எழுச்சிமிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழி

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி என்று அழைக்கப்படும் தாராளமய - தனியார்மய - உலகமயப் பொருளாதாரக் கொள் கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் தாண்டிக் குதித்தார்கள். இந்தக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசாக ஆக்கப் போகிறது, அமெரிக்காவிற்கு நிகராக மாற்றப் போகிறது, சீனாவைத் தாண்டி முன்னேறப் போகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். இதை நம்பி சில எதிர்க்கட்சிகளும், சில விவசாய சங்கங்களும், சில தனி நபர்களும் புதிய கொள் கைகளை வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள். அன்று அநேகமாக இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தான் என்றால் அது மிகையல்ல, உண்மை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தக் கொள்கைகளை எதிர்த்து நிறைவேற்றிய தீர்மானத்தில், இது இந்திய நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும், ஏழைகளின் அடிப்படைத் தேவைகளை சீர்குலைக்கும், ஒரு சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கி, பெரும் பகுதி மக்களை வாழ வழியின்றிச் செய்திடும் என்று விவரமாக எடுத்துக் கூறியது. அன்றைக்கு ப.சிதம்பரம் மற்றும் காங் கிரஸ் கட்சித் தலைவர்கள் ‘‘இந்தக் கொள் கைகள் இந்தியாவைப் பளபளப்பாக ஒளிரச் செய்யப் போகிறது, விரைவில் ஒளிரும் இந் தியாவைப் பார்ப்பீர்கள்’’ என்றார்கள். ஆனால் ஒளிரும் இந்தியாவிற்குப் பதிலாக நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் பட்டினி கிடக் கும் இந்தியாவை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்று நமது நிலைபாட் டைக் கேலி செய்து ப.சிதம்பரம் அளித்த பேட்டி என்ன தெரியுமா? ‘‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் பழைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் புதிய நிலைமை என்ன வென்று தெரியாது. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பைகளிலும் ஏராளமான காசை இந்தக் கொள்கைகள் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றன. ஆகவே அவர்கள் அந்தக் காசைக் கொண்டு அரிசி உட்பட எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள லாம். அவர்கள் பட்டினிக் கிடந்து பதற வேண் டிய அவசியம் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் தேவையின்றிக் கவலைப்பட வேண்டாம்,’’ என்றார்.

இன்று பதினைந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் யாரை வாழ வைத்திருக்கின்றன, யாருடைய வாழ்வை அழித்திருக்கின்றன என்பதைச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு நிறுவனமும் சொத்து மதிப்பு (ரூபாய்- கோடிகளில்) 1990இலும் 2009இலும் பின்வருமாறு:

நிறுவனம் 1996 2009

1. அம்பானி 3241 4,25,187

2. டாடா 6851 2,30,827

3. ஜிண்டால்ஸ் - 56,937

4. எல் & டி 1130 44,544

5. மஹிந்த்ரா 620 38,363

6. ஜெயப்பிரகாஷ் 484 25,202

7. டிவிஎஸ் 929 21,267

8. பஜாஜ் 1228 28,521

கடந்த பதினைந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 60 மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 100 மடங்கிற்குக்கூட அதிகரித்துள்ளன. தமிழ கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவ காரத்தில் சம்பந்தப்பட்ட ஆ.ராசா மற்றும் கலைஞர் குடும்பச் சொத்துக்களும் ஏறத்தாழ இதே அளவு உயர்ந்திருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி நாட்டின் செல்வத்தை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கவர்ந்து சென்றுள்ளனர். வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் முதலாளித்துவம் (உசடிலே உயயீவையடளைஅ) என்று இதைத்தான் அழைக்கிறார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைகளால் இந் தியா ஒளிரும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியதுபோல் இந்தியா ஒளிர்வதற்குப் பதி லாக, ஒழிந்துகொண்டு, அழிந்துகொண்டுதான் இருக்கிறது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளார்கள். ஒரு நாளைக்கு 50 பேர், 30 நிமிடங் களுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள் கிறார் என்ற முறையில் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்று பரிசீ லிக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடதுசாரிக் கட்சிகளும் மூன்று முக்கிய காரணங்களைக் கூறுகின்றன.

முதலாவதாக, அரசு, வேளாண் இடு பொருட்களுக்கு அளித்து வந்த மானியங் களை வெட்டிக் குறைத்தது. அதன்மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கான செலவினங் கள், போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகி யவை உயர்ந்தன, உயர்ந்துகொண்டே இருக் கின்றன. உர மானியம் சென்ற ஆண்டு செல வினத்தைவிட 3 ஆயிரம் கோடி ரூபாய் வெட் டப்பட்டிருக்கிறது. யூரியா விலை 10 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. உரம் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படி யாக மூடப்பட்டு வருகின்றன. உரம் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கைவிடவும் அரசு தீர்மானித் திருக்கிறது. விரைவில் விவசாயிகள் முழுமை யாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் தயவில் உரங்களை, அவர்கள் நிச்ச யிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய கட் டாயத்திற்குத் தள்ளப்பட இருக்கிறார்கள்.

விவசாய இடுபொருட்களின் விலை களை இனி அரசு நிர்ணயிக்காது. மாறாக, இவற்றை சந்தை சக்திகள் (ஆயசமநவ குடிசஉநள) நிர்ணயிக்கும் என்று அரசு கூறுகிறது. இதன் பொருளைப் புரிந்துகொள்வது எளிது. அதா வது இனி வேளாண் இடு பொருட்களின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக் காது, அரசு அவற்றின் விலைகளை நிர்ணயிக் காது. மாறாக, இவற்றை ஏகாதிபத்திய கார்ப் பரேட் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்தி டும். இவ்வாறு மான்சாண்டோ போன்ற நிறு வனங்களின் தயவில் விவசாயிகளைத் தள் ளிவிட அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டாவதாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களின் விலைகள் குறைந்துகொண்டே போகின்றன.

மூன்றாவதாக, வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளித்து வந்த கடன் வசதிகள் குறைந்தன. நாட்டில் 62 சதவீதம் பேர் ஏழை விவசாயிகள். இவர்க ளுக்கு அரசு நிதி நிறுவனங்கள் மூலமாகக் கடன் பெறும் வசதி கிடையாது. அரசாங்கமும் பொது முதலீட்டை அதிகப்படுத்தி, அவர் களுக்கு உதவ முன்வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள், தனியார் கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களது கடன் வலையில் வீழ்ந்த விவசாயிகள் மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அநேகமாக அதில் சிக்கியவர்களில் பெரும் பகுதியினர் தற்கொலைப்பாதையைத்தான் தேடிச் சென்றிருக்கிறார்கள்.

விவசாயிகளில் பெரும்பகுதியினர் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, விவசாயத் தொழி லாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி 50 விழுக்காட்டிற்கும் மேலான சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயத்தைத் தொடர ஆர்வம் காட்ட வில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோ ராண்டும் 33 லட்சம் விவசாயிகள் இவ்வாறு நிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள்.

இந்த மூன்றும்தான் அடிப்படைக் கார ணங்கள் என்று இடதுசாரிகள் மட்டுமல்ல, அரசு நிர்ணயித்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலை மையிலான விவசாயிகளுக்கான தேசிய ஆணையமும் தெரிவித்துள்ள உண்மையா கும். இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் உட்பட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காண எந்த ஆலோச னையையும் அளித்திடவில்லை. மாறாக விவசாயிகளையும், கிராமங்களையும் வெளி நாட்டு முதலாளிகள் கையிலே ஒப்படைத்து, நடைபெறும் தற்கொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

விவசாயத் தொழிலாளர்கள் வேலையில் லாததால் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுத்திட ஐ.மு. கூட்டணி-1 ஆட்சிக்காலத்தில் இடதுசாரி களின் நிர்ப்பந்தத்தின்பேரில் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் கிராமப்புற விவசா யத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறு நாள் வேலையாவது அளிக் கப்பட்டது. ஆனால் இப்போது என்ன நிலை மை? பட்டினி கிடந்து வந்த விவசாயிகளுக்கு சற்றே பசியாற்றி வந்த தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் இன்றைய தினம் பல இடங்களில் கொள்ளையடிப்பவர்களின் கூடாரங்களாக மாறிப்போயிருக்கின்றன.

நாட்டின் இறையாண்மையே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. நாடும் நாட்டு மக்களும் தங்கத் தட்டில் வைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விருந்தாக்கப் பட்டு வருகிறார்கள். பட்ஜெட்டில் கூட பன் னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவ் வாறு காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் பன்னாட்டு நிறுவ னங்களுக்குச் சேவை செய்யும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

20.8 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக உலா வருகிறது என்பது சமீபத்திய செய்தி. இதில் உள்நாட்டில் உலாவும் கறுப்புப் பணம் கணக்கில் சேராது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் நாட்டை பன் னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக ஒப் படைப்பதற்கு முன்னர், இவர்களை அதிகாரத் திலிருந்து விரட்ட வேண்டிய அவசியம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு துனீசியா, எகிப்து, லிபியா போன்று எழுச்சி மிக்க மக்கள் போராட்டம் ஒன்றே வழியாகும்.

இன்றைய கார்ட்டூன்