இந்தியாவில் உணவு நெருக்கடியும்-பாதுகாப்பும்

உலக உணவு நெருக்கடி, விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுக்கு 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

கும்பி காயுது நிபுணர் குழுக்கள் ஆராயுது

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பித்தவறிகூட மக்களுக்கு நல்லதை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்குவதில் கொடுக்கிற ஆலோசனைகளும் அறிவிப்புகளும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகளை பிரதமர் நியமித்த ஆர்.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்குழு ஏற்பது சிரமம் என்று கூறியுள்ளது. ஏதோ சோனியாகாந்தி மக்களுக்கு உணவளிக்க முயற்சி எடுப்பதாகவும் அதிகாரிகள் அதற்கு தடையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு ஆப்பை இரண்டும் களண்ட ஆப்பை என்ற கிராமத்து சொலவடை போலத்தான் இதுவும். அடிப்படையில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை ஏற்பதாக இல்லை. அப்படி சிந்திக்கக்கூட தயாராக இல்லை.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்! இளைஞர்களின் எதிர்காலம்..?

என் நாடு. என் மக்கள். இவர்களின் நலனே எங்களின் உயிர் மூச்சு என்று 63 ஆண்டுகாலமாய் பசப்பு வார்த்தைகளால் வாலிபர்களின் வாழ்க்கையை கானல் நீராய் மாற்றி விட்டார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை ஈடேற்றத்தான் எத்தனை எத்தனை அற¤விப்புக்கள், திட்டங்கள். அவை அனைத்துமே ஏட்டளவிலேயே உள்ளன. தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை நோக்கி செல்கிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் முழங்குகிறார்கள். வேலை எங்கே என்றால் பேச மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் (1)விவசாயத் துறை, (2) தொழில் துறை, (3) சேவைத்துறை ஆகிய மூன்றும் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் நிலை என்ன?

முதல்வரின் அறிவிப்புகளும் குதிரைக் கொம்பாகும் வேலைவாய்ப்பும்

இளைஞர்கள் படித்து முடித்து பல்வேறு கனவுகளோடும் நம்பிக்கையோடும் இவ்வுலகை பார்க்கின்ற போது, அது சிதைந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 66 லட்சம் இளைஞர்களும் அடங்குவர்.

அரசாங்கத்தின் மீதும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மீதும் நம்பிக்கையிழந்து பதிவு செய்யாதவர்களையும் இணைத்தால் ஒரு கோடியை தாண்டுகிறது. நமது நாடு இளமையான நாடு என்கிறார்கள். ஆனால், இளைஞர்களின் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொட ரும் என பசப்பு வார்த்தைகளை வீசுகிறது அரசு.

அன்பழகனின் கேள்விகளுக்கு அண்ணாவின் பதில்கள்

அது என்னமோ தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடக் கும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் விலைவாசி உயர் வைப் பற்றி பேசினாலே நிதியமைச்சர் அன்பழகன் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார். இது அவரது சுபாவத்திற்கு மாறுபட்ட ஒன்று.

எந்தச் சூழ்நிலையிலும் ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக உட் கார்ந்திருப்பதே அவருடைய வாடிக்கை.

கடந்த 3, 4 கூட்டத் தொடர்களில் அவருடைய இந்த சுபாவத்திற்கு மாறு பட்ட பேச்சுக்களை பத்திரிகை படிப்ப வர்கள் அறிய முடியும்.

ஜமீன் பாண்டி டீக்கடை

குரங்கணி சாலையின் முதல் வளைவில் இறங்குகிற போதே கவனித்தான் சேகர். டீ கடை இன்னும் திறந்துதான் இருந்தது. புங்க மர நிழலில் இரண்டுகார்கள் நின்றிருந்தது. யாராவது ரியல் எஸ்டேட்காரர்களாய் இருக்கும் என யூகித்தான். தேசிய நெடுஞ் சாலையாய் அறிவித்த பின் பூதாகரமாய் வளர்ந்து கொண்டிருக்கிற ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டங்கரடு, விளைநிலம், தோப்பு தோட்டம் என பேதமின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
மேலப்பரபு பக்கம் நிலம் பார்க்க வருகிற வியாபாரிகள் புரோக்கர்கள் அமர்ந்து பேச, குரங்கணி மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாக சாந்தி செய்ய மா, தென்னை, இலவு, காப்பி என பீச்சாங்கரை வரை விரிந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி உழைப்பாளிகள் சிறு விவசாயிகள் சிறிது இளைப்பாற தோதான இடமாக ஜமீன்பாண்டி டீ கடை இருந்தது. கூரை வேய்ந்தது போல் இடம் வலமாய் வளர்ந் திருக்கும் புங்கமரமும் வேம்பும் தார்ச்சாலை வரை படர்ந்து குளுமை தந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு சரணாலயம் போல் விளங்கியது. இதற்கும்மேல் இந்தப்பக்கம் வருகிற புரோக்கர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு போக காரணமும் இருந்தது. டீ கடையை ஒட்டி சமதளமாய் விரிந்திருக்கும் ஜமீன்பாண்டிக்குச் சொந்தமான தோப்பு.

தோளோடுதோள் நிற்கவேண்டியவர்கள் வாள் எடுத்து வீசலாமா?

அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).

உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

யாருக்கான கல்வி? யாருக்கு எதிரான கல்வி?

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை ஜனவரி 8-9 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “புத்தகங்கள் வாசிப்பு முகாமில்” பங்கேற்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். நாற் பதற்கும் மேற்பட்ட இளம் ஆசிரியர்களும் அறிவியல் இயக்க ஆர்வலர்களும் பங்கேற்ற இம் முகாமை திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் மணியும் அவருடைய நண்பர்களும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் ஆவர். ஈரோடு மாநகர அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இம்முகாமினை நடத்திட அனுமதி அளித்திருந்ததோடு முகாமிற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பொன் குமார் அளித்திருந்தார்.

அண்டப்புளுகனும் கபில் சிபலும்

முன்னாடி ஒரு காலத்துல அண்டப்புளுகன், அண்டப்புளுகன்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு ஒரு மவன் இருந்தான். அவம்பேரு என்னமோ சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அந்தப்பய பொறந்த அன்னியிலேயிருந்து பேசவேயில்லையாம்.

அண்டப்புளுகனுக்கு ரொம்பக் கவலையாப் போச்சு. நாம என்னடான்னா ஊருக்குள்ள அண்டப்புளுகு புளுகிக்கிட்டே திரியறோம். அதனால அண்டப் புளுகன்னு அன்பாக் கூப்பிடறாங்க. இந்தப் பய. நாம்பெத்த மவன், நம்ம பேரைக் கெடுத்திருவான்னு போலருக்கே. இவனெல்லாம் புள்ளையா. அப்பன்பேரைக் காப்பாத்தாத பய உசுரோட இருக்கப்படாதுன்னு மனசுல நெனச்சுக்கிட்டான்.

அண்டப்புளுகன் மவனைத் தூக்கித் தோள்ல வெச்சுக்கிட்டு, கம்மாய்க்குள்ள கழுத்தளவு எறங்கிட்டான். பய புள்ளய தண்ணிக்குள்ள வெச்சி அமுக்கிற வேண்டியது தான்.

கழுத்தளவு தண்ணில வந்தவொடனே, மவங்காரன் தண்ணியில கையெ வெச்சித் தொப்புன்னு அடிச்சானாம். ஏலே, எதுக்குலே தண்ணிய அடிச்சன்னு அப்பங்காரன் கேட்டான்.

மவன் சொன்னானாம், யப்பா, பெரிய விரால் மீனப் பிடிச்சுட்டேம்ப்பான்னு.
எங்க காமி பாப்போம்னானாம் அப்பங்காரன்.

அதான், சுட்டுத் தின்னுட்டேன்னு சொன்னானாம் மவன்.

எஞ்செல்லமே, ஒன்னப் போயிக் கொல்லப்பாத்தேனடா. நான் படுபாவின்னு சொல்லி மவனைக் கொஞ்சிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டானாம் அண்டப்புளுகன். அவன் மவன் பேரு தான் ஆகாசப் புளுகன்.

இந்தக் கதைக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி, கபில் சிபல் எதுக்கும் சம்பந்தம் இல்லிங்க.

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

தாண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் 76 படை வீரர்களைக் கொன்றதில் நாடே கலங்கிவிட்டது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மேற்குவங்கம் மற்றும் மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ராஜினாமா நாடகமாடி அதையும் முடித்துவிட்டார். ஆனால் மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறித்தாக்குதலுக்கு எதிராக எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் காங்கிரசின் கூட்டாளியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிதம்பரத்திற்குக் கடிவாளம் போடுவதுதான். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார். 2011ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி தொட வேண்டுமென்று விரும்புகிறார். இப்போது பிரதமருக்கும் சோனியாவுக்கும் மம்தாவின் கூட்டணி தேவை. இதுதான் சிதம்பரத்தின் ஏடாகூட பேச்சின் ரகசியமாகும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்குப் பதிலளிக்கும் போது "இன்னும் 12 மாதங்களில் புரிந்துவிடும்" என்ற சிதம்பரம் கூறினார். வரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இப்படிப்பேசினார்.

ஊழல் பெருச்சாளி தெருவில் இறங்கியது

 ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ராசா செய்திருக்கிறார் என்பதை 18 மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்த மெகா ஊழல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை பிரதமரும் சோனியாகாந்தியும் ஏற்க மறுத்துவிட்டனர். காரணம் இந்த ஊழல் பிரதமரின் ஒப்புதலின்றி நிகழ்ந்திருக்க முடியாது என்பதுதான்.

அண்மைச் செய்திகளைப் பார்த்தால் இதில் கலைஞர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பதாக ச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய கடிதம் , கனிமொழி- நீரா ராடியா உரையாடல் , அமைச்சர் ராசா - நீரா உரையாடல் கள் ஊடகங்களில் பகிரங்கரமாக வெளிவந்துவிட்டன. மேலும், பத்தரிகையாளர் வீர்சங்வி- நீராராடியா உரையாடல், என்டிடிவி செய்தி ஆசிரியர் - நீரா உரையாடல்கள் அதை அம்பலமாக்குகின்றன.

சோனியா குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இப்போது 2 ஜி என்றால் ஒரு ஜி சோனியா என்றும் இன்னொரு ஜி ராகுல் என்றும் உண்மை வெளிப்பட்டு விட்டது. ஆக, இதிலும் காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேர்ந்தே கொள்ளையடித்துள்ளன. 1.76 லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததில் அறுபதாயிரம் கோடி ரூபாய் கமிசன் பெறப்பட்டு பங்கு போட்டுள்ளதாய் செய்திகள் வருகின்றன. அதனால்தான் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்திருப்பர்.

       ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணத்தை சோனியாவின் இரு தங்கைகள் (நாடியா, நெமீலியா) பெயரில் பத்து நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப் பதாக சுப்பிரமணியசாமி அம்பலப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சொத்தாக 7000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மலேசியாவில் வாங்கியுள்ளாராம்.

சாயத்தொழில் நெருக்கடி: சிக்கலும் தீர்வும்

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலை யங்களையும் உடனடியாக மூடிவிட வேண் டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் தது. இதையடுத்து திருப்பூர் சாயத்தொழில் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் மறு சுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, 2010ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் ஒரு சொட்டு கழிவுநீரைக் கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தீர்ப்புக் கூறியிருந்தது.

இன்றைய கார்ட்டூன்