அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமைகள், துன்பங்களைத் தரும் கொள்கையை தடுத்திட...

நாட்டின் தலைநகர் தில்லியில், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்தார் கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் லட்சக்கணக் கான தொழிலாளர்கள், தங்களது ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து வந்தார்கள். 1. விலை வாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து; 2. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்து; 3. கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் ஊக்கு விப்பு உதவிகள் தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்; 4. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தேசிய நிதியம் உருவாக்கு; 5. பட் ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதை நிறுத்திடு.

அவர் போட்ட முற்றுப்புள்ளிகள்

முதல் விதைகளாய்

மார்க்சியத்தை

எது தூவியது இந்த நாட்டில்

செக்கச் சிவந்த

சிங்காரவேலர் கையைத் தவிர?

மூலதனத்தின்

பக்கங்களில் அவர் மூளை,

போகவில்லை

பொழுதென்று போகவில்லை!

பூகோளவியல் ஆண்களின் துறையா?

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென் றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்

வாழ்க்கையின் தேர்வு

வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட

மக்கள் துணிந்து விடுவார்களானால்

விதியால் என்ன செய்ய முடியும் -

வழிவிட்டு நிற்பதைத் தவிர ?

இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..

-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.

விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுதில்லி, பிப். 25-

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்க வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகில இந்திய விவசாயி கள் சங்கம் இதுதொடர் பாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சொன்னதையே திரும்பச் சொல்லும் உரை மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி தாக்கு

ஒவ்வொரு ஆண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, செல்லும் திசை தெரியாது அரசு தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று (பிப்.23) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தில்லியில் உழைப்பாளர் பேரணி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனிய னில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி மக்கள் தலையில் ஏகாதிபத்திய சக்தி கள் ஏற்றிவருகின்றன. தனியார் துறையின், பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டை யை பாதுகாக்க, இவை நடத்தும் கடும் உழைப்புச் சுரண்டல் தொடர மீட்பு நடவடிக் கைகளும், ஊக்குவிப்புத் திட்டங்களும் ஜாம் ஜாம் என அமலாக்கப்படுகின்றன. உழைப் பாளி மக்களின் வேலைக்கு, ஊதியத்திற்கு, சமூக பாதுகாப்பிற்கு, பென்சனுக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக கடந்த செப்டம்பர் 7ல் உலகம் முழுவதும், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுகுகூரு) அறைகூவலுக்கிணங்க வேலைநிறுத்தங் களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரான்சில் ஒரே மாதத்தில் 3 வேலைநிறுத்தம் நடந்தது.

இன்றைய கார்ட்டூன்