தமிழில்: ச. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழில்: ச. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திரிபோலியில் ஓர் அட்டூழியம்

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது.

சுமைகள், துன்பங்களைத் தரும் கொள்கையை தடுத்திட...

நாட்டின் தலைநகர் தில்லியில், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்தார் கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் லட்சக்கணக் கான தொழிலாளர்கள், தங்களது ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து வந்தார்கள். 1. விலை வாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து; 2. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்து; 3. கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் ஊக்கு விப்பு உதவிகள் தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்; 4. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தேசிய நிதியம் உருவாக்கு; 5. பட் ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதை நிறுத்திடு.

இன்றைய கார்ட்டூன்