முதலாளித்துவ சமூகம் அப்படித்தான்!

வாழ்க்கை நிலைகளில் ஏற்பட்ட அவலங்களால் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒன்றரை லட்சத்துக்கு மேற் பட்ட விவசாயிகள் நாடுமுழுவதிலும் தற் கொலை செய்து கொண்ட சோக வரலாறு தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிகழ்வு. ஆனால் தொழிலாளிகளின் மத்தியிலும் தற்கொலைச்சாவுகள் நிகழ்ந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அவை யும் அண்மை ஆண்டுகளில் பதிவாகியுள் ளன. அதுவும் தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரான திருப்பூரில் இது கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை நீங்கள் அறிவீர்களா?
தமிழக அரசின் குற்றச்செயல்கள் பதி வேடுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தி இது . 2007 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை -526. இதே ஆண்டில் மாநில அளவிலான சராசரி 373. அதாவது இந்த எண்ணிக்கை 41 சதவீதம் கூடுதலானது. 2008ம் ஆண்டில் பதிவான தற்கொலைகளின் எண் ணிக்கை 555. மாநில சராசரி 380. இது 46 சதவீதம் கூடுதல். 2009ம் ஆண்டில் பதி வான தற்கொலைச் சாவுகளின் எண் ணிக்கை 491. இதுவும் மாநில சராசரியை விடக் கூடுதலானது தான். வேதனை யளிக்கும் இந்த நிகழ்வுகளின் பின்னணியை விளக்கும் கட்டுரையொன்று டிசம்பர் 8ம் தேதி ‘பிரன்ட்லைன்’ இதழில் வெளியிடப்பட்டது.

திருப்பூரில் இயங்கி வரும் 6200 ஆயத்த ஆடை நிறுவனங்களில் 4லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களில் சரிபாதி அளவில் பெண் தொழி லாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்த தொழி லாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாவட் டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். இப்போது ஒரிசா , பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பூர் நகர உழைப்பாளர் படையில் இணைந்துள்ளனர். ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் அடிப்படை யிலேயே உற்பத்தி நடைபெற்றுவருவதால், ஆண்டு முழுவதும் ஒரே சீரான முறையில் உற்பத்தி என்பதற்கு பதிலாக, சில பருவங்க ளில் இரவுபகல் என்ற வேறுபாடின்றி கடும் மும்முரத்துடன் வேலை நடைபெறுவதும் மற்ற சில பருவங்களில் வேலையும் கூலியும் இன்றி தொழிலாளர்கள் அவதிப்படுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

இன்றைய கார்ட்டூன்