சிறுபான்மையினர் வளர்ச்சியும் இடது முன்னணி அரசும்

எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மை யினர் உரிமைகளைப் பாதுகாத்திடாமல் ஜன நாயகத்தை ஒருங்கிணைத்து விரிவாக்கிட முடியாது. சிறுபான்மையினருக்கு சம உரிமை கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் உலகின் பலநாடுகளிலும் இன் றளவும் தொடர்கிறது. இப்போது அது வெகு ஜன இயக்கங்களின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் மாறி இருக்கிறது. சிறுபான்மை யினருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே ஓர் அரசு தன் கடமை களை முழுமையாகச் செய்ததாகக் கூற முடியும்.

கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு

சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

திமுவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : மேலூருக்குள் காரில் போன ரூ. 5 கோடி எங்கே?

மதுரையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்க ளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் திமுகவினரை விட்டு விட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்துத்துறை களிலும் தோல்வியடைந்த திமுக, எப்படி யாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வகை யில் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கியுள்ளது.

இன்றைய கார்ட்டூன்