பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்-இல் சங்க அங்கீகாரத் திற்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி முதல் தேதியன்று நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல், இதுவரை நான்குமுறை நடந் துள்ளது. 2002ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தல் நீங்கலாக, மற்ற மூன்று தேர்தல்களிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாகை சூடி “ஹாட்ரிக்” அடித்துள்ளது. 2,47,000 ஊழியர்கள் வாக் களித்த 2009 தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு எதிராக ஏஐடியுசி சார்புடைய என்எப்டிஇ சங்கமும் ஐஎன் டியுசியில் இணைந்துள்ள எப்என்டிஓ சங்கமும் இணைந்து ஒரு ‘மெகா’ கூட் டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப் பினும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகத் தான வெற்றி பெற்றது.

5வது சங்க அங்கீகாரத் தேர்தல்

நடக்கவுள்ள 5வது சங்க அங்கீகாரத் தேர்தலில் 2, 29,906 ஊழியர்கள் வாக்க ளிக்க உள்ளனர். மாதா மாதம் சந்தா கொடுக்கும் 1,24,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இருப்பினும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மெத்தனமாக இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், நாக் பூரில் விரிவடைந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தி அதில் தனது தேர் தல் பணிகளை திட்டமிட்டது. இதன்படி கடந்த மூன்று மாதங்களாக நாடு முழு வதும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்தேர்தலில் தங்க ளது தோல்வி உறுதியென புரிந்து கொண்ட என்எப்டிஇ மற்றும் எப்என்டிஓ சங்கங் கள், தேர்தலுக்குத் தடை வாங்க நீதிமன் றங்களுக்குப் படையெடுத்தன. இதிலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

இன்றைய கார்ட்டூன்