-உ.வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
-உ.வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காப்பி அடியுங்களேன், ப்ளீஸ்!

தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

உடனே, திமுக எம்.பி., கனிமொழி, திமுக அறிக்கையைப் பார்த்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரிக்கிறது என்று அண்மையில் பேசியிருக்கிறார். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிதானே உரத்த குரல் எழுப்பி வருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே, கீழே என்று இலக்கு வைத்துப் பிரிக்காமல், அனைவருக்கும் ரேசன் (ருniஎநசளயட சiபாவ வடி கடிடின) என்பதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் தேசிய அளவில் இயக்கம் நடததுவதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மத்திய அரசு முறையான உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர மறுப்பதால், மாநில அளவில் செய்வதற்கான முயற்சியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது.

இன்றைய கார்ட்டூன்