தமிழகத்தை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலின் உறைவிடமாக செயல்பட்டது. இது தமிழக மின்சார வாரி யத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களின் ஊர் மாறுதல், பதவிஉயர்வு போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளில் இருந்து, மின்வாரிய செயல்பாட்டுக்கு அடிப்படை தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருள களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன.
“மினி’போபால் இனி வேண்டாம்!”
எண்டோசல்பான். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். தானிய பயிர்கள், காபி, பருத்தி, பழப்பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், முந்திரி, காய்கறிகள் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
திரிபோலியில் ஓர் அட்டூழியம்
மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
