நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்படுமா?

கடந்த ஜனவரி 27ம் தேதியன்று திருச்சி கலையரங்கத்தில் நான்காவது மாநில நிதிக் குழு ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் 4வது மாநில நிதிக்குழு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள பணிந்தர் ரெட்டி ஐஏஎஸ் தலை மையிலும், நிதிக்குழு மானிய உறுப்பினரும் செயலாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, திருச்சி, திண்டுக் கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி நகராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப் பப்பட்டு கலந்து கொண்டேன்.

மூடப் பழக்கங்களை ஒழிக்க வந்த முன்னோடி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் சமு தாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்திய மாமனிதர். அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னோடியாக இருந்ததைப் போலவே மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிந்தனை யாளர்கள் சிலர் அரசியல் தளத்தில் மட்டுமே இயங்குவர். சிங்காரவேலரோ இவ்விரண்டு தளங்களிலும் இயங்கியவர்; இதில் வியப்பு என்னவென்றால், இவ்விரண்டு தளங்களி லும் அவர் முன்னோடியாக இருந்ததுதான்; இதில் மற்றொரு வியப்பும் உண்டு; அரசியல் உணர்வு வேர்பிடிக்கும் தொடக்கக் காலத்தில் அவர் இவ்வாறு இருந்ததுதான் அந்த வியப்பு; இந்த வியப்பின் ஆளுமை தான் சிங்கார வேலர்.

பெண்ணும் மனித உயிரே...

பெண்களைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், எத்தனை வருணனைகள்! ஓடும் நதிகளிலிருந்து வானத்து நிலவு வரை அனைத்தையும் பெண்களாக உருவகப்படுத்துவது என பெண்களை உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கம் அப்பெண்களைச் சுற்றி அழுத்தமான வட்டம் ஒன்றைப் போட்டு அதனை தாண்டி அவர்கள் வெளியேற விடாமல்

2ஜி: திரைமறைவில் சில உண்மைகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.

இன்றைய கார்ட்டூன்