கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு

சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? இது புதுக்கதை அல்ல! இது 1990 களில் துவங்கிய பழைய கதைதான்! என்றாலும் கதையின் உச்சகட்டம் (கிளைமேக்ஸ்) இப்பொழுதுதான் ‘வெ(ள்)ளித்திரை’க்கு வந்துள்ளது.

1990களில் இந்திய ஆளும் வர்க்கத் தின் “சுரண்டல்” எல்லையை உலகளா விய அளவில் விரிவுபடுத்தப்போவதாக சொல்லப்பட்ட ஆசை வார்த்தைகள் தான் உலகமயம், தனியார்மயம், தாராளம யம்! அதாவது எல்பிஜி (டுஞழு) கொள் கை! அதாவது இந்திய முதலாளிகள் உலகத்தின் எந்த இடத்திலும் தொழில் தொடங்கலாம்; வர்த்தகம் செய்யலாம்! அதுபோல் உலக முதலாளிகளும் இந்தி யாவில் தொழில் தொடங்கலாம்; வர்த்த கம் செய்யலாம்! பொதுத்துறைகள் தேவையற்றது; தனியார் துறைதான் தேவையானது! இதனால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் பாயும் என்றார்கள்!

அதிலும் குறிப்பாக அணுசக்தி ஒப்பந் தம் ஏற்பட்டுவிட்டால், இந்தியாவில், கிரா மங்களில், நகரங்களில் வீட்டுப்பானை யில் இருக்கும் குடிநீரை ‘மொண்டு மொண்டு’ குடிப்பதுபோல், மின்சாரம் ஒவ் வொரு வீட்டிலும் ‘மண்டலம் போட்டு படுத்துறங்கும்’ என்று ‘பீலா’ விட்டார்கள்.

தற்போது ஜப்பானில் சுனாமி சீற்றத் தால், அணு உலைகள் ஒவ்வொன்றாக உடைந்து நொறுங்குவதையும், அதனால் வெளியேறும் உயிர்க்கொல்லி கதிர்வீச்சு பரவுவதையும் கேள்விப்பட்டவுடன், நம் நாட்டு அணு உலைகள் எல்லாம் பாது காப்பாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஜப்பானின் அணு உலை களை கட்டிய, ‘ஐஎஸ்ஐ முத்திரை’ குத்திய, அதே சர்வதேச அணுசக்தி முகமை (கழகம்) வழிகாட்டுதலில்தான், அல்லது மேற்பார்வையில்தான் இங்கும் கட்டப்பட்டிருக்கும்; கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதை அடிக் கோடிட்டுக்கொள்வோ மாக!

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு குறைந்த பட்ச செயல்திட்டமும், இடதுசாரிகளின் ஆதரவும் இருந்ததால்தான் அந்த அரசு ஓர ளவு அடக்கி வாசித்துக்கொண்டிருந்தது எல்பிஜி கொள்கையில்! தற்போதைய ஐ.மு.கூட்டணி-2 அரசுக்கு அத்தகைய குறைந்தபட்ச செயல்திட்டமோ, இடது சாரிகளைப்போல் மக்கள் நலன் சார்ந்த நிர்ப்பந்தமோ- அதாவது பிரதமர் மன்மோ கன் சிங் பாஷையில் சொன்னால், இந் திய இடதுசாரிகளின் கொத்தடிமையாக அவை இல்லாத காரணத்தினால், இன் றைக்கு இந்திய அரசு, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொத்தடிமையாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இந்திய இடதுசாரிகள், இந்திய மக்க ளின் நலன் சார்ந்து தந்த நிர்ப்பந்தங் களை, ‘என்னை இடதுசாரிகள் கொத்தடி மையாக நடத்தினார்கள்’ என்று வர்ணித் தார்; வருத்தப்பட்டார்! ஆனால், தற்போது ‘விக்கிலீக்ஸ்’ “லீக்” செய்திருக்கும் பல விஷயங்களில் ஒன்றான - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்தியாவிலுள்ள அமெரிக் கத் தூதரகத்திற்கு எழுதிய ‘ஓலை’யில், மன்னிக்கவும், அன்பு வேண்டுகோளுக்கு மன்மோகனார் என்ன சொல்லப்போகி றார்? வழக்கமாக எல்லாவற்றிற்கும் என்ன சொன்னாரோ... அதைத்தான் இதற்கும் சொல்லப்போகிறார்!

ஐயா, பாரதப்பிரதமரே! நாட்டின் அரசியல் சட்டப்படி ஆளும் அதிகாரம் படைத்தவரே...! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதே... தெரியுமா? எனக்குத் தெரிந்த 2ஜி என்னவென்றால்-ஒன்று சோனியா ‘ஜி’, இன்னொன்று ராகுல் ‘ஜி’ ; மற்றபடி எந்த ‘ஜி’யும் எனக்குத் தெரியாது? இந்திய விண்வெளித்துறையில் (இஸ் ரோ) 3ஜி அலைக்கற் றையில் ஊழல் நடந் திருக்காமே... அது தெரியுமா? அப்படி யொரு ‘ஜி’யும் இருக்கிறதா? அதுவும் தெரி யாது! கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீட்டில் ஊழல் நடந் திருக்கிறதே, அதுவாவது தெரியுமா? அப் படியா...! அதுவும் தெரியாது! காமன் வெல்த் நாடுகள் விளையாட்டில், ஊழ லும் புகுந்து ‘விளையாடி’ இருக்கிறதே... அதாவது தெரியுமா? விளையாட்டில் எனக்கு ஆர்வமே இல்லை; நேரமும் இல்லை; அப்படி ஒன்றும் நடந்ததாகவும் எனக்குத் தகவல் இல்லை. ஆக அதுவும் எனக்குத் தெரியாது.

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு நம் பிக்கை கோரும் தீர்மானத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாவது தெரியுமா? அதுவும் தெரியாது! பிரணாப் முகர்ஜியை - ஏன் நிதி மந்திரி ஆக்கினார்கள்; மாண் டேக் சிங் அலுவாலியாவை ஏன் நிதிமந் திரி ஆக்கவில்லை; சிதம்பரத்தை எதற்கு உள்துறை மந்திரி ஆக்கினார்கள்; கமல் நாத்திடமிருந்த வர்த்தகம், தொழில்துறை களை ஏன் எடுத்தார்கள்; ஆனந்த் சர்மா வை எதற்கு வர்த்தகம், தொழில்துறை மந்திரியாக போட்டார்கள்? என்று கேள் விமேல் கேள்வி கேட்டு, அதையெல்லம் உளவுபார்த்து (மன்னிக்கவும்-விசாரித்து) ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என அமெ ரிக்க வெளியுறவுத்துறை, இந்தியத் தூதர கத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறதே... அதாவது தெரியுமா? அதுவும் தெரியாது!

டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் பிரதம மந்திரியா? ‘தெரியாது’ துறை மந்தி ரியா? என்று நமக்குத் தெரியவில்லை! ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது- இவ ருக்கு பிடித்த ஒரே வார்த்தை... “தெரி யாது!” என்பதுதான். இப்படிப்பட்ட பிரதம மந்திரி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய ‘துரதிர்ஷ்டம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய வரலாற்றிலேயே இது வரை நடந்திராத ஊழல், லஞ் சம், அமெரிக்கவிடம் தஞ்சம்; இந்திய உழைப்பாளிகளுக்கு வஞ்சம்; அந்நிய - இந்திய பெரு முதலாளிகளுக்கு பட்டுக்குஞ் சம்; மொத்தத்தில் இந்திய மக்க ளுக்கு பஞ்சமா பாதகம்! இத் தனையும் செய்துவிட்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஹை டெக் முதலாளிகளாக தமிழகத் தில் திகழும் திமுகவுடன் இளைய பங்காளியாக ‘ஈ‘ என்று இளித்துக்கொண்டும், “நீயும், நானும் ஒண்ணு; ஜனங்க வாயில மண்ணு!” என்று தமிழக மக்க ளின் காதுகளில் பூ சுத்த வரு கிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி!

இத்தகைய கேடுகெட்ட கூட்டணிக்கு, அதாவது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தமிழக வாக்கா ளர்களுக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த் தை என்ன தெரியுமா? “படுதோல்வி!” ஆம், எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழ கத்தில் நடைபெறவுள்ள 14வது சட்ட மன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி காதுகளில் ஒலிக் கப்போகும் ஒரே தமிழ் வார்த்தை “படு தோல்வி!”. இதுவும் பிரதமருக்கு தெரியா மல் போக வாய்ப்பில்லை! அதனால்தான் ‘ஸ்பெக்ட்ரம்’ கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு காண்கிறார்கள்! என்றாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தையாக “படுதோல்வி” அமையும் என்பது மட்டும் நிச்சயம்!

இன்றைய கார்ட்டூன்