அழகான அத்துமீறல்

கிரிவலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை மகன் சந்திரனைத் தெரியாத வர்கள் அந்த சுற்று வட்டாரத்தில் யாருமே இருக்க முடியாது. அவனுடைய கிளாரினட் இசை கேட்ட வர்களின் இதயங்களில் நுழைந்து மயக்குகிறது, உலுக்குகிறது, கலவரப்படுத்துகிறது, கிளர்ந்தெழத் தூண்டுகிறது. அவன் ஒன்பதாம் வகுப்பில் தவறியதும் பள்ளிக் கூடத்துக்கும் தனக்குமான உறவைத் துண்டித்துக் கொண்டான். அதற்கு முக்கியக் காரணம் அவனல்ல, பள்ளிக்கூடம் தான். அது அவன் மீது முட்டாள், மக்கு, உருப்படாதவன், மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாதவன் போன்ற முத்திரைகளைக் குத்தியதோடு நிற்காமல் வண்டி வண்டியாய் குற்ற உணர்வுகளையும் ஏற்றிவிட்டது.

இன்றைய கார்ட்டூன்