63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்!

“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன். ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து” 

திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் வேறு வழியின்றி திமுக 63 இடங்களை தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகளுக்கு கொடுத்த பிறகு வெளியிட்ட வேதனை வார்த்தை கள் இவை. அவர் குறிப்பிடுகிற 63 நாயன் மார்களைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். இந்தப்பெரிய புராணத்தையும், ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று திமுகவைத் துவக்கிய அண்ணா ஒரு காலத்தில் வாதா டினார். அந்த உரை கூட “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. 

இடதுசாரி அரசுகளை காப்போம்!

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத் தகைய காலகட்டத்தில் கவனிக்கத்தக்க முக் கிய அம்சமாக, வலதுசாரிக் கொள்கைகள் தீவிரமாக தலைதூக்கி வருகின்றன. உலகின் எந்தப்பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. இத் துடன், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதி யாகவும் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் தொழி லாளி வர்க்க எதிர்ப்புக் கருத்துக்களும் தீவிர மாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது, மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களுக்கு எதி ரான தாக்குதலாக கூர்மைப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப்பின்னணியில், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்த லோடு மேற்குவங்கம் மற்றும் கேரள சட்ட மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

மெகா ஊழலுக்கு ஊற்றுக்கண் எது?

இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு.

நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது.

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்

அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது. 

இன்னும் ஒரு 2ஜி ஊழல்

2005-06 துவங்கி தொடர்ந்து வந்த ஆறு வருடங்களாக இந்திய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கைகளில் காங்கிரஸ் தள்ளு படி செய்த கார்ப்பரேட் நிறுவன வருமான வரி யின் அளவு எவ்வளவு தெரியுமா? 3,74,937 கோடி ரூபாய். இது 2ஜி மெகா ஊழலின் கிட் டத்தட்ட மூன்று மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி எழுதித்தீர்க்கும் தள்ளுபடி யின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என்றே தகவல்கள் (நிறைய) கூறுகிறது. 2005-06ல் ரூ.34,618 கோடியாக இருந்தது, இந்தாண்டு 155 சதமானம் உயர்ந்து ரூ.88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அரசு, “நிறுவன வருமான வரியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.240 கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்தப்பணம் இந்தியாவிலிருந்து அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு கறுப் புப்பணமாக தினசரி செல்கிறது” என்று வாஷிங்டன் சர்வநிதியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இன்றைய கார்ட்டூன்