இவர்கள் ஆளும் வரை ஏழைகள்…


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா அன்று. ஏழைகள் சிரிக்கவும் இல்லை. இறைவனைக் காணவும் இல்லை. இந்த வகையில் இறைவன் இல்லை என்ற அவர்களது நாத்திகக் கொள்கை நிரூபணமாயிற்று. இப்போது அண்ணாவின் தம்பியான கலைஞர், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். இவர்கள் இலவசங்களை வாரி வழங்குவதற்காகவே, அதன் மூலம் அரசியல் அறுவடை நடத்துவதற்காகவே, ஏழைகள் வாழ்வில் முன்னேறாமலும் அவர்கள் சிரித்து அதில் இறைவன் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலக்குழு ஏற்பாடு செய்த சாதிய ஒடுக்குமுறைகள்-தீண்டாமை ஒழிப்பு ஆய்வரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தோழர் பி.சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். “தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்” என்ற தலைப்பில் தோழர் பி.சம்பத் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:
இந்தியச் சாதியமைப்பு:
சாதியமைப்பு என்பது இந்தியாவில் மட்டுமே நிலவக்கூடிய தனித்தன்மை வாய்ந்த சமூக ஒடுக்குமுறையாகும். மனிதகுல வரலாற்றில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான் அடிமைச் சமுதாயம் பிற நாடுகளில் உருவெடுத்த போது, இந்தியாவில் ஆண்டான் அடிமைச்சமுதாயமே ஆரியர்கள் என்றும் தாசர்கள் என்றும் வருண சமுதாய வடிவில் உருவெடுத்தது. பிற்காலத்தில் விஞ்ஞானம் - தொழில்வளர்ச்சி ஏற்பட்டு ஏராளமான வேலைப்பிரிவினைகள் உருவெடுத்தபோது, சாதிக்குள் சாதியாகவும் உப சாதிகளாகவும், ஏராளமான சாதிகள் உருவெடுத்தன. அந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில் உருவெடுத்த சாதியமைப்பு இன்றளவும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு தடைச்சுவராக நீடித்து வருகிறது. எனவே, ஆதியிலிருந்து இன்று வரை சாதியும், வர்க்கமும் பின்னிப்பிணைந்தே உள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும். வர்க்க ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்தே உள்ளன. நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அனைத்து சுரண்டும் வர்க்கங்களும் சாதியமைப்பை பாதுகாத்தே வந்துள்ளன. இந்தியச் சாதியமைப்பு பற்றி பி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறிஞர்கள் ஏரளாமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதனை உரிய முறையில் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் வாழ்க்கையைக் கதையாக்கத் துப்பில்லை!


சரி.பார்த்து வைப்போமே என்று சீடன், முத்துக்கு முத்தாக, சிங்கம் புலி ஆகிய மூன்று படங்களைப் பார்த்தோம்.ஒண்ணும் தேறாது.சீடன் படம் குறித்து  கதாநாயகன் தனுஷ் கோபப்பட கதைப்படி அவர் கதாபாத்திரம் பாதிப்படத்துக்கு மேலேதான் வருகிறது. ஆகவே கதைப்படிதான் நான் படம் எடுக்க முடியும் என்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கதைக்காக வாதிட்டதாக பத்திரிகைகளில் படித்ததை நம்ம்ம்பி இப்படத்துக்குப் போனது நம்ம  தப்பு.பழனி முருகனே தனுஷாக வந்து தன் பக்தை அனன்யாவின் காதலை நிறைவேற்றி(கொட்டாவி வருது சார்) வைப்பதுதான் கதை. சாண்டோ சின்னப்பாத்தேவர் மறைந்தாலும் அவருடைய ஆவியாக சிலர் வந்து முருகன் புகழ் பாட படம் எடுத்து விடுகிறார்கள்.மக்களின் பக்தியைக் காசாக்கப் பலரும் பல விதங்களில் முயற்சிக்கிறார்கள். இவர்கள் படம் எடுத்துப்பார்த்திருக்கிறார்கள்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க சாமி!இது நந்தனம் என்கிற மலையாளப்படத்தின் தழுவலாம்.அது வேறயா?படம் முழுக்க பிழியப்பிழிய அழுதிருக்கும் அனன்யாவுக்கு அழுதகூலி அதிகமாகத் தரவேண்டும்.

வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்


தனியார் பள்ளிகளில் கோவிந்தராஜன் குழு பரிந்துரையை அமலாக்காவிடில், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு புறம் அரசு அறிவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தான்தோன்றித்தனமாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில பள்ளிகள் ஒருபடி மேலே சென்று அடுத்த கல்வியாண்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்வதும், ‘சொன்ன’ கட்டணத்தை செலுத்த மறுக்கும் பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூக தொண்டாக‘ மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு நிர்வாகம் துணைபோவதோடு, காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகாமலும் பார்த்துக் கொள்கின்றன.

இன்றைய கார்ட்டூன்