காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் தொடர்வதாய் பறைசாற்றுகின்றனர். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை காணலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் முது கெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவ சாயத்துறை பல்வேறு ஆண்டுகளாக கடும்நெருக்கடிகளைச் சந்தித்து வருவது நாம்அறிந்த ஒன்று. இந்த நெருக்கடிகள் மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் தொடக்கத்தி லிருந்தே பெருகி வருகின்றன என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஒரு புறம் வேளாண்நெருக்கடிகளும் மறுபுறம் அவ்வேளை களில் உதவ வேண்டிய அரசின் செயல்படாத தன்மை மட்டுமல்லாது விவசாயி களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும் விவசாயிகளை விரக்தியின் விளம்பில் தள்ளுகின்றன. இதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாட் டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.