தத்தளிக்கும் ஐ.மு.கூட்டணி அரசாங்கம்


சமீபத்தில் பிரதமருக்கும் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் மெகா ஊழல் ஆகியவை சம்பந்தமாக அரசு மேற் கொண்டுள்ள உறுதியான நட வடிக்கைகள் குறித்து ஏதேனும் கூறுவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் அவர் கூறவில்லை. மாறாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப்பது பிரதமரின் கூற்றுக்களிலிருந்து உறுதியாகி இருக் கிறது. 

இந்தியாவில் உணவு நெருக்கடியும்-பாதுகாப்பும்

உலக உணவு நெருக்கடி, விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுக்கு 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

கும்பி காயுது நிபுணர் குழுக்கள் ஆராயுது

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பித்தவறிகூட மக்களுக்கு நல்லதை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்குவதில் கொடுக்கிற ஆலோசனைகளும் அறிவிப்புகளும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகளை பிரதமர் நியமித்த ஆர்.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்குழு ஏற்பது சிரமம் என்று கூறியுள்ளது. ஏதோ சோனியாகாந்தி மக்களுக்கு உணவளிக்க முயற்சி எடுப்பதாகவும் அதிகாரிகள் அதற்கு தடையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு ஆப்பை இரண்டும் களண்ட ஆப்பை என்ற கிராமத்து சொலவடை போலத்தான் இதுவும். அடிப்படையில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை ஏற்பதாக இல்லை. அப்படி சிந்திக்கக்கூட தயாராக இல்லை.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்! இளைஞர்களின் எதிர்காலம்..?

என் நாடு. என் மக்கள். இவர்களின் நலனே எங்களின் உயிர் மூச்சு என்று 63 ஆண்டுகாலமாய் பசப்பு வார்த்தைகளால் வாலிபர்களின் வாழ்க்கையை கானல் நீராய் மாற்றி விட்டார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை ஈடேற்றத்தான் எத்தனை எத்தனை அற¤விப்புக்கள், திட்டங்கள். அவை அனைத்துமே ஏட்டளவிலேயே உள்ளன. தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை நோக்கி செல்கிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் முழங்குகிறார்கள். வேலை எங்கே என்றால் பேச மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் (1)விவசாயத் துறை, (2) தொழில் துறை, (3) சேவைத்துறை ஆகிய மூன்றும் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் நிலை என்ன?

முதல்வரின் அறிவிப்புகளும் குதிரைக் கொம்பாகும் வேலைவாய்ப்பும்

இளைஞர்கள் படித்து முடித்து பல்வேறு கனவுகளோடும் நம்பிக்கையோடும் இவ்வுலகை பார்க்கின்ற போது, அது சிதைந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 66 லட்சம் இளைஞர்களும் அடங்குவர்.

அரசாங்கத்தின் மீதும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மீதும் நம்பிக்கையிழந்து பதிவு செய்யாதவர்களையும் இணைத்தால் ஒரு கோடியை தாண்டுகிறது. நமது நாடு இளமையான நாடு என்கிறார்கள். ஆனால், இளைஞர்களின் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொட ரும் என பசப்பு வார்த்தைகளை வீசுகிறது அரசு.

அன்பழகனின் கேள்விகளுக்கு அண்ணாவின் பதில்கள்

அது என்னமோ தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடக் கும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் விலைவாசி உயர் வைப் பற்றி பேசினாலே நிதியமைச்சர் அன்பழகன் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார். இது அவரது சுபாவத்திற்கு மாறுபட்ட ஒன்று.

எந்தச் சூழ்நிலையிலும் ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக உட் கார்ந்திருப்பதே அவருடைய வாடிக்கை.

கடந்த 3, 4 கூட்டத் தொடர்களில் அவருடைய இந்த சுபாவத்திற்கு மாறு பட்ட பேச்சுக்களை பத்திரிகை படிப்ப வர்கள் அறிய முடியும்.

ஜமீன் பாண்டி டீக்கடை

குரங்கணி சாலையின் முதல் வளைவில் இறங்குகிற போதே கவனித்தான் சேகர். டீ கடை இன்னும் திறந்துதான் இருந்தது. புங்க மர நிழலில் இரண்டுகார்கள் நின்றிருந்தது. யாராவது ரியல் எஸ்டேட்காரர்களாய் இருக்கும் என யூகித்தான். தேசிய நெடுஞ் சாலையாய் அறிவித்த பின் பூதாகரமாய் வளர்ந்து கொண்டிருக்கிற ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டங்கரடு, விளைநிலம், தோப்பு தோட்டம் என பேதமின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
மேலப்பரபு பக்கம் நிலம் பார்க்க வருகிற வியாபாரிகள் புரோக்கர்கள் அமர்ந்து பேச, குரங்கணி மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாக சாந்தி செய்ய மா, தென்னை, இலவு, காப்பி என பீச்சாங்கரை வரை விரிந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி உழைப்பாளிகள் சிறு விவசாயிகள் சிறிது இளைப்பாற தோதான இடமாக ஜமீன்பாண்டி டீ கடை இருந்தது. கூரை வேய்ந்தது போல் இடம் வலமாய் வளர்ந் திருக்கும் புங்கமரமும் வேம்பும் தார்ச்சாலை வரை படர்ந்து குளுமை தந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு சரணாலயம் போல் விளங்கியது. இதற்கும்மேல் இந்தப்பக்கம் வருகிற புரோக்கர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு போக காரணமும் இருந்தது. டீ கடையை ஒட்டி சமதளமாய் விரிந்திருக்கும் ஜமீன்பாண்டிக்குச் சொந்தமான தோப்பு.

தோளோடுதோள் நிற்கவேண்டியவர்கள் வாள் எடுத்து வீசலாமா?

அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).

உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

யாருக்கான கல்வி? யாருக்கு எதிரான கல்வி?

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை ஜனவரி 8-9 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “புத்தகங்கள் வாசிப்பு முகாமில்” பங்கேற்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். நாற் பதற்கும் மேற்பட்ட இளம் ஆசிரியர்களும் அறிவியல் இயக்க ஆர்வலர்களும் பங்கேற்ற இம் முகாமை திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் மணியும் அவருடைய நண்பர்களும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் ஆவர். ஈரோடு மாநகர அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இம்முகாமினை நடத்திட அனுமதி அளித்திருந்ததோடு முகாமிற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பொன் குமார் அளித்திருந்தார்.

அண்டப்புளுகனும் கபில் சிபலும்

முன்னாடி ஒரு காலத்துல அண்டப்புளுகன், அண்டப்புளுகன்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு ஒரு மவன் இருந்தான். அவம்பேரு என்னமோ சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அந்தப்பய பொறந்த அன்னியிலேயிருந்து பேசவேயில்லையாம்.

அண்டப்புளுகனுக்கு ரொம்பக் கவலையாப் போச்சு. நாம என்னடான்னா ஊருக்குள்ள அண்டப்புளுகு புளுகிக்கிட்டே திரியறோம். அதனால அண்டப் புளுகன்னு அன்பாக் கூப்பிடறாங்க. இந்தப் பய. நாம்பெத்த மவன், நம்ம பேரைக் கெடுத்திருவான்னு போலருக்கே. இவனெல்லாம் புள்ளையா. அப்பன்பேரைக் காப்பாத்தாத பய உசுரோட இருக்கப்படாதுன்னு மனசுல நெனச்சுக்கிட்டான்.

அண்டப்புளுகன் மவனைத் தூக்கித் தோள்ல வெச்சுக்கிட்டு, கம்மாய்க்குள்ள கழுத்தளவு எறங்கிட்டான். பய புள்ளய தண்ணிக்குள்ள வெச்சி அமுக்கிற வேண்டியது தான்.

கழுத்தளவு தண்ணில வந்தவொடனே, மவங்காரன் தண்ணியில கையெ வெச்சித் தொப்புன்னு அடிச்சானாம். ஏலே, எதுக்குலே தண்ணிய அடிச்சன்னு அப்பங்காரன் கேட்டான்.

மவன் சொன்னானாம், யப்பா, பெரிய விரால் மீனப் பிடிச்சுட்டேம்ப்பான்னு.
எங்க காமி பாப்போம்னானாம் அப்பங்காரன்.

அதான், சுட்டுத் தின்னுட்டேன்னு சொன்னானாம் மவன்.

எஞ்செல்லமே, ஒன்னப் போயிக் கொல்லப்பாத்தேனடா. நான் படுபாவின்னு சொல்லி மவனைக் கொஞ்சிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டானாம் அண்டப்புளுகன். அவன் மவன் பேரு தான் ஆகாசப் புளுகன்.

இந்தக் கதைக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி, கபில் சிபல் எதுக்கும் சம்பந்தம் இல்லிங்க.

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

தாண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் 76 படை வீரர்களைக் கொன்றதில் நாடே கலங்கிவிட்டது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மேற்குவங்கம் மற்றும் மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ராஜினாமா நாடகமாடி அதையும் முடித்துவிட்டார். ஆனால் மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறித்தாக்குதலுக்கு எதிராக எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் காங்கிரசின் கூட்டாளியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிதம்பரத்திற்குக் கடிவாளம் போடுவதுதான். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார். 2011ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி தொட வேண்டுமென்று விரும்புகிறார். இப்போது பிரதமருக்கும் சோனியாவுக்கும் மம்தாவின் கூட்டணி தேவை. இதுதான் சிதம்பரத்தின் ஏடாகூட பேச்சின் ரகசியமாகும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்குப் பதிலளிக்கும் போது "இன்னும் 12 மாதங்களில் புரிந்துவிடும்" என்ற சிதம்பரம் கூறினார். வரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இப்படிப்பேசினார்.

ஊழல் பெருச்சாளி தெருவில் இறங்கியது

 ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ராசா செய்திருக்கிறார் என்பதை 18 மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்த மெகா ஊழல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை பிரதமரும் சோனியாகாந்தியும் ஏற்க மறுத்துவிட்டனர். காரணம் இந்த ஊழல் பிரதமரின் ஒப்புதலின்றி நிகழ்ந்திருக்க முடியாது என்பதுதான்.

அண்மைச் செய்திகளைப் பார்த்தால் இதில் கலைஞர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பதாக ச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய கடிதம் , கனிமொழி- நீரா ராடியா உரையாடல் , அமைச்சர் ராசா - நீரா உரையாடல் கள் ஊடகங்களில் பகிரங்கரமாக வெளிவந்துவிட்டன. மேலும், பத்தரிகையாளர் வீர்சங்வி- நீராராடியா உரையாடல், என்டிடிவி செய்தி ஆசிரியர் - நீரா உரையாடல்கள் அதை அம்பலமாக்குகின்றன.

சோனியா குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இப்போது 2 ஜி என்றால் ஒரு ஜி சோனியா என்றும் இன்னொரு ஜி ராகுல் என்றும் உண்மை வெளிப்பட்டு விட்டது. ஆக, இதிலும் காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேர்ந்தே கொள்ளையடித்துள்ளன. 1.76 லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததில் அறுபதாயிரம் கோடி ரூபாய் கமிசன் பெறப்பட்டு பங்கு போட்டுள்ளதாய் செய்திகள் வருகின்றன. அதனால்தான் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்திருப்பர்.

       ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணத்தை சோனியாவின் இரு தங்கைகள் (நாடியா, நெமீலியா) பெயரில் பத்து நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப் பதாக சுப்பிரமணியசாமி அம்பலப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சொத்தாக 7000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மலேசியாவில் வாங்கியுள்ளாராம்.

சாயத்தொழில் நெருக்கடி: சிக்கலும் தீர்வும்

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலை யங்களையும் உடனடியாக மூடிவிட வேண் டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் தது. இதையடுத்து திருப்பூர் சாயத்தொழில் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் மறு சுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, 2010ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் ஒரு சொட்டு கழிவுநீரைக் கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தீர்ப்புக் கூறியிருந்தது.

நிராகரிக்கப்பட வேண்டிய சக்தி அமெரிக்க ஏகாதிபத்தியமே

வெகுசில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தங்களோடு பேச்சுவார்த்தை நடத்த நேரில் வந்த அதிபர்யை ஆயுதம் தாங்கிய 800 காவல்துறையினர் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் பாதுகாவலர்களை தாக்கினார்கள். மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ஓட முடியாமல் தனது கைத்தடியை ஊன்றி வேகமாக நடந்து தப்பிக்க முயன்ற ஜனாதிபதியை, அவரது கால் மூட்டிலேயே அடித்தார்கள். சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து தப்பச் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து கொண்டார்கள். அவரைக் கொல்ல முயற்சித்தார்கள். தகவல் அறிந்தும் உடனடியாக ஜனாதிபதியை காப்பாற்ற முயற்சி எடுக்காத ராணுவம், நீண்ட நேரம் கழித்து அதிரடி படையை அனுப்பி, கலகம் செய்த போலீஸ்காரர்களிடமிருந்து 14 மணிநேரம் கழித்து ஜனாதிபதியை காப்பாற்றியது.

பரபரப்பான சினிமாக் கதைபோல நடந்த இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வல்ல. தனது கட்டளைக்கு பணிய மறுத்த ஈக்வடார் தேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஃபேல் கோரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட கொடிய தாக்குதல் இது; காவல்துறைக்குள்ளும் ராணுவத்திற்குள்ளும் இருக்கும் தனது கைக்கூலிகளால் திட்டமிட்டு, ஜனாதிபதியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட கலக முயற்சி இது. ஆனால் தகவலறிந்த சில மணி நேரங்களில் ஈக்வடார் தேசமே கொந்தளித்தது. ஜனாதிபதிக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ஆயுதமேந்திய போலீசாரையும் மீறி உள்ளே நுழைந்தனர். சில இடங்களில் மக்களுக்கும் போலீசாரின் ஒரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதட்டமும் பரபரப்பும் ஈக்வடாரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவே கொந்தளித்தது. வெனிசுலாவும், கியூபாவும், பொலிவியாவும் கோரியாவுக்கு ஆதரவாக குரல்எழுப்பின. சொந்த நாட்டு மக்களும், அண்டை நாட்டு அரசுகளும் எழுப்பிய உறுதிமிக்க ஆதரவுக்குரலால், கோரியா அரசுக்கு எதிரான கலகம் தோற்கடிக்கப்பட்டது.

இதுதானம்மா புரட்சி வாழ்க்கை...

அன்போடும் பாசத்தோடும் தோழர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட தோழர் பாப்பா உமாநாத் அவர்கள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவியவர், பெண்ணுரிமைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்து அதற்காக வாழ்நாளெல்லாம் அரும்பணியாற்றிய ஒரு பெண்ணுரிமைப் போராளி. மக்கள் கூட்டங்களில் அவர் நாவன்மையும் உத்வேகமும் மிக்க பேச்சாளி. எழுத்தாற்றல் மிக்கவர்.

பாப்பா உமாநாத் கடந்த டிசம்பர் 17 அன்று திருச்சியில் காலமானார். அவருக்கு செம்மலர் தனது நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. அவர் செம்மலரில் அதன் ஆரம்ப ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதி உதவினார். “திருமணமும் குடும்ப வாழ்க்கையும் (1971 டிச.), “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” (1972, மார்ச்) “வாழ்வை வளமாக்க கடவுளால் முடியாது”(1973, நவ.) “குழந்தைகள் பற்றிய கண்ணோட்டம்” (1973 டிச.), “பெண் விடுதலை வேண்டும்” (1974 செப்.) ஆகிய தலைப்புகளில் அவர் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் அவை.

1972 மார்ச் செம்மலரில் “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” என்ற தலைப்பில் பாப்பா உமாநாத் எழுதிய கட்டுரையொன்று இங்கே வெளியிடப்படுகிறது. அடக்குமுறைக்கும் தாக்குதலுக்கும் அஞ்சாத வீரம் - தியாகம் - அர்ப்பணிப்புமிக்க ஒரு வாழ்க்கையின் உணர்ச்சிமிகு எழுத்துவடிவமாகும் இது.

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்

என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

தமிழால் என்ன பயன்? தமிழன் கேட்கிறான்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-27 தேதிகளில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருவதாக நாளும் செய்திகள் வருகின்றன. நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. தமிழுக்கு மாநாடு எனும் போது தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழத்தான் செய்யும்.

உண்மை. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில்தான் இலங்கையில் யுத்தம் தனது உச்சமான கோரமுகத்தைக் காட்டியது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால்  தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். நமது இதயங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன. யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு குதூகலத்தோடு அறிவித்தது. ஆனால் யுத்தம் முடிந்து ஓராண்டான பிறகும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. பலாத்காரத்தால் எட்டப்படும் வெற்றி தற்காலிகமானதே என்பதையும், நியாயமான அரசியல் தீர்வே நிரந்தர வெற்றியைக் கொண்டு வரும் என்பதையும் அந்த நாட்டு அரசு உணர வேண்டும். தற்காலிக வெற்றி மதர்ப்பில் இருக்கும் அந்த அரசு இந்த உண்மையை உணருவதாகத் தெரியவில்லை.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரா... ஆர்.எஸ்.எஸ். ரவிசங்கரா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.

பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

"உயர்ந்தவன் யார்?

கிராமவாசி? நகரவாசி?

இல்லை, விலைவாசி!"

-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.

மாக்சிம் கார்க்கி - வாழ்வும் இலக்கியமும்

மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.
இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இந்து மதம்!

இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்படுமா?

கடந்த ஜனவரி 27ம் தேதியன்று திருச்சி கலையரங்கத்தில் நான்காவது மாநில நிதிக் குழு ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் 4வது மாநில நிதிக்குழு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள பணிந்தர் ரெட்டி ஐஏஎஸ் தலை மையிலும், நிதிக்குழு மானிய உறுப்பினரும் செயலாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, திருச்சி, திண்டுக் கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி நகராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப் பப்பட்டு கலந்து கொண்டேன்.

மூடப் பழக்கங்களை ஒழிக்க வந்த முன்னோடி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் சமு தாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்திய மாமனிதர். அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னோடியாக இருந்ததைப் போலவே மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிந்தனை யாளர்கள் சிலர் அரசியல் தளத்தில் மட்டுமே இயங்குவர். சிங்காரவேலரோ இவ்விரண்டு தளங்களிலும் இயங்கியவர்; இதில் வியப்பு என்னவென்றால், இவ்விரண்டு தளங்களி லும் அவர் முன்னோடியாக இருந்ததுதான்; இதில் மற்றொரு வியப்பும் உண்டு; அரசியல் உணர்வு வேர்பிடிக்கும் தொடக்கக் காலத்தில் அவர் இவ்வாறு இருந்ததுதான் அந்த வியப்பு; இந்த வியப்பின் ஆளுமை தான் சிங்கார வேலர்.

பெண்ணும் மனித உயிரே...

பெண்களைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், எத்தனை வருணனைகள்! ஓடும் நதிகளிலிருந்து வானத்து நிலவு வரை அனைத்தையும் பெண்களாக உருவகப்படுத்துவது என பெண்களை உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கம் அப்பெண்களைச் சுற்றி அழுத்தமான வட்டம் ஒன்றைப் போட்டு அதனை தாண்டி அவர்கள் வெளியேற விடாமல்

2ஜி: திரைமறைவில் சில உண்மைகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை: நாட்டின் ஜீவநாடி

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ யாத்திரை மேற்கொள்வது நாடறிந்த விஷயமாகும். மத்திய அரசு அப்படி யாத்திரை செய்யும் இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செலவுக்காக “ஹஜ் கமிட்டி சட்டம்” வழங்கும் சலுகைப்படி மானி யம் வழங்குவதும் நாம் அறிந்த தகவலாகும். அந்த மானியத்துக்கும் சூனியம் வைக்க “மாண்புமிகு” முன்னாள் மாநிலங்களவை யின் உறுப்பினர் “பிரபுல் கொராடியா” என்பவர் (மறந்துவிட வேண்டாம், இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்) உச்சநீதிமன்றத்தில் வழக் கொன்று தொடுத்தார். அவருடைய ஆட்சே பணையே இப்படி மானியம் வழங்குவதே அர சியல் சட்டம் 14 மேலும் 15 விதிக்குப் புறம்பா னது; அதோடு குறிப்பாக விதி 27க்கு விரோத மானது என்று கொதித்துள்ளார். மேலும் அவர் சொல்லும் வாதம், நான் ஓர் இந்து, அரசுக்கு நேர்முக வரியும், மறைமுக வரியும் செலுத்து கிறேன். என் வரியில் ஒரு பகுதி இஸ்லாமியர் கள் செல்லும் ஹஜ் யாத்திரைக்கு விமானக் கட்டணத்துக்கு மானியமாக வழங்கப்படு கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப் படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 280 கோடி வரை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. இப்படி மத்திய அரசு செய் வது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது மட் டுமல்ல, மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி செலவழிப்பது அரசின் கஜானாவை வீணடிப்பதும் ஆகும் என அங்கலாய்க்கிறார்.

சோசலிச நாடாக மாற்றுவதை நிறுத்தும் எண்ணமில்லை: வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

காரகாஸ், பிப்.15-

வெனிசுலாவை ஒரு சோசலிச நாடாக மாற்றும் தனது முயற்சிகளை நிறுத் தும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று அந் நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதியாகத் தெரி வித்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட கதாநாயகர் சைமன் பொலி வாரின் பெயரைத் தனது திட்டத்திற்கு சாவேஸ் சூட் டியுள்ளார். பொலிவாரியப் புரட்சி என்றழைக்கப்படும் சோசலிச நடவடிக்கைகள் தனக்குப்பிறகும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். அந்தப்பேட்டி யில் மேலும் பேசிய அவர், நான் ஒருவேளை அரசிய லிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட எனது அரசியல் சகாக்கள் பொலி வாரியப் புரட்சியை நிறைவு செய்வார்கள்.

புரட்சிகர குணமிக்க இளைஞர்கள் தற்போது நடைபெற்று வரும் அரசி யல் போரை வழிநடத்திச் செல்வார்கள். தற்போ துள்ள எதிர்க்கட்சியின ருக்கு அரசியல் எதிர்காலம் எதுவுமில்லை என்று கூறி யுள்ளார். சர்வாதிகார ஆட் சியை நோக்கி சாவேஸ் சென்று கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டினாலும், ஒவ் வொரு மாற்றத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத் தியே சாவேஸ் செயல்படுத் துகிறார் என்பதை சோச லிஸ்ட் கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்தாலும், அதை மக்க ளின் தீர்ப்பாக சாவேஸ் ஏற்றுக் கொண்டார் என் பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அடுத்த கட் டம் பற்றி சாவேஸ் உறுதி யாகப் பேசிக்கொண்டிருக் கும் வேளையில், வரவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேஸை எதிர்கொள்பவர் யார் என்பதை எதிர்க்கட்சி களால் முடிவு செய்ய முடி யவில்லை. 2012 ஆம் ஆண் டில் நடக்கப்போகும் வெனி சுலா ஜனாதிபதித் தேர்த லில் நின்று வெற்றிப் பெறப் போவதாக சாவேஸ் அறி வித்துள்ளார். வெனிசுலா மக்களுக்காக புதிய வீட்டு வசதித் திட்டத்தையும் அவர் இந்தப் பேட்டியின்போது வெளியிட்டார்.

போஸ்கோ ஆலைக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள் தடுப்பு ஏற்படுத்தினர்

தின்கியா, பிப். 14-

போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் சாலைப் பகுதியை ஆத்திர மடைந்த கிராம மக்கள் சேதப்படுத்தினர்.

ஒரிசா மாநிலத்தில் பார தீப் துறைமுகத்திற்கு அரு காமையில் உள்ள சாலை யை ஜகதீஷ்பூர் மாவட்டத் தின் தின்கியா கிராம மக்கள் சேதப்படுத்தினர். இந்த சாலை, போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் வழியாகும்.

கடந்த 2005ம் ஆண்டு ஒரிசாவில் போஸ்கோ உருக்கு ஆலை அமைப்ப தற்கு முடிவு செய்யப்பட் டது. தென்கொரியாவின் பன்னாட்டு நிறுவனம் அமைக்கும் இந்த உருக்கு ஆலையால் கிராம சுற்றுச் சூழல், காற்று மாசடைதல், கடல்நீர் மாசடைதல் ஏற் படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த ஆலை அமைவதை போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதி அமைப்பு, அபே சாகு தலை மையில் எதிர்த்து வருகிறது.

இந்த அமைப்பினரு டன் தின்கியா கிராம மக்கள் 150 பேர் சாலையை சேதப் படுத்தினர். கடந்த சனிக்கிழ மையன்று தொழில்துறை உள்கட்டமைப்பு மேம் பாட்டுக் கழக தலைவர் மற் றும் மாநில டி.ஜி.பி. ஆகி யோர் இதே சாலைவழியாக வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆலைக் கான நிலம் கையகப்படுத்து தல் நடவடிக்கையை ஒரிசா மாநில அரசு நிறுத்திவைத் தது. மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச்ச கம் பிறப்பித்த உத்தரவு கார ணமாக நில கையகப்படுத்து தல் நிறுத்தப்பட்டது. சமீ பத்தில் சுற்றுச்சூழல் அமைச் சகம் நிபந்தனை அனுமதி அளித்தது. இதனால் போஸ்கோ உருக்கு ஆலை அமைவதற் கான தடைகள் நீங்கின.

இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல”: பெண்கள் ஆவேசம்

நாடு பல்வேறு சவால் களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாலியல் விவ காரங்களில் அதிகமான அக்கறை காட்டி வரும் இத் தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதி ராக அந்நாட்டு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களை நடத்தியுள்ளனர்.

ஞாயிறன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் கலந்து கொண்டவர் களில் பெரும்பாலானவர் பெண்களாவர். இத்தாலி யில் உள்ள 200 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தங்கள் இயக்கத்திற்கு, இப்போது இல்லாவிட்டால்.. எப் போது? என்று மக்கள் பெய ரிட்டிருக்கிறார்கள். சுக போக விழாக்கள், கோலா கலக் கொண்டாட்டங்கள் என்று தனது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியோ பெர்லுஸ் கோனி, பெண்களை வெறும் போகப் பொருட்களாகச் சித்தரிக்கும் கருத்துகளை யும் தெரிவித்து வருகிறார்.

தனது பொறுப்பைக் கவனிக்காமல் களியாட் டங்களில் பெர்லுஸ்கோ னி ஈடுபடுவதால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்ப் பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெர்லுஸ்கோனியின் ஆத ரவாளர்களைக் கொண்டு எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட் டது. பிரதமருக்கு எதிராகப் பத்து லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் ஆர்ப்பாட் டங்களில் கலந்து கொண் டதே எதிர் ஆர்ப்பாட்டங் கள் முறியடிக்கப் பட்டதற்குக் காரணமாகும்.

இத்தாலியின் பெருமுத லாளிகளில் பெர்லுஸ் கோனியும் ஒருவர். இதற்கு முன்பாக நான்கு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் மீது ஏராளமான குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள் ளன. தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலங்களில் இத்தாலியில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட மாக ஞாயிறன்று நடை பெற்றதைக் கூறலாம் என் கிறார்கள் அரசியல் நோக் கர்கள்.

ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்பு மிக வும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல என்ற முழக்கத் துடன் கூடிய அட்டை களைத் தாங்கிக் கொண்டு நாடு முழுவதும் பெண்கள் வலம் வந்துள்ளனர். பெண் கள் பற்றி மோசமான கருத் தைக் கொண்டுள்ள பிரதமர் அப்பதவியில் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் ஆவேச முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

விசாரணை வலை முழுமையாய் விரியட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்ன ணியில், அருண்ஷோரியிடமும் விசாரணை நடத்தவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்த ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் ஆ.ராசா ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்று முந்தைய ஆட்சியில் உரு வாக்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததாக திரும்பத்திரும்பக் கூறிவந்தார். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் இந்த நடைமுறையை துவக்கி வைத்தது. அப்போது அந்தத்துறைக்கு பொறுப்பாக இருந்த வர் ‘மகா யோக்கியரான’ அருண்ஷோரிதான்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை முற்றிலும் தவறான ஒன்று என்று இந்த ஊழல் குறித்து விசாரிக்க அரசினால் அமைக்கப்பட்ட சிவராஜ்பாட்டீல் குழுவும் கூறி யுள்ளது. பாஜகவினரை வாயடைக்கச்செய்வதற் கான தந்திரமாக அன்றி, உண்மையில் ஒட்டு மொத்த ஊழலையும் தோண்டி எடுக்கும் வகை யில் சிபிஐயின் செயல்பாடு அமைய வேண்டும்.

2ஜி ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூ னிகேசன் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது. இப்போது டாடா நிறுவன அதிகாரிகளிட மும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக வரவேண் டும் என்று அதீத ஆர்வம் காட்டியவர்கள் அம் பானியும் டாடாவும். அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிப்பது அவசியமாகும்.

நீரா ராடியா-டாடா உரையாடல் டேப் வெளி யானபோது, இந்த விவரங்களை வெளியிடு வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தின் கதவைத் தட்டினார் டாடா. அந்த டேப் பில் உள்ள விஷயங்கள் தவறு என்று அவர் கூறவில்லை. மாறாக, அந்த விவரங்களை வெளி யிடக்கூடாது என்றுதான் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பலன்பெற்ற வர்கள் டாடா மற்றும் அம்பானி. அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண் டும். ராசாவின் ‘திறமை’ குறித்து முதல்வர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுத வேண்டிய தன் தேவை என்ன என்பதும் விசாரணை வளையத்திற்கு உட்பட்டதே.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து எஸ்-பேண்ட் ஊழல் வெளிவந்துள்ளது. இது பிரத மரின் நேரடிப்பொறுப்பில் உள்ள துறையில் நடந் துள்ள ஊழலாகும். ஆ.ராசா, பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று திரும்பத் திரும்பக் கூறினார். இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் பேசிய வகையில்தான் காரியங் கள் நடக்கின்றன என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஆ.ராசாவுக்கு தாங்கள் கூறிய ஆலோசனை என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப் முகர்ஜியோ வாய்திறக்க மறுக்கிறார் கள். பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று கூறிய பிரதமர் பிறகு, பின்வாங்கி விட்டார். நாட்டையே உலுக்கிவரும் இந்த தொடர் ஊழல் குறித்து பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்.

தோண்டத்தோண்ட புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் முன்னுக்கு வருகிறது.

நுண்நிதி நிறுவனங்கள் - வரமா? சாபமா?

இலாப நோக்கில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் - பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றனவா அல்லது பெண்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறுகின்றனவா? என்ற பொருளில் வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய கருத்துப் பரி மாற்றத்தில் கிடைத்த படிப்பினைகள்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் (கடன் வாங்கிய பெண் மற்றும் கடன் வாங்கியவரின் மனைவி)இறந்தது குறித்த விசாரணைக்கு வலியுறுத்தியும், உண் மையை கண்டறியும் நோக்குடனும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்ற குழுவுடன் நானும் சென்றேன். எனக்கு தெரிந்தவரையில் இவ்விஷயத்தில் தலையீடு செய்து விசாரணையை மேற் கொண்ட முதல் மாதர் அமைப்பு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்கொலை செய்துகொண்ட லட்சுமி பற்றிய தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லட்சுமியும் அவரது கண வரும் வேலூர் நகரின் சத்துவாச்சாரி பகுதி யில் வசித்து வந்தனர். இவர்கள், தெருக் களில் உள்ள குப்பைகளை பொறுக்கி தங் களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதித்து தங்க ளது 7 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். பார்ப்பதற்கு 15 வயதுடையவர் போலத் தோன்றும் லட்சுமியின் முதல் பெண்ணிற்கு வயது 20 என சொல்கிறார்கள். இவர் திரு மணமாகி கைக்குழந்தையுடன் இருக்கிறார். 3-4 வயதுடைய பெண்குழந்தை இவர்கள் வீட்டின் கடைக்குட்டியாகும். இந்நிலையில், ஒப்பந்தத் தொகையாக 75000 ரூபாயை உட னடியாகச் செலுத்திய நிறுவனம் ஒன்றிற்கு, குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் மாநக ராட்சி, டவுன் பஞ்சாயத்தால் அளிக்கப்பட் டது. இதனால், லட்சுமி மற்றும் அவரது கண வரின் வருமானம் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் எனக் குறைந்தது. எனவே, இவர் கள் தங்களது குடும்பத்தின் பசியைப் போக்கி டவும், குழந்தைகளுக்கு கல்வியை அளித் திடவும் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினர். முந்தைய கடனை திருப்பிச் செலுத்திட வேறொரு நிறுவனத் திடம் கடன் வாங்கினர். மஹாசேமம், ஷேர், ஸ்பன்டனா, எப்எப்சிஎல், முன்ஜீவன், காவேரி மற்றும் கிராம விடியல் ஆகிய ஏழு நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு கடன் வாங்கிய இவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கினர்.

தொழிலாளர் விரோத திமுக அரசு தூக்கியெறியப்படும்: அ.சவுந்தரராசன்

மதுரை, பிப்.14-

பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதக மாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படும் தமிழக அரசை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய மக்கள் தயாராகி விட் டார்கள் என சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கூறினார்.

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்றக்கோரி மதுரை மாநகரில் சிஐடியு சார்பில் 7 இடங்களில் பிரச்சாரப்பயணம் நடைபெற்றது. இதன் நிறைவாக தெற்கு வாசல் மார்க்கெட் அருகே பொதுக்கூட் டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:

தேர்தலை முன்வைத்து பல கட்சிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலை யில், தொழிலாளர்களுக்கான தொழிற் சங்க அங்கீகார சட்டத்தை அமல்படுத்தக் கோரி சிஐடியு தமிழகம் முழுவதும் பிரச் சாரத்தை மேற்கொண்டுள்ளது. கடுமை யான விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என முதல் வர் கருணாநிதி கூறுகிறார். அப்படியென் றால் முதல்வராக அவர் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

மின்வாரியத்தில் பணியாற்றும் முறை சாரா தொழிலாளிக்கு சத்துணவு ஊழிய ருக்கு இணையான ஊதியம் வழங்க வேண் டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு நிறைவேற்றாமல் உள்ளது. டாஸ்மாக் தொழிலாளிக்கு மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டும் அவர்கள் வாங் கும் ஊதியம் 2800 ரூபாய் தான். அரசின் அனைத்துத்திட்டங்களுக்கும் பணம் கொட்டும் இத்துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இல்லை. நூல் விலை உயர்வால் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான தொழி லாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் சலுகையை தமிழக அரசு வழங்கி யுள்ளது. ஆனால், தமிழகத் தொழிலாளர் களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க மறுக்கிறது. கேரளா, மேற்குவங்கம், சத் தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற் சங்க அங்கீகார சட்டம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அச்சட் டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுக் கிறது என அவர் பேசினார்.

* உயிரைப் பறிக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது திரிணாமுல்

கொல்கத்தா, பிப். 14-

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி நடத்தி வரும் வன் முறை அரசியலுக்கு முடிவு கட்டு வோம் என்றும், உழைக்கும் மக்க ளின் வாழ்வை பாதுகாக்க இடது முன்னணியை மீண்டும் ஆட்சி யில் அமர்த்துவோம் என்றும் முத லமைச்சர் புத்ததேவ்பட்டாச் சார்யா அறைகூவல் விடுத்தார்.

 

கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இடது முன்னணியின் பிரம் மாண்ட பேரணி - பொதுக்கூட் டம் பிப்ரவரி 13 ஞாயிறன்று நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யா, மேற்குவங் கத்தில் திரிணாமுல் கட்சியும், மாவோயிஸ்ட்டுகளும் கூட்டு வைத்துக் கொண்டு நடத்தி வரும் கொடிய வன்முறைகளுக்கு, மத்தி யில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவு அளித்து வருவதை கடுமையாக சாடினார். இத்துணை வன்முறையை ஏவி னாலும் இடது முன்னணியிடமி ருந்து ஒரு சிறு அளவிற்கு கூட மக்களை இவர்களால் பிரிக்க முடியவில்லை என்பதையே இப் பேரணி உணர்த்துகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சர்வாதிகாரமும் வெளியேறட்டும்

அரசியல் உணர்வுடன் ஒன்றுபட்டுப் போரா டுகிற மக்களின் முன் எப்பேர்ப்பட்ட அடக்கு முறை ஆயுதமும் அடிபணியத்தான் வேண்டும். எகிப்து மக்களின் எழுச்சி இதைத்தான் காட்டு கிறது. முப்பதாண்டுகால சர்வாதிகார பீடத்திலி ருந்து ஹோஸ்னி முபாரக் வெளியேறியது ஒரு முக்கியமான வெற்றி. தாக்குதல்களுக்கு அஞ்சா மல் தெருக்களில் இறங்கியதற்கான இந்த முதல் கட்ட பலனைக் கொண்டாடுகிற எகிப்து மக்கள் உலகத்தின் வாழ்த்துக்கு உரியவர்கள்.

1967ம் ஆண்டிலிருந்து அவசர நிலை ஆட்சி தான் இருந்து வந்திருக்கிறது என்பதிலிருந்தே அங்கே எந்த அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகத்திற்கு ஜனநாயக மாண்புகள் பற்றிப் பாடம் நடத்துகிற அமெரிக்க அரசு, இந்த அத்துமீறல்களைக் கண்டுகொண்டதில்லை. ஏனென்றால் அதன் உலகப் பொருளாதார ஆளு மை நோக்கங்களுக்கு ஒத்துழைத்தவர் முபாரக். தட்டிக் கேட்க முடியாத சர்வாதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு - வெளி நாட்டு முதலாளிகளின் கொள்ளை, வாழ்க்கை யைக் கடினமாக்கிய விலைவாசி, எங்கும் எதி லும் ஊழல், எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடூரங்கள் என அனுபவித்த எகிப்து மக்கள் கொதித்துப் போயிருந்தார்கள்.

ஒட்டுத் துணியும் மேலாடையும்

எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள்

ஓடி வந்து முழங்குகிறீர்கள்...



“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக எஜமானரிடம் ஓடுகிறீர்கள்.

நாங்கள் காத்துக்கொண்டு இருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள், ஒரு துண்டுத் துணியை!

காவி உடைக்குள் ஒரு புரட்சியாளர்

அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் ஸ்தாபகர் சஹஜானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் 19ஆம் நூற்றாண்டில் அதாவது 1889இல் ஐக்கிய மாகாணங் களின் கிழக்குப் பகுதியிலிருந்த காசிபூர் மாவட்டத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பெற்றோருக்குப் பிறந்த ஆறாவது பிள்ளை. சகோதரிகள் யாரும் கிடையாது. சஹஜானந்தா ஸ்வாமி களின் இயற்பெயர் நவ்ரங் ராய் என்ப தாகும். இவர் சிறுவயதாக இருக்கும் போது தாயை இழந்தவர். அவரது அத்தைதான் அவரை வளர்த்தார். அவரது தந்தை ஒரு பிராமணராக இருந்தபோதிலும் அடிப்ப டையில் அவர் ஒரு விவசாயிதான். எனவே அவருக்கு அனைத்துப் பிரா மணர்களும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் கூட கிடையாது. நவ்ரங் ராயின் தாத்தா காலத்தில் அவர்களது குடும்பம் ஒரு சிறு ஜமீன்தார் குடும்பமாக இருந்தது. எனவே அந்தக் காலத்தில் நிலத்திலிருந்து வந்த வருமானம் அவர்களது குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் குடும்பம் பெருகப் பெருக, நிலங் கள் பிரிக்கப்பட்டு, வளம் குன்றி, அவர் களே குத்தகைக்கு நிலங்களைப் பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆயினும் குடும்பம் அப்படி ஒன்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிடவில்லை.


நவ்ரங் ராய் தன் கல்வியைத் தொடரக் கூடிய வகையில் வசதியுடன்தான் இருந் தது, எனவே, அவர்தம் ஆரம்பக் கல்வி யையும், உயர்நிலைக் கல்வியையும் மிக வும் சிறப்புடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். பள்ளிப்பருவத்திலேயே அவர் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார். அக்காலத்திய மூடப்பழக்க வழக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்ள அவர் துணியவில்லை, பழம் பஞ்சாங்கங் களின் ஏமாற்றுத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே அவர் அவற்றை ஆழமாகப் படித்தார். நவ்ரங் ராய் கடவுள் நம்பிக்கையின்றி வளர்வதையும், சாமியார் களைக் கலங்கடிக்கக்கூடிய வகையில் கேள்விகள் கேட்பதையும் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்தம் குடும்பத்தினர், அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். ஆனால் திருமணம் முறையாக நடைபெறுவதற்கு முன்னதாக அச்சிறுமி இறந்துவிட்டார், இதன்மூலம் அவரைக் குடும்பக் கட்டுக்குள் கட்டிப் போடுவதற்கு அவர்தம் குடும்பத்தார் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து அவர் விடுதலை பெற்று, சன்னியாசியாகத் துற வறம் மேற்கொண்டார். இதன் பின்னர்தான் அவரது பெயர் ஸ்வாமி சஹஜானந்த சரஸ் வதி என்று மாறியது, இவ்வாறு அவர் சன்னியாசம் மேற்கொண்டதனால் அவ ரால் தன் கல்வியைத் தொடர்ந்து, மெட்ரிக்கு லேசன் தேர்வை முடிக்க முடியவில்லை. ஆயினும் அவர் தம் அறிவுத்தாகம் குறைந்து விடவில்லை. அரசியல், சமூகம் மற்றும் மதங்கள் குறித்து ஏராளமாகப் படித்தார். இதன் விளைவாக அவர் வெளிப்பார் வைக்கு உடலின் மேல் காணப்படும் காவித் துணிகள் அவரை ஒரு சன்னியாசியைப் போல் காட்டியபோதிலும், உண்மையில் உள்ளத்தில் அவர் ஒரு புரட்சியாளராக விளங்கினார்.

பெட்ரோலுக்கு வரி விதிக்காமல் இருக்க முடியாதா?

பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து ஏறிவருவதையும் அதனைக் காரணமாகக்காட்டி இந்திய அரசு பெட்ரோலின் விலையை அடிக்கடி ஏற்றிவருவதும் அதன் தொடர் விளைவாக அனைத்துப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவருவதும் நமது அன்றாட அனுபவமாக இருந்து வருகிறது.இதே பிரச்சனையை வியட்நாம் அரசு எவ்வாறு அணுகி வருகிறது என்பது ஒருமக்கள் நல அரசுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை படம் பிடித்துக்காட்டுகிறது. கச்சா எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கான வசதிகள் இல்லாத ஒரு நாடு வியட்நாம் என்ற உண்மையையும் சேர்த்துப்பார்த்தால் இந்த வேறுபாட்டைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.



கச்சா எண்ணெய்யின்விலை ஒரு பீப்பாய் 101 டாலர் என்ற அளவை எட்டியவுடன் மக்களின் மீது சுமை ஏறாமல் பாதுகாப்பதற்காக வியட்நாம் அரசு இரண்டு முடிவுகளை எடுத்தது. ஒன்று, பெட்ரோல் விற்பனையாளர் களுக்கு லிட்டருக்கு 600 டாங் அளவுக்கு இழப்பீட்டை நேரடியாக வழங்கியது. விலையை நிலைப்படுத்து வதற்கான நிதி என்ற ஒன்றும் அந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் வாங்கும் போதும் நுகர்வோர் அளிக்கும் விலையில் 300 டாங் இந்த நிதிக்கு செல்கிறது.

வியட்நாம் அரசு எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கை வரிக்குறைப்பு .இறக்குமதி செய்யப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட பெட்ரோலின் மீதான வரி (பூஜ்யம் ) என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது.பெட்ரோலுக்கு முதலில் 20 சதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது பின்னர் 6 சதமாகவும் தற்போது 0 சதமாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதேபோல டீசலுக்கு விதிக்கப்பட்ட வரி 15 சதத்திலிருந்து 2 சதமாகவும் பின்னர் 0 சதமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

மொழிகளின் மரணம்

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

திமுக- திறந்த புத்தகத்தில் மறைக்கப்படும் பக்கங்கள்

புதுதில்லிப் பயணம் அரசியல் ரீதியாக வும், அரசு ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது என்று சென்னை திரும்பிய முதல்வர் கலை ஞர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதற்கு அடுத்த நாளே புதுதில்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை யில் கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறி முதல்வருக்கு நன்றி பாராட் டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அந்த கட்சிக்காரர்களே கூட நம்ப மாட்டார்கள்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்-இல் சங்க அங்கீகாரத் திற்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி முதல் தேதியன்று நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல், இதுவரை நான்குமுறை நடந் துள்ளது. 2002ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தல் நீங்கலாக, மற்ற மூன்று தேர்தல்களிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாகை சூடி “ஹாட்ரிக்” அடித்துள்ளது. 2,47,000 ஊழியர்கள் வாக் களித்த 2009 தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு எதிராக ஏஐடியுசி சார்புடைய என்எப்டிஇ சங்கமும் ஐஎன் டியுசியில் இணைந்துள்ள எப்என்டிஓ சங்கமும் இணைந்து ஒரு ‘மெகா’ கூட் டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப் பினும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகத் தான வெற்றி பெற்றது.

5வது சங்க அங்கீகாரத் தேர்தல்

நடக்கவுள்ள 5வது சங்க அங்கீகாரத் தேர்தலில் 2, 29,906 ஊழியர்கள் வாக்க ளிக்க உள்ளனர். மாதா மாதம் சந்தா கொடுக்கும் 1,24,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இருப்பினும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மெத்தனமாக இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், நாக் பூரில் விரிவடைந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தி அதில் தனது தேர் தல் பணிகளை திட்டமிட்டது. இதன்படி கடந்த மூன்று மாதங்களாக நாடு முழு வதும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்தேர்தலில் தங்க ளது தோல்வி உறுதியென புரிந்து கொண்ட என்எப்டிஇ மற்றும் எப்என்டிஓ சங்கங் கள், தேர்தலுக்குத் தடை வாங்க நீதிமன் றங்களுக்குப் படையெடுத்தன. இதிலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

அறிவியல் கதிர்: விளைச்சலைப் பெருக்க `ஃபெர்டிகேஷன்’ முறை

“மானியங்களையும் உதவித் திட் டங்களையும் விட நிலத்திலிருந்து கிடைக்கும் உத்தரவாதமான வருமா னமே ஒரு விவசாயியை வேளாண்துறை யில் தொடர்ந்து நீடிக்க வைக்க முடியும் ; இளைஞர்களிடம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். ஒரு விஞ்ஞானமோ, தொழில்நுட் பமோ விவசாயிகளுக்கு நல்ல வருமானத் தைத் தருமானால் அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாரா கவே இருப்பார்கள்” என்கிறார் திரு வெண்ணைநல்லூரில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநராக இருக்கும் டேவிட் ராஜா பியூலா.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிரா மத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா குமார் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திலி ருந்து 26,000 கிலோகிராம் மஞ்சளை அறுவடை செய்து ஒன்பதே மாதங்களில் 11 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந் தது என்றால், அவர் `ஃபெர்டிகேஷன்’ முறையை மேற்கொண்டதுதான் கார ணம். இதைப் பார்த்ததும் அப்பகுதியி லுள்ள ஏராளமான விவசாயிகள் அதே முறையைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடி யில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

எகிப்து: மக்கள் வரலாறு படைக்கிறார்கள்

எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவ லுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தி யர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார் கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் (கூயாசசை ளுளூரயசந) குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத் தில் இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத் திருக்கிறார்கள்.

எகிப்து, எட்டு கோடியே 82 லட்சம் மக்கள் கொண்ட மாபெரும் அரபு நாடாகும். வரலாற்று ரீதியாக, இது அரபு நாடுகளின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும். எகிப்தில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகள் இப்பிராந்தியத்திலேயே முக்கியமான தாக் கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் பழமையான சீர்கேடடைந்து கொண்டிருந்த முடியாட்சியை 1952இல் நடைபெற்ற அலுவலர்கள் புரட்சி தூக்கி எறிந்தது. நாசர் மற்றும் ராணுவத்தின் தலை மையின்கீழ் ஒரு மதச்சார்பற்ற குடியரசு அங்கே அமைக்கப்பட்டது. அது, அரபு தேசிய வாதத்திற்கான ஒளிவிளக்காக மாறியது. சூயஸ் கால்வாயைக் கைப்பற்றித் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர எத்தனித்த மேற்கத்திய ஏகாதிபத்திய வல்லரசுகளின் மத்தியில் அது சீற்றத்தை ஏற்படுத்தியது. நாசரின் தலைமையில் எகிப்து, அணிசேரா இயக்கத்தின் ஒரு முன்னணி உறுப்பு நாடாக மாறியது. ஆனால், எழுபதுகளில் நிலைமை கள் முற்றிலுமாக மாறின.

கலைஞர் கதை எழுதுகிறார் காங்கிரஸ் ஏடு படப்பிடிப்பு

திமுக பொதுக்குழுவைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி திமுகவை இழிவுபடுத்தும் பத்திரிகைகளை உடன்பிறப்புகள் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் சிண்டு முடிவதாக கூறினார்.

ஆனால் திமுகவை எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி இழிவாகக் கருதுகிறது என்பதற்கு கேரளத்திலிருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான “வீஷ்ணம்” ஏட்டில் வெளிவந்துள்ள இ.வி.ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை (ஜனவரி 17, 2011) சாட்சியமாக உள்ளது. அந்த கட்டுரையை அப்படியே பிரசுரிக்குமளவுக்கு தரமானதாக இல்லை. முதல்வரின் குடும்பத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக் கப்பட்டுள்ளது. அந்த கட்டுரையின் ஒரு சில பகுதிகளை மட்டும் தமிழக வாசகர்கள் அறியத் தருகிறோம். இதுகுறித்து தமிழக காங்கிரசாரிடம் திமுகவினர் கேட்டு அறிவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

திமுகவின் உதயசூரியன் அஸ்தமிக்கிறது. திராவிட அரசியலை திமுக கை கழுவுகிறது. திமுக என்பது இன்று ஒரு குடும்பத்தின் தனிச் சொத்தாக மாறியுள்ளது. அதிகாரத்தின் மூலமாக ஊழல் என்பதுதான் கருணாநிதி குடும்பத்திலுள்ள அனைவரது லட்சியமாக உள்ளது. ஊழலில் ஆனந்தம் காணுகின்ற கருணாநிதி குடும்பத்தை அரசியலில் இருந்து துடைத்தெறிய தமிழக மக்கள் விரும் புகிறார்கள். ஆனால் இந்தக் குடும்பம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், முட்டாள் பெட்டியையும் (தொலைக்காட்சிப் பெட்டி) இல வசமாக வழங்கி, ஏழை மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கிறது. மயங்கிக் கிடக் கும் அந்த மக்களின் சுய உழைப்பைத்தான் கருணாநிதி குடும்பம் பல ஆண்டுகளாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி, ஊழலை அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிய தலை வராவார்.

திராவிட அரசியல் என்ற பெயரில் ஊழ லை திராவிட மயமாக்கிய தலைவர் கருணா நிதி என்று ஒருமுறை ‘துக்ளக்’ தலையங்கத் தில் சோ இராமசாமி எழுதியிருந்தார். அதை யும் ஒரு நுணுக்கமாக எடுத்துக் கொண்டு ஊழலை வளர்த்தவர் கருணாநிதி. தற்போது அவர் ஊழலை தேசியமயமாக்கிக் கொண்டி ருக்கிறார்.

மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கருணாநிதியின் வாரிசு கள். எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய ஆரம்ப காலத் தில் கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக்கி திரைத்துறையில் இறக்கி விட்டார். ஐந்தாறு திரைப்படங்களில் கதாநாய கனாக நடித்த மு.க.முத்து திறமையின்மை யின் காரணமாக பின்வாங்க வேண்டிய நிலை வந்தது. மு.க.முத்து, திரைத்துறையில் பிரகா சிக்காமல் போனது கருணாநிதிக்கு பெரிய ஏமாற் றத்தைத் தந்தது. திரைப்படத் துறையில் இருந்து விலகி வந்த மு.க.முத்துவின் வாழ்க் கை மற்றொரு திரைப்படமாக மாறியது.

திமுகவை இன்று கருணாநிதி தனது மகன்கள் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் பங்கு வைத்துக் கொடுத்திருக்கிறார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழ கத்தை அழகிரிக்கும், சென்னையைத் தலை மையிடமாகக் கொண்டு மீதித் தமிழகத்தை ஸ்டாலினுக்கும் வழங்கியிருக்கிறார். முது மைக் காலத்தில் தமிழகத்தின் பாகப் பிரி வினையை இவ்வாறாக எழுதாமல் எழுதி வைப்பதைக் கண்டு ராஜ ராஜ சோழன்கூட சிரிக்காமல் இருக்க மாட்டார். மருமகன் முர சொலிமாறனை தில்லிக்கு அனுப்பியதுபோல் அழகிரியையும் கருணாநிதி தில்லிக்கு அனுப்பி வைத்தார். மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட அழகிரி திமுகவிற்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிற்கே அவ மானமாக மாறினார். ஆங்கிலமும் இந்தியும் தெரியாததனால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்த மத்திய அமைச்சருக்கு எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. தனது மகனை முன்னிறுத்தித்தான் கலைஞர் கருணாநிதி திராவிடர்களின் மொழிக் கொள்கையைத் தீர்மானிக்க வேண்டும். “இந்தி ஒழிக” என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கருணா நிதியின் மகன் அழகிரி, இந்தி மொழிக்கு முன் னால் கேபினட் பதவியைத் தலையில் சுமந்து கொண்டு வேர்த்து விறுவிறுத்து நிற்கிறார்.

அழகிரி இந்திய நாடாளுமன்றத்திற்குப் பயந்தார். எதற்காக அழகிரியை கருணாநிதி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார், அழகிரி எதற்காக அங்கு போனார், எதற்காக கேபினட் அமைச்சர் பதவியைப் பெற்றார் என்று இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால், கருணாநிதி தனது மகனை இந்திய நாடாளுமன்றத்தில் பலி கடாவாக்கி னார். தமிழக மக்கள் கேட்பது போலவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் முன்னிறுத்தி இந்திய மக்களும் கருணாநிதியிடம் பல்வேறு கேள்வி களைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக் கெல்லாம் கருணாநிதியால் பதில் சொல்ல முடியாது. கருணாநிதியும், அவரது பிள்ளை களும், உறவினர்களும் அவர்களுக்கு வேண் டியவர்களும் செய்கின்ற ஊழல் மற்றும் அதி காரத் துஷ்பிரயோகத்திற்கு முன்னால் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், கோட்பாடுகளும் தலையில் துண்டைப் போட்டு நிற்கின்றன. சுருக்கமாகக் சொன்னால் இந்திய அரசியல மைப்புச் சட்டமும், கோட்பாடுகளும், ஜனநாய கமும் தலையில் துண்டைப் போடக்கூடிய நிலையை கருணாநிதி ஏற்படுத்திவிட்டார். இந்திய அரசியல் கட்சிகளும், அதன் தலை வர்களும் இந்தக் கொள்ளையை எந்தவித உணர்ச்சியுமின்றிப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

பிள்ளைகளையும், மருமகன்களையும் குடியமர்த்துவது என்ற கருணாநிதியின் அரசியல் அதன் உள்ளேயே கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவில் கலகம் என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிடுவதன் அர்த்தம் கருணாநிதி குடும் பத்தில் கலகம் என்பதாகும். மத்திய கேபினட் அமைச்சர் அழகிரி அப்பதவியைத் துறந்து விட்டு தமிழகத்திற்கு வந்து முதலமைச்சராக விரும்புகிறார். மற்றொரு மகன் ஸ்டாலின் வெகு காலத்திற்கு முன்பாகவே முதலமைச் சர் என்ற பதவியைத் தனது தலையில் சுமக் கத் துவங்கிவிட்டார். மகள் கனிமொழிக்கு கட்சியின் தலைமைப் பீடத்தில் அமர வேண் டும் என்ற மோகம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் பதவி பறிபோன ஆ.ராசா வை கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாள ராகத் தொடரச் செய்ய வேண்டும் என கனி மொழி விரும்புகிறார். ஊழல்காரரான ராசாவை கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று அழகிரி கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தயாளு அம்மாளும், ராஜாத்தியும் ஊழலின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள். மருமகன் முரசொலிமாறனின் மகன்கள் இந்த பந்தய ஓட்டத்தில் தோற்க விரும்பாமல் கோடம்பாக்கத்தின் திரைத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மலை யாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும், பல்வேறு பத்திரிகைகளும், திரைப்படத் துறையுமாக இந்தக் குடும்பம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய அரசியல் குடும்பமாக மாறியிருக்கிறது.

எதற்கு இந்த நாடகம்?

மக்கள் நல்ல படங்களை வெகுவாக வரவேற்கின்றனர். ஆனால் “இளைஞன்” அந்த வகையில் எந்த விதத்திலும் அமையவில்லை. தொலைக்காட்சிகளில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் செய்யப்பட்டபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியபோதும் எந்த இளைஞனும் அந்தப் பக்கம் திரும்பிக்கூட படுக்கவில்லை.

லாட்டரி அதிபர் கொடுத்த பணத்தில் திரைக்கதை எழுதப்பட்டதால் என்னவோ “அவருக்கு” நட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தலைவர் வசனம் எழுதிய படம் டப்பாவிற்குள் சீக்கிரமே போய்விடக்கூடாது என்பதற்காகவும் கழக கண்மணிகள் இப்போது புது வழிகளில் திரையரங்குகளை நிரப்ப முயற்சி எடுக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை நகரத்தில் முக்கிய தனியார் பள்ளிகளுக்கு பரிவோடு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இளைஞன் படத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். “பாவம் பிஞ்சுகள்”.

மற்றொரு புறத்தில் கழகத்தின் முக்கிய பெரும்புள்ளிகள் தங்கள் சார்பில் டிக்கெட்டுகளை வாங்கி மொத்தமாக தொண்டர்களிடத்தில் வழங்குகின்றனர். எல்லா வார்டுகளிலும் இலவச டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. அப்படி கொடுத்தும் கூட தொண்டர் படையை தியேட்டரில் காணோம். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் புதுப்படம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், குறைந்தபட்சம் மூன்று வாரமாவது படம் ஓட வேண்டுமாம். இல்லையென்றால் தலைவர் கடுமையாக கோபம் கொள்வார்.

இதே காலத்தில் நம்முடைய நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பல ஊர்களில் திரையிட முடியாமல் இருக்கின்றது. அரசின் சார்பாக வெறும் கண்துடைப்புக்கு வரிவிலக்கு என்று அறிவித்துவிட்டு படம் திரையிடாமல் இருப்பதற்கு மறைமுகத்தடைகள் எனும் பட்டியல் நீளுகின்றது.

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் படம் திரையிடப்படுவதற்கு இடது சாரி இயக்கங்கள், கலை இலக்கிய அமைப்புகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.

விந்தை என்னவென்றால், இளைஞன் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என விளம்பரத்தில் பேசும் சில தலைவர்கள் அம்பேத்கார் படத்தை திரையிட மக்கள் வந்து பார்க்க என்ன முயற்சி எடுத்துள்ளனர் என்ற கேள்வி எழுகின்றது.




ஏழைகளுக்கு நிலம் தர தயக்கம் ஏன்?

தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க இருப்பதாகவும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வாக்குறுதி யளித்தது. ஆட்சிக்கு வந்த சில மாதங் களிலேயே, தமிழ்நாடு அரசு 12.9.06 அன்று வெளியிட்ட அரசாணை எண். 241ன்படி நடைமுறைப்படுத்தவும் துவங் கியது.

அடுத்த சில மாதங்களில் வழக்கம் போல் பின்வாங்கி, 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை. கையளவு நிலமாக இருந் தாலும் ஏழைகளுக்குத்தான் என சத்தி யம் செய்யாத குறையாக சட்டமன்றத் தில் தெரிவித்தார் முதல்வர். தமிழ்நாட் டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் என்பது 2001ம் ஆண்டு கணக்குதான். 2004-05ல் அது 23.96 லட்சம் ஹெக்டேர், அதா வது சுமார் 60 லட்சம் ஏக்கராக தரிசு நிலத் தின் பரப்பளவு அதிகரித்திருக்கிறது. தற் போது இன்னும் கூடுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
முதல்வரின் கருத்துக்கு கடும் ஆட் சேபணையை அப்போதே தெரிவித்தோம். உடனே, யாருடைய ஆக்கிரமிப்பிலும் இல்லாத தரிசு நிலத்தைத்தான் நாங்கள் தருவதாகச் சொன்னோம் என்று புதிய தன்னிலை விளக்கத்தை அளித்தார். அதாவது அரசியல் செல்வாக்குள்ளவர் கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், நீதிபதிகள், அரசாங்கத் தில் உயர் பதவியில் உள்ளவர்கள் அர சுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங் களை எத்தனை ஆயிரம் ஏக்கர்களை வேண்டுமானாலும் வளைத்துப்போட்டு வைத்துக் கொள்ளலாம். அத்தகைய நிலங்களை நாங்கள் கைப்பற்ற மாட் டோம் என்பதே முதல்வரின் பதிலுக்கான தெளிவுரையாக இருக்க முடியும்.
 
கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் நிலம் என்பதை அனை வரும் அறிவோம். தமிழக கிராமப்புறங் களில் வசிக்கும் பெரும்பகுதியான மக்கள் நிலமற்றவர்களாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலமற்றவர்களாக இருக்கிறார் கள். நில உச்சவரம்புச் சட்டமும் தமிழ கத்தில் பெயரளவுக்கே அமல்படுத்தப்பட் டுள்ளது. நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 31.3.09 வரை 1,90,003 ஏக்கர் மட்டுமே 1,50,416 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட் டத்திலும் 31.5.09 வரை 2,10,534.68 ஏக்கர் மட்டுமே 1,75,511 பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள மோசடி தனிக்கதை. மொத்தத்தில் தமிழ் நாட்டில், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது என்பது பெயரளவுக்கான, மக்களை அரசே ஏமாற்றும் ஒரு திட்ட மாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
 
இந்த நிலையில்தான், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் காவேரி ராஜபுரத்தில் அரசுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் தரிசு மற்றும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களையும், நீர் நிலைகளையும் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளார் என்று 11.9.2009 அன்று தமிழக அரசின் தலை மைச்செயலாளரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மனு அளித் தோம். பிறகு, திருவள்ளூர் மாவட்ட ஆட் சியர், திருத்தணி வட்டாட்சியர் என அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலை மை நீதிபதிக்கும் மனு அனுப்பப்பட்டது. அரசிடம் கொடுக்கப்பட்ட மனு கிணற் றில் போட்ட கல்லாக இருந்த நிலையில், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பிறகு இறுதி யாக நிலமீட்பு இயக்கத்திற்கும் அறை கூவல் விடுக்கப்பட்டது. நிலமீட்பு இயக்கத்தை முறியடிப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு போட்டு, அந்த கிராம மக்கள் அனைவரையும் ஒருநாள் முழுக்க வீட்டுச்சிறையில் வைத்திருந்தது. ஆயி ரக்கணக்கான காவலர்களை கொண்டு வந்து குவித்து மாவட்டம் முழுவதையும் பெரும் பதட்டத்திற்குள்ளாக்கியது. அர சின் அடக்குமுறைகளை மீறி அணி வகுத்தவர்களை, இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் அரசின் திட்டத்தை செயல்படுத்த சென்றவர்களை கைது செய்தது.
 
இதற்கிடையில், உயர்நீதிமன்ற தலை மை நீதிபதியே சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்பது பொது விவாதத்திற்கு உள்ளானதை யொட்டி, உச்சநீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பக்கோரியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முழுமையாக ஆய்வு செய்து 199.47 ஏக்கர் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்திற்கும், தமிழக அரசுக்கும் அறிக்கை அளித்தார். நீதிபதி தினகரன் தரப்பில் ஆட்சியரின் அறிக் கையை ஏற்க மறுப்பு தெரிவித்த நிலை யில் இந்திய நில அளவைத்துறையின் சார்பில் அளவை செய்து அறிக்கைக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. இந்திய நில அளவைத்துறையின் அதிகாரிகள் குழு முழுமையாக ஆய்வு செய்து 199.78 ஏக்கர் அரசு நிலம் நீதிபதி யால் வளைக்கப்பட்டிருக்கிறது என்று கூடுதலாக 31 சென்ட்-ஐ சேர்த்து, ஆட்சியரின் அறிக்கைக்கு வலு சேர்த் தது. ஆனால், புறம்போக்கில் 10க்கு 10 குடிசை கட்டி குடியிருப்பவனை அப்புறப் படுத்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் சகிதமாக பொக்லைன் இயந்திரத்தோடு படையெடுக்கும் அரசு, தனக்கு சொந்த மான சுமார் 200 ஏக்கர் நிலத்தை மீட்ப தற்கு எள்முனையளவு கூட இதுவரை முயற்சிக்கவில்லை. மீண்டும் அரசுக்கு நினைவூட்டும் விதமாக சென்னையில் உண்ணாவிரதம், திருவள்ளூரில் தொடர் உண்ணாவிரதம், வருவாய்த்துறைச் செய லாளரிடம் மனு என விடாது முயற் சித்தோம்.
 
இறுதியாக 2010 நவம்பர் 9ந் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தீர்வு காணப்படாமல் உள்ள பல்வேறு நிலப் பிரச்சனைகள் குறித்து பேசினோம். அப் போது, காவேரிராஜபுரம் நிலம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். இரண்டு மாத காலமாகிவிட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து பேசப்பட்டதா என்பது கூட நமக்கு தெரியவில்லை. துணை முதல்வர், தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்றி முடித்துவிட்டு, ஐந்தாறு மாத காலமாக, செய்வதற்கு எதுவுமே இல்லாமல், சும்மா இருக்க வேண்டாமே என்று அடிக்கல் நாட்டு விழா, திறப்புவிழா என்று சுற்றிக் கொண்டி ருக்கிறார் என்று நமக்கு தெரியும். அதனால் ஆட்சியரோடு பேச அவகாசம் இல்லையோ என்னவோ?
 
இப்பொழுது, தரிசு நிலத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகள் (பென்சிங்) முற்றிலும் நீதிபதி தரப்பால் அகற்றப் பட்டுவிட்டது. பிரச்சனைக்குரிய இந்த நிலம் தொடர்பாக இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேறு எவரும் உரிமைகோரவும் இல்லை. தற்போது நிலம் அனாமத்தாகக் கிடக்கிறது. அந்த கிராமத்தைச் சார்ந்த தலித் மற்றும் பழங்குடி மக்கள், மற்ற சமூகத்தை சார்ந்த ஏழைகள் பலர் நிலம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து காத்துக் கிடக்கிறார்கள். அரசோ கல்லுப் பிள்ளையாரைப் போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது.
 
இந்த நிலையில்தான், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 10ந் தேதி நிலவிநியோக இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. அரசு வழங்கவில்லையென் றால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று மக்கள் தயாராகியிருக்கிறார்கள். பெரிய மனிதர்கள் மேலும் தங்களின் சொத்தைப் பெருக்கிக் கொள்ள அரசு நிலத்தை வளைத்தால் வேடிக்கை பார்க்கும் அரசு, ஏழைகள் தங்கள் வாழ்வா தாரத்திற்காக, ஏழ்மையிலிருந்து மீள்வதற் காக அரசு நிலத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதை அநியாயம் என்று சொல்ல முடியுமா? திமுக அரசு யார் பக்கம் நிற்கப் போகிறது?
 
நிலம் கேட்டு, நியாயம் கேட்டு பிப்ரவரி 10ந் தேதி காவேரிராஜபுரத்தில் நடைபெற இருக்கும் நிலவிநியோக இயக்கம் வெற்றிபெற அனைவரின் ஆதரவையும் கோருகிறோம்.
 
“கணவனை இழந்ததாலே கண்ணகி யின் சீற்றம் நியாயம்

மனைவியை இழந்ததாலே ராமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்ததாலே நமது போராட்டம் நியாயம், நியாயம்”

என்ற கவிஞனின் வரிகளுக்கொப்ப நியாயத்தை நிலைநாட்ட ஆவேசமாய் அணிதிரள்வீர்!

“வெல்ல முடியாதது நம் வலிமை” என்பதை பறைசாற்றுவோம்!!

கட்டுரையாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்

 


முதலாளித்துவ சமூகம் அப்படித்தான்!

வாழ்க்கை நிலைகளில் ஏற்பட்ட அவலங்களால் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒன்றரை லட்சத்துக்கு மேற் பட்ட விவசாயிகள் நாடுமுழுவதிலும் தற் கொலை செய்து கொண்ட சோக வரலாறு தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிகழ்வு. ஆனால் தொழிலாளிகளின் மத்தியிலும் தற்கொலைச்சாவுகள் நிகழ்ந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அவை யும் அண்மை ஆண்டுகளில் பதிவாகியுள் ளன. அதுவும் தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரான திருப்பூரில் இது கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை நீங்கள் அறிவீர்களா?
தமிழக அரசின் குற்றச்செயல்கள் பதி வேடுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தி இது . 2007 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை -526. இதே ஆண்டில் மாநில அளவிலான சராசரி 373. அதாவது இந்த எண்ணிக்கை 41 சதவீதம் கூடுதலானது. 2008ம் ஆண்டில் பதிவான தற்கொலைகளின் எண் ணிக்கை 555. மாநில சராசரி 380. இது 46 சதவீதம் கூடுதல். 2009ம் ஆண்டில் பதி வான தற்கொலைச் சாவுகளின் எண் ணிக்கை 491. இதுவும் மாநில சராசரியை விடக் கூடுதலானது தான். வேதனை யளிக்கும் இந்த நிகழ்வுகளின் பின்னணியை விளக்கும் கட்டுரையொன்று டிசம்பர் 8ம் தேதி ‘பிரன்ட்லைன்’ இதழில் வெளியிடப்பட்டது.

திருப்பூரில் இயங்கி வரும் 6200 ஆயத்த ஆடை நிறுவனங்களில் 4லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களில் சரிபாதி அளவில் பெண் தொழி லாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்த தொழி லாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாவட் டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். இப்போது ஒரிசா , பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பூர் நகர உழைப்பாளர் படையில் இணைந்துள்ளனர். ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் அடிப்படை யிலேயே உற்பத்தி நடைபெற்றுவருவதால், ஆண்டு முழுவதும் ஒரே சீரான முறையில் உற்பத்தி என்பதற்கு பதிலாக, சில பருவங்க ளில் இரவுபகல் என்ற வேறுபாடின்றி கடும் மும்முரத்துடன் வேலை நடைபெறுவதும் மற்ற சில பருவங்களில் வேலையும் கூலியும் இன்றி தொழிலாளர்கள் அவதிப்படுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

இன்றைய கார்ட்டூன்