திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள்

2006 மே மாதத்தில் நடந்த சட்டமன் றத் தேர்தல் முடிந்த கையோடு, அக்டோப ரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென் னை மாநகராட்சியில் ஆளும் திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டமும், ரவுடி களைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி இஷ்டத்திற்கு வாக்களித்துக் கொண்டதும், சினிமா பாணியில் பட்டாக் கத்திகளோடு டாடா சுமோ கார்களில் எம்எல் ஏக்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதும், வாக்காளர்களை ஓட்டுப் போட முடியாமல் தடுத்து ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றியதையும் மறக்க முடியுமா?

நக்கீரன் மெகா சர்வே முடிவு கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே!

‘ஜெயிக்கப்போவது யார்? ‘முந்துவது யார்?’ என்று தேர்தல் சீசனுக்கு ஏற்ப பரபரப்பைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது வியாபாரத் தந்திரமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளைத் துல்லியமாக கணிக்கிறோம் என்ற பெயரில் தனது ஆசைகளையே முடிவுகளாகவும், தனது ஆளும் கட்சி விசுவாசத்தையே கணிப்புகள் என்றும் நக்கீரன் வாரஇதழ் செய்து வருகிறது.

காப்பி அடியுங்களேன், ப்ளீஸ்!

தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

உடனே, திமுக எம்.பி., கனிமொழி, திமுக அறிக்கையைப் பார்த்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரிக்கிறது என்று அண்மையில் பேசியிருக்கிறார். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிதானே உரத்த குரல் எழுப்பி வருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே, கீழே என்று இலக்கு வைத்துப் பிரிக்காமல், அனைவருக்கும் ரேசன் (ருniஎநசளயட சiபாவ வடி கடிடின) என்பதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் தேசிய அளவில் இயக்கம் நடததுவதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மத்திய அரசு முறையான உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர மறுப்பதால், மாநில அளவில் செய்வதற்கான முயற்சியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது.

இன்றைய கார்ட்டூன்