-பேராசிரியர் ஆர். சந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
-பேராசிரியர் ஆர். சந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூகோளவியல் ஆண்களின் துறையா?

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென் றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

மொழிகளின் மரணம்

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

இன்றைய கார்ட்டூன்