`ரட்சகனே’ போற்றி! போற்றி!

‘ஒளிரும் இந்தியா’ இன்று சூரிய ஒளியில் நன்றாகவே ஒளிர்ந்து வருகிறது. பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 22,000த்தை தாண்டி விட்டன. நிஃப்டி பங்குச் சந்தைப் புள்ளிகளும் சாதனை படைத்திருக்கின்றன. “மக்களவைத் தேர்தல்களில் மோடி தலைமையில் தேஜகூட்டணி பதவிக்கு வரு வதற்கான சாத்தியமே பங்குச் சந்தையின் இத்தகைய உற்சாகத்திற்கு காரணமாக இருப்பது போல் தெரிகிறது” என நிதிக் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாக பேசியிருக் கிறார். (`ஹிந்துஸ்தான் டைம்ஸ்-மார்ச் 8)

விவசாயிகள் தற்கொலை : அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் தொடர்வதாய் பறைசாற்றுகின்றனர். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை காணலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் முது கெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவ சாயத்துறை பல்வேறு ஆண்டுகளாக கடும்நெருக்கடிகளைச் சந்தித்து வருவது நாம்அறிந்த ஒன்று. இந்த நெருக்கடிகள் மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் தொடக்கத்தி லிருந்தே பெருகி வருகின்றன என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஒரு புறம் வேளாண்நெருக்கடிகளும் மறுபுறம் அவ்வேளை களில் உதவ வேண்டிய அரசின் செயல்படாத தன்மை மட்டுமல்லாது விவசாயி களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும் விவசாயிகளை விரக்தியின் விளம்பில் தள்ளுகின்றன. இதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாட் டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்!

விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல் :1.ஜோதிபாசு/மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)2. கிருஷ்ண சின்கா/ காங்கிரஸ் (பீகார்)3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)4. ஷேக் அப்துல்லா/ தேசிய மாநாடு (காஷ்மீர்)5. பி.சி.ராய்/ காங்கிரஸ்.(மேற்கு வங்கம்)6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)7. லால்டெங்கா/ மிசோ தேசிய முன்னணி (மிசோராம்)8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்)9.மாணிக் சர்க்கார்/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா)10. என். ரெங்கசாமி /என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)இந்த பட்டியல் உருவாக்கியதில் உள் ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :8 தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல் பட்டதும்.8மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.8 எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.8 எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.

சிறந்த இந்தியா உருவாக தேர்தலைப் பயன்படுத்துவோம்

பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இப்போது தேர்தல்களுக்கு நீண்ட காலம் திட்டமிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 முடிய ஐந்துவாரங்களில் ஒன்பது கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகஎண்ணிக்கையிலானதாகும். தேர்தல்நடத்திட நீண்டகாலம் திட்டமிடப்பட்டிருப் பதற்கு சிலர் மத்தியிலிருந்து சில முறையீடுகள் இருந்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 முதல்329ஆவது பிரிவுகளின் கீழ் “நாடாளுமன் றத்திற்கான அனைத்துத் தேர்தல்கள் குறித்தும் மேற்பார்வை, தேர்தல் வாக்காளர் பட்டி யல்களைத் தயார் செய்வதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்தும் விதம் ஆகியவை குறித்து’’ தேர்தல் ஆணையம் மட்டுமே அதிகாரம் படைத்திருக்கிறது. எனவே, நாட்டிலுள்ள வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துவாக்காளர்களும் நியாயமாகவும் நேர்மை யாகவும் வாக்களிக்கக்கூடிய விதத்திலும், அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்திலும் தேர் தலை நடத்திட வேண்டியதும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குட்பட்ட கடமையாகிறது. நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, தேர்தல்களை சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என கமுக்கமான முறையில் தகவல்களைப் பெறக்கூடிய அதி காரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும், அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்தகைய இடங்களில் அமைதியான முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடுவதற்காக, அந்த இடங்களுக்கு தேவையான அளவிற்குப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் நாடகம் அரங்கேறாது...

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற வெறியில் பல நாடகங்களை நடத்தி வருகிறது. அதிலே ஒரு நாடகமாக இஸ்லா மியர் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்றுபெயரும் வைத்துள்ளது. அவர் களின் உரிமைகளுக்காகவும் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டிருக்கிறதாம்.., எந்த ஏமாளி யும் பிஜேபியின் இந்த நாடகத்தை நம்பமாட்டான். ஆனால், நம்ப வேண்டும்... ஏமாற்ற வேண்டும். . . என்பதற்காக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.

மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்




மார்க்ஸ் இறந்து 131 ஆண்டுகளாகின்றன. அவர் பிறந்து 196 ஆண்டுகள் முடியப் போகிறது. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்துக்கள், அவர் உருவாக்கிய தத்துவம், நடைமுறையிலும், கருத்துத் துறையிலும் இன்றும் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது.மானுடத்தின் எதிர்காலம் சோசலிசம், அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். ஆனால் இன்றுவரை லட்சோப லட்சக்கணக்கான மக்கள் விரும்பும் சோசலிசம் உலகம் முழுவதிலும் மலரவில்லை.
நெருக்கடி நிறைந்த அமைப்பு என்று மிகச் சரியாக மார்க்ஸ் கணித்த, வரலாற்று வளர்ச்சியில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிய முதலாளித்துவ அமைப்பு இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள இவ்வுலகில், சோசலிச சமூகத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட துவக்க முயற்சிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இவையெல்லாம் உண்மையாக இருந்தும், மார்க்ஸின் தத்துவமும் அவரது தீர்க்கதரிசனப் பார்வையும் இன்றும் வலுவானவை, பொருள்மிக்கவை என்றே கணிசமான பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் ரகசியம் என்ன?முதலாவதாக, மானுட சிந்தனை ஓட்டத் தில் ஒரு மிக அடிப்படையான பங்களிப்பின் மூலம் புதிய சிந்தனைக்கு வித்திட்டார் அவர்.

15 ஆயிரம் குஜராத்தியர்களும் 15 சதவிகித தமிழர்களும்


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் திகைப் பில் ஆழ்த்துகிறது.

சிலை வழியே ஒரு வலை


ர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயர சிலை வைக்கிறார் நரேந்திர மோடி. அதை காங்கிரஸ் கட்சியும் மற்றவர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த சிலை சார்ந்த அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?”

 -சன் நியூஸ் தொலைக்காட்சியின் (நவ.1)  ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர் முன்வைத்த கேள்வி.  காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராசன், வரலாற்று ஆய்வாளர் காந்தராஜ் ஆகியோரும் பங்கேற்ற இந்த விவாதத்தில் நான் தெரிவித்த கருத்துகளின் சாரம்:

1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!

1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!டெல்லி ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணி!

வீட்டுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் உண்மையான விலை 850 ரூபாய். மத்திய அரசு இதற்கு 450 ரூபாய் மானியம் தந்து, வெறும் 403 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதனால்தான் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் விலை 1200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இப்படி மானியம் தந்து, விலை குறைத்து விற்பதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மத்திய அரசு சொல்லி வந்தது.

இதை எல்லோரும் உண்மை என்றுதான் நம்பி வந்தார்கள் ஆனால் உண்மையில் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. இப்போதுள்ள விலையை விட 3 மடங்கு விலை குறைத்து விற்கலாம். இப்படி பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் உயர்த்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனமும், சில மத்திய மந்திரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து வந்தார்கள்.

இன்றைய கார்ட்டூன்