விவசாயிகள் தற்கொலை : அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் தொடர்வதாய் பறைசாற்றுகின்றனர். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை காணலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் முது கெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவ சாயத்துறை பல்வேறு ஆண்டுகளாக கடும்நெருக்கடிகளைச் சந்தித்து வருவது நாம்அறிந்த ஒன்று. இந்த நெருக்கடிகள் மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் தொடக்கத்தி லிருந்தே பெருகி வருகின்றன என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஒரு புறம் வேளாண்நெருக்கடிகளும் மறுபுறம் அவ்வேளை களில் உதவ வேண்டிய அரசின் செயல்படாத தன்மை மட்டுமல்லாது விவசாயி களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும் விவசாயிகளை விரக்தியின் விளம்பில் தள்ளுகின்றன. இதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாட் டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்!

விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல் :1.ஜோதிபாசு/மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)2. கிருஷ்ண சின்கா/ காங்கிரஸ் (பீகார்)3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)4. ஷேக் அப்துல்லா/ தேசிய மாநாடு (காஷ்மீர்)5. பி.சி.ராய்/ காங்கிரஸ்.(மேற்கு வங்கம்)6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)7. லால்டெங்கா/ மிசோ தேசிய முன்னணி (மிசோராம்)8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்)9.மாணிக் சர்க்கார்/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா)10. என். ரெங்கசாமி /என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)இந்த பட்டியல் உருவாக்கியதில் உள் ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :8 தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல் பட்டதும்.8மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.8 எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.8 எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.

சிறந்த இந்தியா உருவாக தேர்தலைப் பயன்படுத்துவோம்

பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இப்போது தேர்தல்களுக்கு நீண்ட காலம் திட்டமிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 முடிய ஐந்துவாரங்களில் ஒன்பது கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகஎண்ணிக்கையிலானதாகும். தேர்தல்நடத்திட நீண்டகாலம் திட்டமிடப்பட்டிருப் பதற்கு சிலர் மத்தியிலிருந்து சில முறையீடுகள் இருந்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 முதல்329ஆவது பிரிவுகளின் கீழ் “நாடாளுமன் றத்திற்கான அனைத்துத் தேர்தல்கள் குறித்தும் மேற்பார்வை, தேர்தல் வாக்காளர் பட்டி யல்களைத் தயார் செய்வதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்தும் விதம் ஆகியவை குறித்து’’ தேர்தல் ஆணையம் மட்டுமே அதிகாரம் படைத்திருக்கிறது. எனவே, நாட்டிலுள்ள வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துவாக்காளர்களும் நியாயமாகவும் நேர்மை யாகவும் வாக்களிக்கக்கூடிய விதத்திலும், அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்திலும் தேர் தலை நடத்திட வேண்டியதும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குட்பட்ட கடமையாகிறது. நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, தேர்தல்களை சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என கமுக்கமான முறையில் தகவல்களைப் பெறக்கூடிய அதி காரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும், அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்தகைய இடங்களில் அமைதியான முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடுவதற்காக, அந்த இடங்களுக்கு தேவையான அளவிற்குப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றிருக்கிறது.

இன்றைய கார்ட்டூன்