பூகோளவியல் ஆண்களின் துறையா?

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென் றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

பூகோளவியல் ஆண்களின் துறை யாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அதி லும் குறிப்பாக... உலக வரைபடம், மற் றும் அது தொடர்பானவற்றுடன் பெண் களை இணைத்து பார்ப்பதில்லை. வரை படம் என்பது என்ன? வெறும் நாட்டின் எல்லைகளை மட்டும் குறிப்பிடுவது அல்ல. மாறாக, சமூகத்தின் அரசியல், மதம், கலாச்சார பின்னணியையும் வெளிப்படுத்தும் கண்ணாடி என்று வரை பட அறிஞர்கள் (கார்டோகிராபர்கள் / மேப் மேக்கர்ஸ்) கூறுகின்றனர். உலக வரலாற்றில் முதல் முறையாக வரை படத்தை வழங்கியவர் மெர்கேட்டர் என் பவர். 1512ம் ஆண்டு அவர் பிறந்தபோது உலகின் பூகோள அமைப்பு பற்றிய புரி தலே குறைவுதான். மற்ற நாட்டின் மீது படையெடுக்க உதவும் வரைபடத்தை (inஎயளiடிn அயயீ) மெர்கேட்டர் தயாரித் ததாக ஹங்கேரி நாட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, கத்தோலிக்கர் களால் வெறுக்கப்பட்டார். புரோட்டெஸ் டென்ட்டுகள் அதிகமுள்ள ஸ்பெயின் நாட்டில் தஞ்சமடைந்தார். அங்கும் பிரச்சனை ஏற்பட்டு, ஜெர்மனி சென்றார். வரைபட அறிவியலின் தந்தையாக மெர்கேட்டர் கருதப்படுகிறார். அவர் தயாரித்த ‘அட்லஸ்’ 1594ல் அவர் மரண மடைந்த பின்னர் வெளியிடப்பட்டது. மெர்கேட்டரைத் தொடர்ந்து வரைபடத் தயாரிப்பில் பல ஆண் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். பதினாறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்களுக்கு தங்கள் அதி காரத்தை நிலைநிறுத்த தங்கள் நாட்டு வரைபடம் மட்டுமின்றி, அண்டை நாடுக ளின் வரைபடங்களும் தேவைப்பட்டது.

மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள கார்டோகிராபர்களில் பெண்கள் உள்ளனரா என ஆராய்ந்தால், பதினெட் டாம் நூற்றாண்டிலேயே பெண் வரைபட அறிவியலாளர்கள் இருந்ததை காண முடிகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடு களில் பெண் வரைபட அறிஞர்கள் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென் றும் ஹட்சனும் அவரது கூட்டாளிகளும் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. பெண் வரைபட அறிவியலாளர் பெரும் பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்களாக இருந்தனர்.

1762ல் மேரி பிடில் என்ற பெண்தான் முதல் பெண் வரைபட அறிவியலாளர் எனத் தெரிகிறது. நிக்கொலஸ் ஸ்கல் - அபிகெய்ல் ஹீப் தம்பதியின் மூத்த மக ளான மேரிக்கு 19 வயதில் திருமணம். ஒன்றன்பின் ஒன்றாக பத்து குழந்தை கள் அவளுக்கு பிறந்தன. உலக வரை படத்தைப் பார்த்து ஆர்வம் கொண்ட மேரி, அத்துறையில் கவனம் செலுத்தி, நன்கு தேர்ச்சி பெற்றாள். அவளது கணவன் அவளை கைவிட்ட பொழுது, அவளுடைய இந்தத் திறமைதான் அவ ளின் குடும்ப பொருளாதாரத்தை சமா ளிக்க உதவியது. அமெரிக்க வரைபடத் துறையில் மேரி பிடிலுக்கு முக்கிய இடம் உண்டு.

1799ல் எலிசா கால்ஸ் என்ற பெண் தனது தந்தை கிறிஸ்டோபர் கால்சுக்கு வரைபடத்தயாரிப்பில் உதவிசெய்து வந்தார். அமெரிக்காவிலுள்ள சாலைக ளின் வரைபடத்தை முதலில் வெளி யிட்ட எலிசா தனது 24வது வயதில் மர ணமடைந்தார். 1794ம் ஆண்டு அமெ ரிக்கா வெளியிட்ட பூகோள வரைபட படத்தில் (அட்லஸில்) எலிசாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன.

1810 மற்றும் 1815ல் எஸ்தர்லோவே வரைபடங்களை வெளியிட்டார். இவர் நியூயார்க்கைச் சேர்ந்தவர். பிலடெல் பியா மாகாணத்தைச் சேர்ந்த லிடியா பெய்லி அமெரிக்காவிலுள்ள நீர்நிலை களின் வரைபடத்தை தயார் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1862ல் அமெரிக்காவின் ரொக்சானா என்ற பெண், அமெரிக்க நாட்டின் ரயில் இணைப்புகளின் ஒட்டுமொத்த வரை படத்தை தயாரித்தவர்.

நாம் இன்று பயன்படுத்தும் உருண் டையான உலக பந்தை (கட்டை மீது பொருத்தப்பட்டு, திருப்பிப் பார்க்கும் வசதியுடன்) தயாரித்து அதற்கான காப் புரிமையை பெற்றவர் எல்லன் எலி சாஃபிட்ஸ் என்பவராவர். உலக உருண் டையை 1875ல் அவர் வடிவமைத்தார். உருண்டையான வடிவத்தின் மூலம், அதை பயன்படுத்தி பகல், இரவு, சூரி யன் ஆண்டு முழுவதும் எவ்வாறு இருக் கும் என்பது போன்ற விஷயங்களை கூர் மையாக ஆய்வு செய்ய இயலும் என்று செய்து காண்பித்தவர் எல்லன் பிட்ஸ். அமெரிக்காவின் பூகோளவியல் மற்றும் வரைப்படத்துறையில் அவர் தயாரித்த உலக உருண்டைகள் இன்றும் வைக் கப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பெண் களைப் பற்றி மிகவும் குறைவாகவே எழுதப்பட்டுள்ளதெனத் தெரிகிறது.

மேலே குறிப்பிட்ட பெண்களைப் போலவே, மிக முக்கியமான பணியை மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபிலிஸ் பியர்சால் என்ற பெண்மணி. ஃபிலிசின் தந்தை சிறந்த ஓவியர். அவருடைய இளமை பருவம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. அவருடைய திருமணமும் முறிந்தது. தனது 30வது வயதில் விவா கரத்து பெற்ற அவர், தன்னை காப்பாற் றிக் கொள்ள முதலில் ஓவியம் வரையத் துவங்கினார். தனது பணி நிமித்தம் லண்டன் தெருக் களில் அலைந்த பொழுதுதான், லண்டன் நகர் வரை படமே இல்லையென அறிந் தார். இவ்வளவு பெரிய நகரின் பகுதி களை வரைபட மின்றி எப்படி புரிந்து கொள்வதென்று எரிச்சல்படுவதற்கு பதில் வரலாற்றில் தடம் பதிக்கும் முக்கிய பணியை மேற் கொண்டார். ஒரே ஆண்டில், லண்டன் நகரில் 23 ஆயிரம் தெருக்களில் கால் நடையாகச் சென்று, புரிந்து கொண்டு, லண்டன் நகரின் வரை படத்தை தயா ரித்தார். இது அவருக்கு புகழையும் பணத்தையும் கொடுத்தது. இதில் அவர் அடைந்த வெற்றி அவரை “பூகோளவி யலாளர் அறக்கட் டளை”(கூாந ழுநடிபசய யீாநசள கூசரளவ) என்ற சொந்த நிறுவ னத்தை துவங்கத் தூண்டு கோலாக அமைந்தது. பிரிட்டன் நாட்டின் ஒவ் வொரு நகரத்தின் வரைபடத்தையும் ‘ஹ வடி ஷ்’ என்று தயாரித்தார். ஃபிலிசின் இந்த வரைபட பயணம் ஆண்களுக் கானத் துறை என்று கருதப்படும் துறை யில் பெண்கள் சாதிக்க இயலும் என்ப தையே எடுத்துக்காட்டுகிறது. இளமை பருவத்தில் கஷ்டப்பட்ட ஃபிலிஸ் விடா முயற்சி, திறமை, துணிவு மூலம் கோடீஸ்வரியானார் என்பதுடன் பூகோ ளவியல் துறையில் சிறந்த சாதனை யையும் படைத்தவர்.

இருபதாம் நூற்றாண்டில் போர் காலத்தின் தேவைகளையொட்டி, ரகசிய படையெடுப்பு வரைபடங்களை (கூடியீ ளநஉசநவ inஎயளேiடிn அயயீள) பெண்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கான சான்று களை காணமுடிகிறது. இதுபோன்ற வரைபடம் ஹிட்லரின் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இவை வெறும் வரைபடம் அல்ல. வானிலி ருந்து எடுக்கும் புகைப்படங்களுடன், முக்கிய தகவல்களும் சேர்த்து, குறிப் பாக ஆறுகள், மலைகள், முக்கிய இடங்கள், கேந்திரமான பகுதிகள்... என்று இணைத்து தயாரிக்கப்படு கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது தயாரிக்கப்பட்ட வரைபடங் களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங் காற்றியுள்ளனர் எனத் தெரிகிறது.

இந்தியாவிலும் பூகோள வரை படத்தயாரிப்பில் பெண்கள் ஈடுபட்டிருக் கலாம். ஆனால் அதுபற்றிய ஆவணங் கள் இல்லை. இன்று பெண்கள் ஆண் களுக்கு சமமாக அனைத்து துறைகளி லும் முன்னேறி வருகின்றனர். ஆனால், 250 ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்கள் கூட அதிகம் ஆர்வம் காட்டாத, கடின மான துறையில் முன்னோடிகளாக செயல்பட்டுள்ள மேரி பிடில், எலிசா, எல்லன், ஃபிலிஸ் ஆகியோர் நிச்ச யமாக நினைவு கூரத் தக்கவர்கள் என் பதில் ஐயமில்லை. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று தொழிற்சங்க போராட்டங்களில், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று, தியாகங்களை செய்த முன் னோடி வீராங்கனைகளை நினைவு கூர்கிறோம். அதேப்போன்று பூகோள அறிவியல் துறையில், சவால்களை சமாளித்து, வரலாற்றில் முத்திரை பதித்த இந்த முன்னோடிகளையும் நினைவுகூர்வோம்.

இன்றைய கார்ட்டூன்