எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

இன்றைய கார்ட்டூன்