வ.இராஜமாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.இராஜமாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்படுமா?

கடந்த ஜனவரி 27ம் தேதியன்று திருச்சி கலையரங்கத்தில் நான்காவது மாநில நிதிக் குழு ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் 4வது மாநில நிதிக்குழு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள பணிந்தர் ரெட்டி ஐஏஎஸ் தலை மையிலும், நிதிக்குழு மானிய உறுப்பினரும் செயலாளருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, திருச்சி, திண்டுக் கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி நகராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப் பப்பட்டு கலந்து கொண்டேன்.

இன்றைய கார்ட்டூன்