பா. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூடப் பழக்கங்களை ஒழிக்க வந்த முன்னோடி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் சமு தாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்திய மாமனிதர். அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னோடியாக இருந்ததைப் போலவே மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிந்தனை யாளர்கள் சிலர் அரசியல் தளத்தில் மட்டுமே இயங்குவர். சிங்காரவேலரோ இவ்விரண்டு தளங்களிலும் இயங்கியவர்; இதில் வியப்பு என்னவென்றால், இவ்விரண்டு தளங்களி லும் அவர் முன்னோடியாக இருந்ததுதான்; இதில் மற்றொரு வியப்பும் உண்டு; அரசியல் உணர்வு வேர்பிடிக்கும் தொடக்கக் காலத்தில் அவர் இவ்வாறு இருந்ததுதான் அந்த வியப்பு; இந்த வியப்பின் ஆளுமை தான் சிங்கார வேலர்.

இன்றைய கார்ட்டூன்