`ரட்சகனே’ போற்றி! போற்றி!

‘ஒளிரும் இந்தியா’ இன்று சூரிய ஒளியில் நன்றாகவே ஒளிர்ந்து வருகிறது. பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 22,000த்தை தாண்டி விட்டன. நிஃப்டி பங்குச் சந்தைப் புள்ளிகளும் சாதனை படைத்திருக்கின்றன. “மக்களவைத் தேர்தல்களில் மோடி தலைமையில் தேஜகூட்டணி பதவிக்கு வரு வதற்கான சாத்தியமே பங்குச் சந்தையின் இத்தகைய உற்சாகத்திற்கு காரணமாக இருப்பது போல் தெரிகிறது” என நிதிக் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாக பேசியிருக் கிறார். (`ஹிந்துஸ்தான் டைம்ஸ்-மார்ச் 8)

விவசாயிகள் தற்கொலை : அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் தொடர்வதாய் பறைசாற்றுகின்றனர். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை காணலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் முது கெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவ சாயத்துறை பல்வேறு ஆண்டுகளாக கடும்நெருக்கடிகளைச் சந்தித்து வருவது நாம்அறிந்த ஒன்று. இந்த நெருக்கடிகள் மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் தொடக்கத்தி லிருந்தே பெருகி வருகின்றன என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஒரு புறம் வேளாண்நெருக்கடிகளும் மறுபுறம் அவ்வேளை களில் உதவ வேண்டிய அரசின் செயல்படாத தன்மை மட்டுமல்லாது விவசாயி களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும் விவசாயிகளை விரக்தியின் விளம்பில் தள்ளுகின்றன. இதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாட் டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்!

விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல் :1.ஜோதிபாசு/மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)2. கிருஷ்ண சின்கா/ காங்கிரஸ் (பீகார்)3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)4. ஷேக் அப்துல்லா/ தேசிய மாநாடு (காஷ்மீர்)5. பி.சி.ராய்/ காங்கிரஸ்.(மேற்கு வங்கம்)6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)7. லால்டெங்கா/ மிசோ தேசிய முன்னணி (மிசோராம்)8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்)9.மாணிக் சர்க்கார்/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா)10. என். ரெங்கசாமி /என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)இந்த பட்டியல் உருவாக்கியதில் உள் ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :8 தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல் பட்டதும்.8மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.8 எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.8 எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.

இன்றைய கார்ட்டூன்