பாப்பா உமாநாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாப்பா உமாநாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இதுதானம்மா புரட்சி வாழ்க்கை...

அன்போடும் பாசத்தோடும் தோழர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட தோழர் பாப்பா உமாநாத் அவர்கள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவியவர், பெண்ணுரிமைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்து அதற்காக வாழ்நாளெல்லாம் அரும்பணியாற்றிய ஒரு பெண்ணுரிமைப் போராளி. மக்கள் கூட்டங்களில் அவர் நாவன்மையும் உத்வேகமும் மிக்க பேச்சாளி. எழுத்தாற்றல் மிக்கவர்.

பாப்பா உமாநாத் கடந்த டிசம்பர் 17 அன்று திருச்சியில் காலமானார். அவருக்கு செம்மலர் தனது நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. அவர் செம்மலரில் அதன் ஆரம்ப ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதி உதவினார். “திருமணமும் குடும்ப வாழ்க்கையும் (1971 டிச.), “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” (1972, மார்ச்) “வாழ்வை வளமாக்க கடவுளால் முடியாது”(1973, நவ.) “குழந்தைகள் பற்றிய கண்ணோட்டம்” (1973 டிச.), “பெண் விடுதலை வேண்டும்” (1974 செப்.) ஆகிய தலைப்புகளில் அவர் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் அவை.

1972 மார்ச் செம்மலரில் “எனது அன்னையைப் பற்றிய சில நினைவுகள்” என்ற தலைப்பில் பாப்பா உமாநாத் எழுதிய கட்டுரையொன்று இங்கே வெளியிடப்படுகிறது. அடக்குமுறைக்கும் தாக்குதலுக்கும் அஞ்சாத வீரம் - தியாகம் - அர்ப்பணிப்புமிக்க ஒரு வாழ்க்கையின் உணர்ச்சிமிகு எழுத்துவடிவமாகும் இது.

இன்றைய கார்ட்டூன்