செ.கவாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.கவாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்


தனியார் பள்ளிகளில் கோவிந்தராஜன் குழு பரிந்துரையை அமலாக்காவிடில், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு புறம் அரசு அறிவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தான்தோன்றித்தனமாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில பள்ளிகள் ஒருபடி மேலே சென்று அடுத்த கல்வியாண்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்வதும், ‘சொன்ன’ கட்டணத்தை செலுத்த மறுக்கும் பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூக தொண்டாக‘ மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு நிர்வாகம் துணைபோவதோடு, காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகாமலும் பார்த்துக் கொள்கின்றன.

இன்றைய கார்ட்டூன்