1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!

1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!டெல்லி ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணி!

வீட்டுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் உண்மையான விலை 850 ரூபாய். மத்திய அரசு இதற்கு 450 ரூபாய் மானியம் தந்து, வெறும் 403 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதனால்தான் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் விலை 1200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இப்படி மானியம் தந்து, விலை குறைத்து விற்பதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மத்திய அரசு சொல்லி வந்தது.

இதை எல்லோரும் உண்மை என்றுதான் நம்பி வந்தார்கள் ஆனால் உண்மையில் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. இப்போதுள்ள விலையை விட 3 மடங்கு விலை குறைத்து விற்கலாம். இப்படி பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் உயர்த்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனமும், சில மத்திய மந்திரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து வந்தார்கள்.

இன்றைய கார்ட்டூன்