“மினி’போபால் இனி வேண்டாம்!”

எண்டோசல்பான். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். தானிய பயிர்கள், காபி, பருத்தி, பழப்பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், முந்திரி, காய்கறிகள் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

திரிபோலியில் ஓர் அட்டூழியம்

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது.

தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்

தென்னகத்தின் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை (சி.எஸ்.பி) கட்டி வளர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வமயம் சி.எஸ்.பி. தென்னிந்தியாவில் எப்படி இருந்தது?

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள். 

அனாதை பிணமாக 49 கோடி பணம்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தல் பல்வேறு பாடங்களை தந்துள்ளது; தந்து கொண்டிருக்கிறது! அது ஏற்படுத்தியுள்ள இரண்டு அம்சங்களை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

கோடீஸ்வர முதலமைச்சர்கள்

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி

திரிணாமுல் காங்கிரஸ் நல்லாட்சி தருவோம் என வாய்கிழிய முழங்குகிறது. ஆனால் அதன் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அது தரப்போவது நல்லாட்சியா அல்லது பேயாட்சியா என சந்தேகம் எழும். இதோ சில வேட்பாளர்களின் பின்னணி:

கிராமங்களை கைகழுவும் ஆட்சியாளர்கள்

இந்தியா வாழ்வது கிராமங்களில் என் றார் மகாத்மா காந்தி. ஆனால் இன்றைய தினம் கிராமங்கள் எந்த நிலையில் இருக்கின் றன என்பதைப் பார்த்தால், இந்தியா வாழ் கிறதா அல்லது சாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

‘ஜன்லோக்பால்’- ஒரு மாற்றுக் கருத்து

42 ஆண்டுகளின் தயக்கத்துக்கும் தடு மாற்றத்துக்கும் பிறகு நாடு முழுவதிலும் பல் கிப்பெருகியுள்ள ஊழலை எதிர்கொள்வதற்கு ஒரு நிறுவனமய ஏற்பாடு கண்ணுக்குத் தெரி யத்தொடங்கியுள்ளது. இப்போது அரசு இயந் திரத்தை நகர வைத்துள்ளது அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற் றுள்ள போராட்டமே. இந்த போராட்டத்துக்கு பெரு நகரங்களில் மட்டும் தன்னெழுச்சி யான ஆதரவு இருந்துது. புதுதில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக் கிய ஐந்துநாட்களுக்குள் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மத்தியில் ஒரு லோக்பால் அமைப்பை நிறுவுவதற்கான குழுவை அமைத்தது. இது இந்திய அரசின் கடந்த கால அணுகுமுறையிலிருந்து வேறு பட்டதாக இருந்தது. ஆந்திரமாநிலம் அமைக் கப்படவேண்டும் என்பதற்காக காலவரை யற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு அக்கோரிக்கைக்காக தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது என் பதை நினைவுபடுத்திக்கொள்வோம். ராணு வப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐரம்ஷர்மிளா 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேதினி போற்றும் மேதினம்!

1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது. 

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும். 

இன்றைய கார்ட்டூன்