போஸ்கோ ஆலைக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள் தடுப்பு ஏற்படுத்தினர்

தின்கியா, பிப். 14-

போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் சாலைப் பகுதியை ஆத்திர மடைந்த கிராம மக்கள் சேதப்படுத்தினர்.

ஒரிசா மாநிலத்தில் பார தீப் துறைமுகத்திற்கு அரு காமையில் உள்ள சாலை யை ஜகதீஷ்பூர் மாவட்டத் தின் தின்கியா கிராம மக்கள் சேதப்படுத்தினர். இந்த சாலை, போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் வழியாகும்.

கடந்த 2005ம் ஆண்டு ஒரிசாவில் போஸ்கோ உருக்கு ஆலை அமைப்ப தற்கு முடிவு செய்யப்பட் டது. தென்கொரியாவின் பன்னாட்டு நிறுவனம் அமைக்கும் இந்த உருக்கு ஆலையால் கிராம சுற்றுச் சூழல், காற்று மாசடைதல், கடல்நீர் மாசடைதல் ஏற் படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த ஆலை அமைவதை போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதி அமைப்பு, அபே சாகு தலை மையில் எதிர்த்து வருகிறது.

இந்த அமைப்பினரு டன் தின்கியா கிராம மக்கள் 150 பேர் சாலையை சேதப் படுத்தினர். கடந்த சனிக்கிழ மையன்று தொழில்துறை உள்கட்டமைப்பு மேம் பாட்டுக் கழக தலைவர் மற் றும் மாநில டி.ஜி.பி. ஆகி யோர் இதே சாலைவழியாக வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆலைக் கான நிலம் கையகப்படுத்து தல் நடவடிக்கையை ஒரிசா மாநில அரசு நிறுத்திவைத் தது. மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச்ச கம் பிறப்பித்த உத்தரவு கார ணமாக நில கையகப்படுத்து தல் நிறுத்தப்பட்டது. சமீ பத்தில் சுற்றுச்சூழல் அமைச் சகம் நிபந்தனை அனுமதி அளித்தது. இதனால் போஸ்கோ உருக்கு ஆலை அமைவதற் கான தடைகள் நீங்கின.

இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய கார்ட்டூன்