ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.