ஸ்பெக்ட்ரம் ஊழல்: இன்று 2வது குற்றப்பத்திரிகை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) சார்பில் திங்களன்று 2-வது குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இந்த குற்றப்பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, உள் ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அனைவ ரின் கவனமும் இந்த குற்றப்பத்திரிகை யின் மீது திரும்பியுள்ளது. 

கலைஞர் டிவிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து பணம் பெறப் பட்டது தொடர்பாக கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோரிடம் சிபிஐ முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. 

கனிமொழி, தயாளு அம்மாள், கலை ஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோர் அந்த டிவியில் முறையே 20,60 மற்றும் 20 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

குற்றப்பத்திரிகையில் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டால், தமிழக சட்டப்பேர வைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்ன டைவாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முறைகேடாக 2ஜி அலைக்கற்றை உரிமங்களைப்பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவன மான டிபி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகக் கூறினாலும், அந்த நிதியை டிபி ரியா லிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகி யுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் உரி மங்களை ஒதுக்கித் தந்ததற்கு லஞ்ச மாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதனால்தான் கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகை யில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகி யோரிடமும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரி கிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத் தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக் கல் செய்தது. அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலைத்தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோ லியா, அரசியல் இடைத்தரகர் நீரா ராடியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பால்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனி டெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ் சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதி பர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழு மத்தின் தலைமை அதிகாரிகள் கௌதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகி யோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இன்றைய கார்ட்டூன்