போடி மாலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போடி மாலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பலவீனமாகும் 2ஜி வழக்கு- யாரைக் காப்பாற்ற?

நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(ஊஹழு).

ஜமீன் பாண்டி டீக்கடை

குரங்கணி சாலையின் முதல் வளைவில் இறங்குகிற போதே கவனித்தான் சேகர். டீ கடை இன்னும் திறந்துதான் இருந்தது. புங்க மர நிழலில் இரண்டுகார்கள் நின்றிருந்தது. யாராவது ரியல் எஸ்டேட்காரர்களாய் இருக்கும் என யூகித்தான். தேசிய நெடுஞ் சாலையாய் அறிவித்த பின் பூதாகரமாய் வளர்ந்து கொண்டிருக்கிற ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டங்கரடு, விளைநிலம், தோப்பு தோட்டம் என பேதமின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
மேலப்பரபு பக்கம் நிலம் பார்க்க வருகிற வியாபாரிகள் புரோக்கர்கள் அமர்ந்து பேச, குரங்கணி மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாக சாந்தி செய்ய மா, தென்னை, இலவு, காப்பி என பீச்சாங்கரை வரை விரிந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி உழைப்பாளிகள் சிறு விவசாயிகள் சிறிது இளைப்பாற தோதான இடமாக ஜமீன்பாண்டி டீ கடை இருந்தது. கூரை வேய்ந்தது போல் இடம் வலமாய் வளர்ந் திருக்கும் புங்கமரமும் வேம்பும் தார்ச்சாலை வரை படர்ந்து குளுமை தந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு சரணாலயம் போல் விளங்கியது. இதற்கும்மேல் இந்தப்பக்கம் வருகிற புரோக்கர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு போக காரணமும் இருந்தது. டீ கடையை ஒட்டி சமதளமாய் விரிந்திருக்கும் ஜமீன்பாண்டிக்குச் சொந்தமான தோப்பு.

இன்றைய கார்ட்டூன்