சமகால அரசியலும் இலக்கிய அரசியலும்

பொதுவாக தேர்தல் வந்துவிட்டால் நவீன தமிழ் இலக்கிய உலகில் இடதுசாரி இலக்கியவாதிகளிடம் பிற இலக்கியவாதிகள் இந்தத்தடவை யாரைப் பதவியில் அமர்த்தப் பாடுபடப்போறீங்க என்பதில் துவங்கி எவ்வளவு பெரிய புரட்சிகரமான தலைவர்களை எல்லாம் இப்படி சீட்டுக்காக அலைய வச்சீட்டிங்க என்பது வரைக்கும் பல கேள்விகளை வருத்தங்களை முன்வைப்பார்கள். புதுசாகக் கேட்பவர்களுக்கு அடடா இவ்வளவு அக்கறையாக நம்ம கட்சியைப்பத்திக் கரிசனமாப் பேசறாங்களே என்று தோன்றும். தோழர் சுர்ஜித் எல்லாம் எவ்வளவு பெரிய தியாகத்தின் அடையாளம்? அவரைப்போயி... வாசல்ல கொண்டுபோயி நிறுத்தீட்டிங்களே என்று ஒரு மூத்த அமைப்புசாரா இலக்கியவாதி ஒருமுறை என்னிடம் கேட்டபோது எங்களோடு பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளம் தோழர் ஒருவர் கேவிக்கேவி அழுதுவிட்டார். நாம கூட நம்ம தலைவர்களின் தியாகத்தை இப்படி மதிச்சதில்லியே என்றுகூட அச்சமயத்தில் நமக்குத் தோன்றிவிடும்.

கலைஞரின் இளைஞனும் தமிழக இளைஞனும்

காலம் போன காலத்திலேயாவது இளைஞர்களைப்பற்றின கவலை கலைஞருக்கு வந்து அதற்காக ஒரு படமும் எடுத்திட்டாரே என்று நம்ம்ம்பி சொந்தக் காசில் டிக்கட் வாங்கி இளைஞன் படத்துக்குப் போய் - எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்க இவிங்க ரொம்ப நல்லவிங்க என்று சொல்லிச் சொல்லி உள்ளே வைத்து அவர்கள் கொடுத்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு கடைசி வரை இருக்க முடியாமல் வெளியே அலறி அடித்து ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்.அந்த சோகக்கதையைச் சொல்லி வாறேன் கொஞ்சம் கேளுங்க..

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி

நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

இன்றைய கார்ட்டூன்