ப்பாட் டங்களில் கலந்து கொண் டதே எதிர் ஆர்ப்பாட்டங் கள் முறியடிக்கப் பட்டதற்குக் காரணமாகும்.

இத்தாலியின் பெருமுத லாளிகளில் பெர்லுஸ் கோனியும் ஒருவர். இதற்கு முன்பாக நான்கு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் மீது ஏராளமான குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள் ளன. தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலங்களில் இத்தாலியில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட மாக ஞாயிறன்று நடை பெற்றதைக் கூறலாம் என் கிறார்கள் அரசியல் நோக் கர்கள்.

ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்பு மிக வும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல என்ற முழக்கத் துடன் கூடிய அட்டை களைத் தாங்கிக் கொண்டு நாடு முழுவதும் பெண்கள் வலம் வந்துள்ளனர். பெண் கள் பற்றி மோசமான கருத் தைக் கொண்டுள்ள பிரதமர் அப்பதவியில் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் ஆவேச முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

இன்றைய கார்ட்டூன்