அழகான அத்துமீறல்

கிரிவலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை மகன் சந்திரனைத் தெரியாத வர்கள் அந்த சுற்று வட்டாரத்தில் யாருமே இருக்க முடியாது. அவனுடைய கிளாரினட் இசை கேட்ட வர்களின் இதயங்களில் நுழைந்து மயக்குகிறது, உலுக்குகிறது, கலவரப்படுத்துகிறது, கிளர்ந்தெழத் தூண்டுகிறது. அவன் ஒன்பதாம் வகுப்பில் தவறியதும் பள்ளிக் கூடத்துக்கும் தனக்குமான உறவைத் துண்டித்துக் கொண்டான். அதற்கு முக்கியக் காரணம் அவனல்ல, பள்ளிக்கூடம் தான். அது அவன் மீது முட்டாள், மக்கு, உருப்படாதவன், மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாதவன் போன்ற முத்திரைகளைக் குத்தியதோடு நிற்காமல் வண்டி வண்டியாய் குற்ற உணர்வுகளையும் ஏற்றிவிட்டது.

சமகால அரசியலும் இலக்கிய அரசியலும்

பொதுவாக தேர்தல் வந்துவிட்டால் நவீன தமிழ் இலக்கிய உலகில் இடதுசாரி இலக்கியவாதிகளிடம் பிற இலக்கியவாதிகள் இந்தத்தடவை யாரைப் பதவியில் அமர்த்தப் பாடுபடப்போறீங்க என்பதில் துவங்கி எவ்வளவு பெரிய புரட்சிகரமான தலைவர்களை எல்லாம் இப்படி சீட்டுக்காக அலைய வச்சீட்டிங்க என்பது வரைக்கும் பல கேள்விகளை வருத்தங்களை முன்வைப்பார்கள். புதுசாகக் கேட்பவர்களுக்கு அடடா இவ்வளவு அக்கறையாக நம்ம கட்சியைப்பத்திக் கரிசனமாப் பேசறாங்களே என்று தோன்றும். தோழர் சுர்ஜித் எல்லாம் எவ்வளவு பெரிய தியாகத்தின் அடையாளம்? அவரைப்போயி... வாசல்ல கொண்டுபோயி நிறுத்தீட்டிங்களே என்று ஒரு மூத்த அமைப்புசாரா இலக்கியவாதி ஒருமுறை என்னிடம் கேட்டபோது எங்களோடு பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளம் தோழர் ஒருவர் கேவிக்கேவி அழுதுவிட்டார். நாம கூட நம்ம தலைவர்களின் தியாகத்தை இப்படி மதிச்சதில்லியே என்றுகூட அச்சமயத்தில் நமக்குத் தோன்றிவிடும்.

கலைஞரின் இளைஞனும் தமிழக இளைஞனும்

காலம் போன காலத்திலேயாவது இளைஞர்களைப்பற்றின கவலை கலைஞருக்கு வந்து அதற்காக ஒரு படமும் எடுத்திட்டாரே என்று நம்ம்ம்பி சொந்தக் காசில் டிக்கட் வாங்கி இளைஞன் படத்துக்குப் போய் - எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க இவிங்க ரொம்ப நல்லவிங்க என்று சொல்லிச் சொல்லி உள்ளே வைத்து அவர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு கடைசி வரை இருக்க முடியாமல் வெளியே அலறி அடித்து ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்.அந்த சோகக்கதையைச் சொல்லி வாறேன் கொஞ்சம் கேளுங்க..

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி

நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

கண்துடைப்பு இலவசங்கள்

பண்ணைகளிலே பணி செய்த பண் ணை அடிமைகளுக்கு, அவர்கள் திரும ணத்தின் போது தாலியும், கூரப்புடவை யும், தனிக் குடித்தனம் போகும்போது குறுணி நெல்லும் பண்ணையார்கள் இலவசமாக தருவார்கள். பண்i™ அடிமைகளுக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க வொண்ணா நிகழ்ச்சியாக அவர்களது நெஞ்சங்களிலே நிழலாடும். குடும்பம் முழுவதும், வாழ்நாள் முழுவதும் பண் ணைக்கு நாம் கடமைப்பட்டவர்கள் என் பதை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி,மார்ச்.22-

திருச்சியில் நடைபெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர் கள் பட்டியலை மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

இராஜராஜம்

மன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறுக்க முடியாத வரலாற்று பிம்பம். ஆயிரக்கணக்கான தமிழகத்தின் குறு, பெரு மன்னர்களும், பேரரசுகளும் வந்து சென்றாலும் ராஜராஜன் பேசக்கூடிய மனிதனாக வாழ்ந்துள்ளான். தஞ்சை பெரியகோவிலின் 1000 மாவது ஆண்டு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியதோடு அமைச்சர் பெருமக்களும் தங்களின் ஆட்சியை மன்னர் கால ஆட்சியோடு ஒப்பிட்டு பேசியதன் துவக்கமே ஆசிரியரின் இந்த புத்தக உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்..

சிறுபான்மையினர் வளர்ச்சியும் இடது முன்னணி அரசும்

எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மை யினர் உரிமைகளைப் பாதுகாத்திடாமல் ஜன நாயகத்தை ஒருங்கிணைத்து விரிவாக்கிட முடியாது. சிறுபான்மையினருக்கு சம உரிமை கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் உலகின் பலநாடுகளிலும் இன் றளவும் தொடர்கிறது. இப்போது அது வெகு ஜன இயக்கங்களின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் மாறி இருக்கிறது. சிறுபான்மை யினருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே ஓர் அரசு தன் கடமை களை முழுமையாகச் செய்ததாகக் கூற முடியும்.

கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு

சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

திமுவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : மேலூருக்குள் காரில் போன ரூ. 5 கோடி எங்கே?

மதுரையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்க ளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் திமுகவினரை விட்டு விட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்துத்துறை களிலும் தோல்வியடைந்த திமுக, எப்படி யாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வகை யில் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கியுள்ளது.

63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்!

“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன். ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து” 

திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் வேறு வழியின்றி திமுக 63 இடங்களை தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகளுக்கு கொடுத்த பிறகு வெளியிட்ட வேதனை வார்த்தை கள் இவை. அவர் குறிப்பிடுகிற 63 நாயன் மார்களைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். இந்தப்பெரிய புராணத்தையும், ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று திமுகவைத் துவக்கிய அண்ணா ஒரு காலத்தில் வாதா டினார். அந்த உரை கூட “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. 

இடதுசாரி அரசுகளை காப்போம்!

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத் தகைய காலகட்டத்தில் கவனிக்கத்தக்க முக் கிய அம்சமாக, வலதுசாரிக் கொள்கைகள் தீவிரமாக தலைதூக்கி வருகின்றன. உலகின் எந்தப்பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. இத் துடன், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதி யாகவும் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் தொழி லாளி வர்க்க எதிர்ப்புக் கருத்துக்களும் தீவிர மாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது, மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களுக்கு எதி ரான தாக்குதலாக கூர்மைப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப்பின்னணியில், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்த லோடு மேற்குவங்கம் மற்றும் கேரள சட்ட மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

மெகா ஊழலுக்கு ஊற்றுக்கண் எது?

இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு.

நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது.

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்

அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது. 

இன்னும் ஒரு 2ஜி ஊழல்

2005-06 துவங்கி தொடர்ந்து வந்த ஆறு வருடங்களாக இந்திய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கைகளில் காங்கிரஸ் தள்ளு படி செய்த கார்ப்பரேட் நிறுவன வருமான வரி யின் அளவு எவ்வளவு தெரியுமா? 3,74,937 கோடி ரூபாய். இது 2ஜி மெகா ஊழலின் கிட் டத்தட்ட மூன்று மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி எழுதித்தீர்க்கும் தள்ளுபடி யின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என்றே தகவல்கள் (நிறைய) கூறுகிறது. 2005-06ல் ரூ.34,618 கோடியாக இருந்தது, இந்தாண்டு 155 சதமானம் உயர்ந்து ரூ.88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அரசு, “நிறுவன வருமான வரியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.240 கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்தப்பணம் இந்தியாவிலிருந்து அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு கறுப் புப்பணமாக தினசரி செல்கிறது” என்று வாஷிங்டன் சர்வநிதியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

உதவி செயுங்கள் தோழா...................

நேற்று வரை சரியாக இருந்த எனது தலத்தில் login திடீர் என்று வரவில்லை. என்ன காரணம்... add a gadget என்ற இடத்தில்
Followers
Followers Experimental

Displays a list of users who follow your blog.

This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!


By Blogger


என்று வருகிறது என்ன கரணம்.....?
உதவி செயுங்கள் தோழா...................
மேற்கொண்டு நான் என்ன செய்ய..........



என்றும் தோழமையுடன்.....
S.Sathya Seelan
cpim.marxist@gmail.com
http://cpimmarxist.blogspot.com/
cell:9884642030

அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமைகள், துன்பங்களைத் தரும் கொள்கையை தடுத்திட...

நாட்டின் தலைநகர் தில்லியில், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்தார் கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் லட்சக்கணக் கான தொழிலாளர்கள், தங்களது ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து வந்தார்கள். 1. விலை வாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து; 2. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்து; 3. கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் ஊக்கு விப்பு உதவிகள் தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்; 4. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தேசிய நிதியம் உருவாக்கு; 5. பட் ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதை நிறுத்திடு.

அவர் போட்ட முற்றுப்புள்ளிகள்

முதல் விதைகளாய்

மார்க்சியத்தை

எது தூவியது இந்த நாட்டில்

செக்கச் சிவந்த

சிங்காரவேலர் கையைத் தவிர?

மூலதனத்தின்

பக்கங்களில் அவர் மூளை,

போகவில்லை

பொழுதென்று போகவில்லை!

பூகோளவியல் ஆண்களின் துறையா?

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென் றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்

வாழ்க்கையின் தேர்வு

வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட

மக்கள் துணிந்து விடுவார்களானால்

விதியால் என்ன செய்ய முடியும் -

வழிவிட்டு நிற்பதைத் தவிர ?

இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..

-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.

விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுதில்லி, பிப். 25-

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்க வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகில இந்திய விவசாயி கள் சங்கம் இதுதொடர் பாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சொன்னதையே திரும்பச் சொல்லும் உரை மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி தாக்கு

ஒவ்வொரு ஆண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, செல்லும் திசை தெரியாது அரசு தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று (பிப்.23) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தில்லியில் உழைப்பாளர் பேரணி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனிய னில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி மக்கள் தலையில் ஏகாதிபத்திய சக்தி கள் ஏற்றிவருகின்றன. தனியார் துறையின், பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டை யை பாதுகாக்க, இவை நடத்தும் கடும் உழைப்புச் சுரண்டல் தொடர மீட்பு நடவடிக் கைகளும், ஊக்குவிப்புத் திட்டங்களும் ஜாம் ஜாம் என அமலாக்கப்படுகின்றன. உழைப் பாளி மக்களின் வேலைக்கு, ஊதியத்திற்கு, சமூக பாதுகாப்பிற்கு, பென்சனுக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக கடந்த செப்டம்பர் 7ல் உலகம் முழுவதும், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுகுகூரு) அறைகூவலுக்கிணங்க வேலைநிறுத்தங் களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரான்சில் ஒரே மாதத்தில் 3 வேலைநிறுத்தம் நடந்தது.

இன்றைய கார்ட்டூன்