கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுமுன்னணியின் ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை என்று தடா லடியாகப் பேசிவருகிறார் மம்தா பானர்ஜி, ஆமாம் ஆமாம் என்று உரத்த குரலில் முழங்குகிறார் சோனியாகாந்தி,ஏழை மக்களைப்பற்றி இடது முன்னணி கவ லைப்படவே இல்லை என்கிறார் “இளவர சர்” ராகுல் காந்தி. இவர்களின் இந்த பேச்சுக்கள் மேற்கு வங்க மக்களையே அவ மதிப்பதுபோல் இருக்கின்றன என்று சரியாகவே வருணித்துள்ளார் சோமநாத் சட்டர்ஜி, இடதுமுன்னணி எதையுமே செய்யவில்லை என்றால் மேற்கு வங்க மக்கள் ஏழுதேர்தல்களில் தொடர்ந்து அதற்கு வாக்களித்திருப்பார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். புளு கினாலும் பொருத்தமாகப் புளுக வேண் டும் என்பார்கள். கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பான முறையில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள மேற்கு வங்க இடது முன் னணியின் ஆட்சியை நேரில் கண்டுவரும் வங்கமக்கள், இந்த கோயபல்ஸ் பிரச்சா ரத்திற்கு பலியாகிவிடுவார்கள், என்று மம்தா கும்பல் நினைத்தால், அது பகற் கனவாகவே முடியும்.

திரிணாமுல் காங்கிரசின் பொய்களும் ... உண்மையும்


“நான் பொய்யே பேசுவதில்லை”- இது மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி யில் கூறியது! ஆனால் நடைமுறையில் பொய் பேசாமல் அவரால் இருக்க முடியாது என்பதே உண்மை. அவர் இடது முன்ன ணிக்கு எதிராகக் கூறிவரும் சில பொய்கள்:

ஸ்பெக்ட்ரம் ஊழல்: இன்று 2வது குற்றப்பத்திரிகை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) சார்பில் திங்களன்று 2-வது குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்

தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. 

இவர்கள் ஆளும் வரை ஏழைகள்…


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா அன்று. ஏழைகள் சிரிக்கவும் இல்லை. இறைவனைக் காணவும் இல்லை. இந்த வகையில் இறைவன் இல்லை என்ற அவர்களது நாத்திகக் கொள்கை நிரூபணமாயிற்று. இப்போது அண்ணாவின் தம்பியான கலைஞர், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். இவர்கள் இலவசங்களை வாரி வழங்குவதற்காகவே, அதன் மூலம் அரசியல் அறுவடை நடத்துவதற்காகவே, ஏழைகள் வாழ்வில் முன்னேறாமலும் அவர்கள் சிரித்து அதில் இறைவன் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலக்குழு ஏற்பாடு செய்த சாதிய ஒடுக்குமுறைகள்-தீண்டாமை ஒழிப்பு ஆய்வரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தோழர் பி.சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். “தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்” என்ற தலைப்பில் தோழர் பி.சம்பத் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:
இந்தியச் சாதியமைப்பு:
சாதியமைப்பு என்பது இந்தியாவில் மட்டுமே நிலவக்கூடிய தனித்தன்மை வாய்ந்த சமூக ஒடுக்குமுறையாகும். மனிதகுல வரலாற்றில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான் அடிமைச் சமுதாயம் பிற நாடுகளில் உருவெடுத்த போது, இந்தியாவில் ஆண்டான் அடிமைச்சமுதாயமே ஆரியர்கள் என்றும் தாசர்கள் என்றும் வருண சமுதாய வடிவில் உருவெடுத்தது. பிற்காலத்தில் விஞ்ஞானம் - தொழில்வளர்ச்சி ஏற்பட்டு ஏராளமான வேலைப்பிரிவினைகள் உருவெடுத்தபோது, சாதிக்குள் சாதியாகவும் உப சாதிகளாகவும், ஏராளமான சாதிகள் உருவெடுத்தன. அந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில் உருவெடுத்த சாதியமைப்பு இன்றளவும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு தடைச்சுவராக நீடித்து வருகிறது. எனவே, ஆதியிலிருந்து இன்று வரை சாதியும், வர்க்கமும் பின்னிப்பிணைந்தே உள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும். வர்க்க ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்தே உள்ளன. நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அனைத்து சுரண்டும் வர்க்கங்களும் சாதியமைப்பை பாதுகாத்தே வந்துள்ளன. இந்தியச் சாதியமைப்பு பற்றி பி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறிஞர்கள் ஏரளாமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதனை உரிய முறையில் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் வாழ்க்கையைக் கதையாக்கத் துப்பில்லை!


சரி.பார்த்து வைப்போமே என்று சீடன், முத்துக்கு முத்தாக, சிங்கம் புலி ஆகிய மூன்று படங்களைப் பார்த்தோம்.ஒண்ணும் தேறாது.சீடன் படம் குறித்து  கதாநாயகன் தனுஷ் கோபப்பட கதைப்படி அவர் கதாபாத்திரம் பாதிப்படத்துக்கு மேலேதான் வருகிறது. ஆகவே கதைப்படிதான் நான் படம் எடுக்க முடியும் என்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கதைக்காக வாதிட்டதாக பத்திரிகைகளில் படித்ததை நம்ம்ம்பி இப்படத்துக்குப் போனது நம்ம  தப்பு.பழனி முருகனே தனுஷாக வந்து தன் பக்தை அனன்யாவின் காதலை நிறைவேற்றி(கொட்டாவி வருது சார்) வைப்பதுதான் கதை. சாண்டோ சின்னப்பாத்தேவர் மறைந்தாலும் அவருடைய ஆவியாக சிலர் வந்து முருகன் புகழ் பாட படம் எடுத்து விடுகிறார்கள்.மக்களின் பக்தியைக் காசாக்கப் பலரும் பல விதங்களில் முயற்சிக்கிறார்கள். இவர்கள் படம் எடுத்துப்பார்த்திருக்கிறார்கள்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க சாமி!இது நந்தனம் என்கிற மலையாளப்படத்தின் தழுவலாம்.அது வேறயா?படம் முழுக்க பிழியப்பிழிய அழுதிருக்கும் அனன்யாவுக்கு அழுதகூலி அதிகமாகத் தரவேண்டும்.

வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்


தனியார் பள்ளிகளில் கோவிந்தராஜன் குழு பரிந்துரையை அமலாக்காவிடில், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு புறம் அரசு அறிவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தான்தோன்றித்தனமாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில பள்ளிகள் ஒருபடி மேலே சென்று அடுத்த கல்வியாண்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்வதும், ‘சொன்ன’ கட்டணத்தை செலுத்த மறுக்கும் பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூக தொண்டாக‘ மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு நிர்வாகம் துணைபோவதோடு, காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகாமலும் பார்த்துக் கொள்கின்றன.

கடமை தவறாத திருச்சி ஆர்.டி.ஓ

திருச்சி ஆர்டிஓ சங்கீதா (33). போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார். சொந்த ஊர், சேலம் மாவட்டம் மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில் துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000ம் ஆண்டு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி யில் பிஎஸ்எம்எஸ் படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டுகள் டாக்டராக பணி யாற்றியுள்ளார்.

சங்கராச்சாரியார் மீது அப்படியென்ன திடீர் பாசம்?

கைது நடவடிக்கையைக் கூட அரசிய லாக்க தெரிந்தவர் கலைஞர் கருணாநிதி. தான் கைது செய்யப்பட்டதை வைத்தே விடிய, விடிய தொலைக்காட்சிகளில் ஓட்டி வாக்குகளைப் பெற்ற அவரின் வித்தை ஊரறிந்த உண்மையாகும்.

ஆட்சிக்கு வந்த போது காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாக காவல்துறையின் அமைச்சராக இருக்கும் கருணாநிதியே சொன்னதைக் கேட்டு தமிழகமே திகைத்துப் போனது. கெட்டுப்போன ஈரலுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் செய்திருப்பார் என்று நினைத்தால், செய்யவில்லை என்ப தற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

“செப்படி வித்தைகள்” கண்டு ஆசிரியர்கள் ஏமாறமாட்டார்கள்!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘அரசியல் களம்’ சூடு பிடித்துள்ளது.

‘கருத்துக் கணிப்புகள்’ மக்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

‘செப்படி வித்தைகள்’ செய்யும் வேலையும் தொடங்கியுள்ளது.

சொன்னதைச் செய்தாரா கலைஞர்?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லும் பரவி, படர்ந்து, விரிந்து, வளர்ந்துள்ள தொழில் நூற்பாலைத் தொழில் பஞ்சாலை.

ஏறத்தாழ 2400க்கும் மேற்பட்ட பஞ்சா லைகள், ஒன்றேமுக்கால் கோடி கதிர்கள், இந்திய நூல் உற்பத்தியில் 40சதவிகிதத்துக் கும் மேல்! தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமாராக 5 லட்சம்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் இரு பத்து நான்கு மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி பணிபுரிகின்றனர்.

எல்லாமே நினைவுக்கு வருகிறது

“சினிமாவில் ஃபிளாஷ்பேக் வருவ தைப்போல, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியிலே என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.”

மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்கும்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, படுகொலை அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக மக்களால் பேசப் படுகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக கோபாவேசமாக எழுந்துள்ளது. அதற்கு நியாயமான பதில் கூற முடியாமல் ஏப்ரல் 4ம் தேதி முரசொலியில் கலைஞரே கேள்வி எழுப்பி, பதில் கூறும் பகுதியில் விலைவாசி உயர்வு பற்றி விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.

கலைஞர் சொன்னதும்... சோனியாகாந்தி சொல்லாததும்

தீவுகளாக சிதறிக்கிடக்கும் திமுக கூட்டணிக்கட்சிகள் சென்னை தீவுத்திட லில் ஒரே மேடையில் திரண்டு பிரச்சாரம் செய்துள்ளன. இருந்தாலும் காங்கிரசில் உள்ள கோஷ்டிகள் ஒன்றாகச் சேரவில்லை. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் சோனியா காந்தி பங்கேற்ற அந்தக்கூட்டத் தை புறக்கணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வரவேற்புக்குச் சென்ற ஈவிகேஎஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலுவை மிரட் டித்தான் பாஸ் பெற்று விமான நிலையத்திற் குள் சென்றுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் சோனியா காந்தியே நேரில் வந்து காங்கிரசின் அனைத்து கோஷ்டிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை நடத்தலாம். பாதுகாப்புக்கு ராணுவத்திடம் முன்கூட்டியே சொல்லிவைப்பது நல்லது.

மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்

அன்புமிக்க மாண்புமிகு உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர், மன்னிக்கவும்... உங்களுக்கு இப்படியெல்லாம் அழைத்தால் பிடிக்காதல்லவா! உங்களுக்குப்பிடித்த மாதிரியே அழைக்கிறேன். அன்புமிக்க அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி அவர்களுக்கு,

ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?

கதாநாயகன் வில்லனாகிய கதை

2006 சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கதாநாயகன் என வர்ணித்தனர்.

அதில் ‘சொன்னதைச் செய்வோம் ; செய்வதைச் சொல்வோம்’ என்று வாய் ஜம்பம் அடித்தனர்.

சாதித்த சாதனைகளாக தமிழர் களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. தமிழ்ச் செம்மொழி ஆக்கப் பட்டது. நோக்கியா யூனிட் துவக்கப் பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும் திட்டம் அமலாக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அறிக்கை அமலாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் தரப்பட்டது. 55 லட்சம் ஏக்கர் நிலம் தரப்படும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என பல சாதனைகளை சாதித்து விட்டதாகவும் இன்னமும் சாதிக்க உள்ளதையும் தெரிவிக்கப்பட்டது.

மின் வெட்டு : தி.மு.க அரசே குற்றவாளி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 10,214 மெகாவாட் டாகும். நடைமுறையில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அதிகபட்ச அளவு 8000 மெகாவாட்டாகும். சுமார் 2000 மெகாவாட் பற்றாக்குறை உள்ள வாரியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுகிறது. மின்சார பற்றாக்குறையினால் மின் வெட்டு, அதையொட்டி ஏற்படும் பாதிப்பு கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்கள் துவங்கி விவசாய உற்பத்தி வரையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை ஓரளவிற்கேனும் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அரசிற்கும் மின்சார வாரிய நிர்வாகத் திற்கும் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள்

2006 மே மாதத்தில் நடந்த சட்டமன் றத் தேர்தல் முடிந்த கையோடு, அக்டோப ரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென் னை மாநகராட்சியில் ஆளும் திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டமும், ரவுடி களைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி இஷ்டத்திற்கு வாக்களித்துக் கொண்டதும், சினிமா பாணியில் பட்டாக் கத்திகளோடு டாடா சுமோ கார்களில் எம்எல் ஏக்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதும், வாக்காளர்களை ஓட்டுப் போட முடியாமல் தடுத்து ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றியதையும் மறக்க முடியுமா?

நக்கீரன் மெகா சர்வே முடிவு கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே!

‘ஜெயிக்கப்போவது யார்? ‘முந்துவது யார்?’ என்று தேர்தல் சீசனுக்கு ஏற்ப பரபரப்பைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது வியாபாரத் தந்திரமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளைத் துல்லியமாக கணிக்கிறோம் என்ற பெயரில் தனது ஆசைகளையே முடிவுகளாகவும், தனது ஆளும் கட்சி விசுவாசத்தையே கணிப்புகள் என்றும் நக்கீரன் வாரஇதழ் செய்து வருகிறது.

காப்பி அடியுங்களேன், ப்ளீஸ்!

தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

உடனே, திமுக எம்.பி., கனிமொழி, திமுக அறிக்கையைப் பார்த்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரிக்கிறது என்று அண்மையில் பேசியிருக்கிறார். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிதானே உரத்த குரல் எழுப்பி வருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே, கீழே என்று இலக்கு வைத்துப் பிரிக்காமல், அனைவருக்கும் ரேசன் (ருniஎநசளயட சiபாவ வடி கடிடின) என்பதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் தேசிய அளவில் இயக்கம் நடததுவதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மத்திய அரசு முறையான உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர மறுப்பதால், மாநில அளவில் செய்வதற்கான முயற்சியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது.

‘என்ன உறவோ, என்ன பிரிவோ!’

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள் கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளா தாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையி லும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பது தான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தர வாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறு வனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்!

1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் ‘ஐந்தாம் தர டீ’ போன்றது!

“காங்கிரஸ் ‘ஐந்தாம் தர’ டீ போன் றது”. இது விசித்திரமான தலைப்பாகத் தோன்ற லாம். காங்கிரஸ் கட்சி பற்றி மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் எப்பொழுதுமே குறை சொல் பவர்கள் தான்! ஆனால் காங்கிரஸை இவ்வ ளவு மோசமானதாக வர்ணித்த சிறப்புக்குரிய வர்கள் இடதுசாரிகள் அல்ல. கலைஞர் நாள் தோறும் பேச்சிலும், எழுத்திலும் யாரைத் தன் னுடைய ஆசான் என்று குறிப்பிடுகிறாரோ, அந்த ஆசான் தான், அதாவது திமுக தலை வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் காங் கிரஸைப் பற்றி 1.2.1962 ல் ‘நம் நாடு’ இதழில் வெளிவந்த தனது உரைக்கு இந்தத் தலைப் பைக் கொடுத்திருக்கிறார்!

இன்றைய கார்ட்டூன்