தமிழில்: ச.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழில்: ச.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறந்த இந்தியா உருவாக தேர்தலைப் பயன்படுத்துவோம்

பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இப்போது தேர்தல்களுக்கு நீண்ட காலம் திட்டமிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 முடிய ஐந்துவாரங்களில் ஒன்பது கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகஎண்ணிக்கையிலானதாகும். தேர்தல்நடத்திட நீண்டகாலம் திட்டமிடப்பட்டிருப் பதற்கு சிலர் மத்தியிலிருந்து சில முறையீடுகள் இருந்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 முதல்329ஆவது பிரிவுகளின் கீழ் “நாடாளுமன் றத்திற்கான அனைத்துத் தேர்தல்கள் குறித்தும் மேற்பார்வை, தேர்தல் வாக்காளர் பட்டி யல்களைத் தயார் செய்வதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்தும் விதம் ஆகியவை குறித்து’’ தேர்தல் ஆணையம் மட்டுமே அதிகாரம் படைத்திருக்கிறது. எனவே, நாட்டிலுள்ள வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துவாக்காளர்களும் நியாயமாகவும் நேர்மை யாகவும் வாக்களிக்கக்கூடிய விதத்திலும், அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்திலும் தேர் தலை நடத்திட வேண்டியதும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குட்பட்ட கடமையாகிறது. நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, தேர்தல்களை சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என கமுக்கமான முறையில் தகவல்களைப் பெறக்கூடிய அதி காரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும், அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்தகைய இடங்களில் அமைதியான முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடுவதற்காக, அந்த இடங்களுக்கு தேவையான அளவிற்குப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றிருக்கிறது.

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள். 

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும். 

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி

நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

இன்றைய கார்ட்டூன்