வேற்றுமையில் ஒற்றுமை: நாட்டின் ஜீவநாடி

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ யாத்திரை மேற்கொள்வது நாடறிந்த விஷயமாகும். மத்திய அரசு அப்படி யாத்திரை செய்யும் இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செலவுக்காக “ஹஜ் கமிட்டி சட்டம்” வழங்கும் சலுகைப்படி மானி யம் வழங்குவதும் நாம் அறிந்த தகவலாகும். அந்த மானியத்துக்கும் சூனியம் வைக்க “மாண்புமிகு” முன்னாள் மாநிலங்களவை யின் உறுப்பினர் “பிரபுல் கொராடியா” என்பவர் (மறந்துவிட வேண்டாம், இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்) உச்சநீதிமன்றத்தில் வழக் கொன்று தொடுத்தார். அவருடைய ஆட்சே பணையே இப்படி மானியம் வழங்குவதே அர சியல் சட்டம் 14 மேலும் 15 விதிக்குப் புறம்பா னது; அதோடு குறிப்பாக விதி 27க்கு விரோத மானது என்று கொதித்துள்ளார். மேலும் அவர் சொல்லும் வாதம், நான் ஓர் இந்து, அரசுக்கு நேர்முக வரியும், மறைமுக வரியும் செலுத்து கிறேன். என் வரியில் ஒரு பகுதி இஸ்லாமியர் கள் செல்லும் ஹஜ் யாத்திரைக்கு விமானக் கட்டணத்துக்கு மானியமாக வழங்கப்படு கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப் படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 280 கோடி வரை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. இப்படி மத்திய அரசு செய் வது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது மட் டுமல்ல, மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி செலவழிப்பது அரசின் கஜானாவை வீணடிப்பதும் ஆகும் என அங்கலாய்க்கிறார்.

சோசலிச நாடாக மாற்றுவதை நிறுத்தும் எண்ணமில்லை: வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

காரகாஸ், பிப்.15-

வெனிசுலாவை ஒரு சோசலிச நாடாக மாற்றும் தனது முயற்சிகளை நிறுத் தும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று அந் நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதியாகத் தெரி வித்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட கதாநாயகர் சைமன் பொலி வாரின் பெயரைத் தனது திட்டத்திற்கு சாவேஸ் சூட் டியுள்ளார். பொலிவாரியப் புரட்சி என்றழைக்கப்படும் சோசலிச நடவடிக்கைகள் தனக்குப்பிறகும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். அந்தப்பேட்டி யில் மேலும் பேசிய அவர், நான் ஒருவேளை அரசிய லிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட எனது அரசியல் சகாக்கள் பொலி வாரியப் புரட்சியை நிறைவு செய்வார்கள்.

புரட்சிகர குணமிக்க இளைஞர்கள் தற்போது நடைபெற்று வரும் அரசி யல் போரை வழிநடத்திச் செல்வார்கள். தற்போ துள்ள எதிர்க்கட்சியின ருக்கு அரசியல் எதிர்காலம் எதுவுமில்லை என்று கூறி யுள்ளார். சர்வாதிகார ஆட் சியை நோக்கி சாவேஸ் சென்று கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டினாலும், ஒவ் வொரு மாற்றத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத் தியே சாவேஸ் செயல்படுத் துகிறார் என்பதை சோச லிஸ்ட் கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்தாலும், அதை மக்க ளின் தீர்ப்பாக சாவேஸ் ஏற்றுக் கொண்டார் என் பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அடுத்த கட் டம் பற்றி சாவேஸ் உறுதி யாகப் பேசிக்கொண்டிருக் கும் வேளையில், வரவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேஸை எதிர்கொள்பவர் யார் என்பதை எதிர்க்கட்சி களால் முடிவு செய்ய முடி யவில்லை. 2012 ஆம் ஆண் டில் நடக்கப்போகும் வெனி சுலா ஜனாதிபதித் தேர்த லில் நின்று வெற்றிப் பெறப் போவதாக சாவேஸ் அறி வித்துள்ளார். வெனிசுலா மக்களுக்காக புதிய வீட்டு வசதித் திட்டத்தையும் அவர் இந்தப் பேட்டியின்போது வெளியிட்டார்.

இன்றைய கார்ட்டூன்