அம்பானியின் ஆடம்பர வீடு!

       உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித்தந்துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மின்வெட்டு: அரசு செய்ய வேண்டியவை


தமிழகத்தை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலின் உறைவிடமாக செயல்பட்டது. இது தமிழக மின்சார வாரி யத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களின் ஊர் மாறுதல், பதவிஉயர்வு போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளில் இருந்து, மின்வாரிய செயல்பாட்டுக்கு அடிப்படை தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருள களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன.

இன்றைய கார்ட்டூன்